Share

Aug 28, 2008

No Regrets !

27-Aug-2008 15:47:00
நாகார்ஜுனன் said...
ராஜநாயஹம்! (இப்போது சரியாக எழுதியிருக்கிறேன்).உங்கள் blog நான் அவ்வப்போது வாசிப்பதுதான். பதிவுகள் சட்டென்று முடிந்துவிடுவதுதான் வருத்தம். நீங்கள் நிறைய எழுத வேண்டும். குறிப்பாக, வாசித்த புத்தகங்கள்-கால கட்டங்கள் பற்றி...

நாகார்ஜுனன் !

இதற்கு நான் பதில் எழுதுவதென்றால் நிஜமாகவே ஒரு சுய இரக்க புராணமே பாட வேண்டியிருக்கும் . பிலாக்கணம் சகிக்க முடியாது .

என்ன செய்ய .

எனக்கு ஆசை இருக்கிறது தாசில் பண்ண . அதிர்ஷ்டம் இருக்கிறது கழுதை மேய்க்க .

I have no regrets
I must accept my life unconditionally.

இன்னொரு விஷயம் . பத்தி எழுத்து எனக்கு பிடிக்கும் . Column writing என் Favourite .

வள வள என்று செக்கு மாட்டு விமரிசனம் செய்யக்கூடாது என்பதும் என் கொள்கை .

இதில் உள்ள குறிப்புகளை நான்கு, ஐந்து சேர்த்து படித்துப்பார்த்தால் ஒரு பத்தி கட்டுரை யாக அமைந்திருப்பதை அறிய முடியும் .

என்னுடைய நீண்ட கட்டுரை "ஊட்டியில் தளையசிங்கத்திற்கு நடந்த தொழுகை " கூட பகுதி பகுதியாக அடுத்தடுத்து பிரித்து பார்த்தால் நான்கைந்து" பத்தி எழுத்து " ஆகவே அமையும். வேறு எப்படி சென்சார் செய்து போட்டாலும் அப்படிதான் . அதனாலேயே திண்ணை, காலச்சுவடு , தமிழ் சிறகு , பதிவுகள் என வேறு வேறு இதழ்களிலும் வெவ்வேறு மாதிரியாக அமைந்ததை அனைவரும் அறிவார்கள் .

அப்போது திண்ணையில் வெளியான பகுதி, காலச்சுவடில் வெளியான பகுதி இரண்டையும் படித்து விட்டு , இவை இரண்டுமே ஒரே கட்டுரையின் இரு வேறு பகுதிகள் என தெரியாமல் ஒரு ஞான சூனியம் " திண்ணையில் வெளியான எதிர்வினைக்கும் காலச்சுவடு இதழில் வெளியான குறிப்புகளுக்கும் பாட பேதம் இருக்கிறது " என முட்டாள் தனமாக எழுதியிருந்தது !

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.