Share

Mar 3, 2009

இன்றைக்கு

இலைகளில் தொங்கியபடி

யோசித்துக்கொண்டிருக்கும் மழைத்துளிகளே !

யோசனைகளால் பயன் என்ன ?

கனம்கொண்டீரேல்

மண்ணின் தாகம் தீர்க்கிறீர்

இல்லையெனில்

கதிரவன் கொய்து உண்ணும்

கனிகள் ஆகிறீர் .

- தேவதேவன்

..

பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் ஆறு பேர் சுடப்பட்டிருக்கிறார்கள் . ஐந்து போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டு இறந்து போய் விட்டார்கள்.பல ஆண்டுகளுக்கு முன் ஒலிம்பிக் விளையாட்டுகளின் போது இஸ்ரேல் வீரர்கள் கொலை செய்யப்பட்ட நிகழ்வு நினைவிற்கு வருகிறது .

பாகிஸ்தான் ,இலங்கை இரண்டு நாடுமே இந்தியாவின் நிம்மதியை கெடுத்து கொண்டிருக்கும் தேசங்கள் . இரண்டு நாடுமே DETERIORATION என்பதன் உருவகங்கள் .இந்தியாவின் கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் ஒருவேளை பாகிஸ்தான் போயிருந்தால் ..? போவதாக தானே திட்டம் . ஏனோ அப்படி ஒருவேளை போயிருந்தால் ஒருவர் கூட உயிரோடு மிஞ்சியிருக்கமாட்டார்கள் என்று தான் யோசிக்கும்போது விபரீதமாக தோன்றுகிறது .லாகூரில் நடந்த இந்த பயங்கரவாத தாக்குதல் வழக்கம் போல் டிவி மீடியாக்களுக்கு தீனி . செய்தி பற்றி விரிவை இன்னும் பாகிஸ்தான் அரசு வெளியிட விரும்பவில்லை . எந்த அளவுக்கு தாக்குதல் . படு காயமா ?..மரணக்காயமா ?...'தாக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில்' என்ற மொட்டையான செய்தி பல பாதை யூகங்களுக்கு இந்தகாலைநிமிடத்தில் வழி வகுத்து உள்ளது .

மதியம் ஒரு மணிக்கு மேல் "Injured players discharged from hospital."என்ற என் டி டி வி செய்தி சற்றே ஆசுவாசத்தை தருகிறது .

Hot discussion!
Will Cricket in Pakistan ever be the same again?

யோசனைகளால் பயன் என்ன ?

பயங்கரவாதம் பற்றி பல அறிக்கைகள் பல நாடுகள் மீண்டும் கொடுக்க மீண்டும் ஒரு வாய்ப்பு .

பயங்கரவாதத்திற்கு பல முகமூடிகள் .

False face must hide what false heart does know

-Shakespeare in “Macbeth”

இந்த தாக்குதலை இருபத்தைந்து நிமிடம் நடத்திய பன்னிரண்டு தீவிரவாதிகளும்உயிருடன் தப்பி விட்டார்களாம்!

4 comments:

  1. மிகவும் வேதனையான சம்பவம்...தீவிரவாதத்தின் கோர தாண்டவம் !

    ReplyDelete
  2. Very sad. What wrong the players have done? The whole world is becoming unfit for living.

    ReplyDelete
  3. It has always been said that cricket brings people closer.. but now it seems it is not the case anymore..
    terrorism has put its foot even in games.. what a shame...
    Is there any way we can stop such acts of terrorism..?
    I think the answer to this question is not in the near future..!

    ReplyDelete
  4. //ஏனோ அப்படி ஒருவேளை போயிருந்தால் ஒருவர் கூட உயிரோடு மிஞ்சியிருக்கமாட்டார்கள் என்று தான் யோசிக்கும்போது விபரீதமாக தோன்றுகிறது .//

    Chills and jitters.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.