Share

Aug 18, 2008

Incomplete "DON JUAN"........Fractional "HYPERION".....

ஓரு கனவு ... ஓரு பயம்...ஒருவேளை இது தான் வாழ்க்கையோ - ஜோசப் கான்ராட் தான் இப்படி கவலைப்பட்டான் .

பைரன் எழுதிய கடைசி காவியம்" டான் ஹூவான் " . அவனுடைய மரணம் இதை முடிக்க விடாமல் சதி செய்து விட்டது .கீட்ஸ் கூட "ஹைபீரியன்" காவியத்தை நிறைவு செய்யவில்லை. ஆனால் அதற்கு காரணம் "மில்டன் பாணியில்"இருப்பதாக எண்ணி கீட்ஸ் பயந்து , திருப்தி இல்லாமல் நிறுத்தினான் . மரணமும் அவனுக்கு அப்படி ஒன்றும் அப்போது ரொம்ப தூரத்தில் இல்லை என்பது வேறு விஷயம் .

டான் ஹூவான் கரு என்ன ?வரையறை செய்வதென்றால் ஹூவானின் அப்பா அவனுக்கு சொல்லுவதில் தான் ." பெண் உனக்கு மூன்று விஷயங்களை தருகிறாள் . உயிர் , ஏமாற்றம் , மரணம் ."

ஹூவான் பெண்களால் துரத்தப்படுகிறான் ......தமிழில் கொச்சையாக சொல்வதென்றால் பல பெண்கள் அவன் வாழ்வில் குறுக்கிடுகிறார்கள் .....

"Truth is stranger than fiction!"- இந்த பிரபலமான மேற்கோளை டான் ஹூவானில் தான் பைரன் சொன்னான் . அப்புறம் எல்லோரும் உபயோகித்து தேய்ந்து போன வரி இது .

ஹைபீரியன் காவியத்தில் பின்பகுதியில் அப்பல்லோ சூரியக்கடவுள் ( இலாகா - இசை, கலாசாரம் ) பீச்சில் உட்கார்ந்து அழுது கொண்டிருப்பான் . பெண் கடவுள் நிமொசின் ( இலாக்கா ஞாபக சக்தி ) வந்து இவனிடம் விசாரிப்பாள் . தன் சக்தி தெரிந்தும் உபயோகிக்க அறியாமல் இருப்பதற்காக அழுது கொண்டிருப்பதாக அப்பல்லோ சொல்வான் . நிமொசின் கண்களுக்குள் தன் பார்வையை செலுத்துவதன் மூலம் அப்பல்லோ தன் இலாக்காக்களுக்கான அதிகாரத்தை அடைகிறான் . சக்தி உபயோகம் ஆரம்பம் . இந்த இடத்தில் Celestial..என்று கீட்ஸ்

அரைகுறையாக அந்தரத்திலேயே வாக்கியத்தை முடிக்காமலே .....................நிறுத்தி இருக்கிறான் .

ஆனால்நிறைவு பெறாத இந்த இரண்டு காவியங்களுமே சாதனைகள் தான் என்பது தான் இவற்றின் சிறப்பே.

Perhaps life is Just that….a dream and a fear ....

2 comments:

  1. டான் ஹுவான் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.