Share

Aug 2, 2008

நீலாம்பரியுடன் ஷேக்ஸ்பியர்

இந்த வார குமுதத்தை (ஆகஸ்ட் ஆறு , 2008 ) புரட்டினேன் . திரைப்பட நடிகை ரம்யா கிருஷ்ணன் தனக்கு பிடித்த விஷயங்கள் பற்றி குறிப்பிட்டிருந்தார் . ஒரு விஷயம் என்னை மிகவும் கவர்ந்து விட்டது . ரம்யா கிருஷ்ணனுக்கு பிடித்த விஷயங்களில் ஒன்று

ஷேக்ஸ்பியர் நாவல்கள். எனென்றால் அவருக்கு பிடித்த நாவலாசிரியர் : ஷேக்ஸ்பியர்
எல்லோரும் ஜோரா ஒரு தடவை தலையை பிச்சிக்காம கையை தட்டுங்க .
பாவம் நீலாம்பரி ! அவருக்கு ஹாம்லெட், மாக்பெத் ,கிங் லியர் எல்லாம் நாவல்கள் . குமுதம் தான் தவறுதலாக அப்படி பிரசுரித்து விட்டது எனில் குமுதம் ஆசிரியர் குழு பரிதாபம் .
They must hold a candle to their shame .

1 comment:

Note: Only a member of this blog may post a comment.