இலைகளில் தொங்கியபடி
யோசித்துக்கொண்டிருக்கும் மழைத்துளிகளே !
யோசனைகளால் பயன் என்ன ?
கனம்கொண்டீரேல்
மண்ணின் தாகம் தீர்க்கிறீர்
இல்லையெனில்
கதிரவன் கொய்து உண்ணும்
கனிகள் ஆகிறீர் .
- தேவதேவன்
..
பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் ஆறு பேர் சுடப்பட்டிருக்கிறார்கள் . ஐந்து போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டு இறந்து போய் விட்டார்கள்.பல ஆண்டுகளுக்கு முன் ஒலிம்பிக் விளையாட்டுகளின் போது இஸ்ரேல் வீரர்கள் கொலை செய்யப்பட்ட நிகழ்வு நினைவிற்கு வருகிறது .
பாகிஸ்தான் ,இலங்கை இரண்டு நாடுமே இந்தியாவின் நிம்மதியை கெடுத்து கொண்டிருக்கும் தேசங்கள் . இரண்டு நாடுமே DETERIORATION என்பதன் உருவகங்கள் .இந்தியாவின் கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் ஒருவேளை பாகிஸ்தான் போயிருந்தால் ..? போவதாக தானே திட்டம் . ஏனோ அப்படி ஒருவேளை போயிருந்தால் ஒருவர் கூட உயிரோடு மிஞ்சியிருக்கமாட்டார்கள் என்று தான் யோசிக்கும்போது விபரீதமாக தோன்றுகிறது .லாகூரில் நடந்த இந்த பயங்கரவாத தாக்குதல் வழக்கம் போல் டிவி மீடியாக்களுக்கு தீனி . செய்தி பற்றி விரிவை இன்னும் பாகிஸ்தான் அரசு வெளியிட விரும்பவில்லை . எந்த அளவுக்கு தாக்குதல் . படு காயமா ?..மரணக்காயமா ?...'தாக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில்' என்ற மொட்டையான செய்தி பல பாதை யூகங்களுக்கு இந்தகாலைநிமிடத்தில் வழி வகுத்து உள்ளது .
மதியம் ஒரு மணிக்கு மேல் "Injured players discharged from hospital."என்ற என் டி டி வி செய்தி சற்றே ஆசுவாசத்தை தருகிறது .
Hot discussion!
Will Cricket in Pakistan ever be the same again?
யோசனைகளால் பயன் என்ன ?
பயங்கரவாதம் பற்றி பல அறிக்கைகள் பல நாடுகள் மீண்டும் கொடுக்க மீண்டும் ஒரு வாய்ப்பு .
பயங்கரவாதத்திற்கு பல முகமூடிகள் .
False face must hide what false heart does know
-Shakespeare in “Macbeth”
இந்த தாக்குதலை இருபத்தைந்து நிமிடம் நடத்திய பன்னிரண்டு தீவிரவாதிகளும்உயிருடன் தப்பி விட்டார்களாம்!


மிகவும் வேதனையான சம்பவம்...தீவிரவாதத்தின் கோர தாண்டவம் !