Share

Aug 21, 2008

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் ....

இன்றைக்கு காலையில் செய்தித்தாள் பார்த்தேன் . ரொம்ப சந்தோசம் . அப்பாடா !என்ன ஒரு ஆசுவாசம் ! அற்புதமான செய்தி .

முதல்வருக்கு தி.மு.க விருது .

அவரது கட்சி அவருக்கு விருது அளிக்கிறது . "பெரியார் விருது " உடனே உங்களுக்கு கோபம் வரும் . எங்கள் ஸ்டாலினுக்கு விருது இல்லையா ?... பொறுங்கள் . ஸ்டாலினுக்கு " கலைஞர் விருது " . இப்போது திருப்தியா ? அவசரபடுகிறீர்களே. சரி கட்சிக்காகவும் நாட்டுக்காகவும் உழைத்த ஆற்காடு வீராசாமி க்கு "அண்ணா விருது "

எப்போ எப்போ குடுக்கிறார்கள் என்று பறக்கிறீர்கள் . வருகிற செப்டம்பர் மாதம் 21தேதியில் திருச்சி தி.மு.க முப்பெரும் விழாவில்இந்த விருதுகளை கட்டாயம் கொடுத்து விடுகிறார்கள் . இனி நமக்கெல்லாம் ஒரு கவலை இல்லை . நிம்மதியாய் வாழலாம் .

சரி . ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் மட்டும் நமக்கென்ன கவலை ? மன்னார்குடிக்காரர்கள் சகல கௌரவங்களும் பெறுவார்கள் . அவர் கட்சி என்ன குடும்ப கட்சியா ? பிள்ளையா குட்டியா .அதெல்லாம் இல்லை . தன் உடன் பிறந்த அண்ணன் குடும்பத்தை கூட கவனிக்க மாட்டார் .

சரி விஜய காந்த் கட்சி வந்தால் கூட நாம் பயப்பட தேவையே இல்லை . உறுதியாக அவரது துணைவியாருக்கும் , துணைவியின் தம்பியும் சிறப்பான முறையில் பல பெருமைகளை அடையப்போவதில் எந்த சந்தேகமும் கிடையாது .

பாட்டாளி மக்கள் கட்சி பற்றி நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டுமா என்ன ? நமக்கு கூடவே போனசாக தாலிபன் ஆட்சியின் கீழ் வாழும் பெருமையும் கிடைக்கும் மகிழ்ச்சியை இப்போதே அனுபவிக்க தயாராகிவிட்டீர்கள் என்பதை சொல்லவே வேண்டியதில்லை .

காங்கிரஸ் ஆட்சி தப்பித்தவறி அடுத்து வரும்பட்சத்தில் பல குட்டி சமஸ்தானங்கள் , கோஷ்டியாக வளர்ந்து நாட்டை செழுமைப்படுத்தி விடுவார்கள் .

இப்படியே.... சரி போதும் .

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.