Share

Aug 8, 2008

பிரம்ம சூத்ரம்

"கலைமகள் சரஸ்வதி யின் அடக்க சுபாவம் அவளுடைய சாஸ்த்ர ஞானத்தால் தானே. அலைமகள் லக்ஷ்மியும் மலைமகள் பார்வதியும் சற்றே adamant ஆக தோற்றம் தருகிறார்கள் . மிடுக்கு தோரணை கர்வம் எல்லாம் கலந்த தெய்வங்கள் . படிப்பு எப்போதும் ஒரு முதிர்ச்சியை தருகிறதால் தான் சரஸ்வதி அமைதியாகவும் மென்மையாகவும் இருக்கிறாள் "
- நண்பர் Angel ராஜ்குமார் (இவர் வீணை வாசிப்பதில் தேர்ச்சி பெற்றவர் ! கலைவாணியின் மேல் அபிமானம் கொள்வது இயல்பு தானே. மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் வேங்கடபதி யின் உறவினர். )ஒரு அம்மையாரிடம் இப்படி சொல்லியிருக்கிறார்.
அந்த அம்மணி இதை உடனே மறுத்து சொன்னாராம் . " சரஸ்வதியின் சாந்தமும் அடக்கமும் சாஸ்த்ர, கலை தேர்ச்சி யினால் வந்ததல்ல . அவள் கணவன் பிரம்மன் விஷேசமான சக்தி, அந்தஸ்து உடையவனல்ல என்பதனால் தான் . விஷ்ணுவும் பரமசிவனும், தேஜசும் அந்தஸ்தும் எட்டுக்கண்ணும் விட்டெரிகிற பராக்கிரமமும் உடையவர்கள் . அதனால் தான் லக்ஷ்மியும் , பார்வதியும் கர்வமும் , படாடோபமும் , தோரணையும் கொண்ட பெண் தெய்வங்களாக மிளிர்கிறார்கள் . சரஸ்வதியின் softness அவளுடைய கணவன் பிரம்மனின் அந்தஸ்து சார்ந்த விஷயம் ."


அரசியல் அதிகார பதவியில் , அரசு உயர்பதவியில் உள்ளவர்கள் , மிகப்பெரிய செல்வந்தர்கள் இவர்களுடைய மனைவிமார்களின் உளவியல் பின்னணி , சாதாரணர்களின் துனைவியர்களின் மன இயல்பையும் பற்றி என்ன ஒரு யதார்த்தமாக ,மிக அழகாக அந்தஅம்மையார் அனுபவநோக்கில் Angelராஜ்குமார் அவர்களுக்கு விளக்கியிருக்கிறார் .

ஒரே குடும்பத்தில் சகோதரர்களுக்கு வாழ்க்கை படும் ஓரகத்திகளிலேயே அந்தஸ்து , பொருளாதாரம் வேறுபடும்போது பார்வதி,லக்ஷ்மி , சரஸ்வதி அம்சங்களாக நமக்கு பார்க்க கிடைக்கிறார்களே .

3 comments:

  1. சிறந்த பதிவு.வித்தியாசமான நோக்கு.

    அன்புடன்

    சூர்யா.

    ReplyDelete
  2. அருமை...அருமையான விளக்கம்...

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.