Share

Aug 26, 2008

ழார் பத்தாய் .... ழான் ஜெனே ......

ழார் பத்தாய்(Georges Bataille) எழுதிய Story of the Eye நாவலை பற்றி ஒரு சின்ன குறிப்பு எழுதலாமா என நினைத்ததுண்டு . இதை படித்த போது தோன்றியது .பத்தாய் நல்ல வேளை இதை புனை பெயரில் எழுதினார். சும்மா தொண்ணூறு வருடத்திற்கு முன் பிரான்சாகவே இருந்தாலும் இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் .அப்போது புனை பெயர் அவசியம் தான். பத்தாய் மீது தூற்றுதல் , அருவருப்பு எல்லாம் இருந்தது தான் .
இந்த நாவலை யாரோ eureka (?!)தமிழில் மொழிபெயர்த்து தொடராக நாகார்ஜுனன் இணையத்தில் வெளி வருகிறது . உண்மையில் மொழிபெயர்ப்பு என்றால் இது தான் மொழிபெயர்ப்பு . தமிழில் Story of the Eye வருகிறது என்றால் Miracles never cease in this world ! ஒரு பெரிய புரட்சி !
சென்ற 17 தேதி யில் கௌதம சித்தார்த்தனை சந்தித்தேன் ! ழான் ஜெனே(Jean Genet) யின் “Thief Journal” நாவலை தேவ தாஸ் மொழிபெயர்ப்பில் பிரசுரம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார் . நான் 1989 ல் அதை படித்த சுவாரசியமான கதையை சொன்னேன் . ஆமாம் அந்த நாவலை நான் படித்ததை பற்றியே ஒரு கதை எழுதலாம் .
ழார் பத்தாய் - story of the eye
ழான் ஜெனே - “Thief Journal”
இரண்டு பிரஞ்சு நாவல்கள் தமிழில் வரப்போகின்றன . கலாச்சார காவலர்கள் வெந்து நூலாகபோகிறார்கள் பாவம்.
"கற்றது தமிழ்" பட விமர்சனத்தில் ழார் பத்தாய் மேற்கோள்கள் பலவற்றை சாரு நிவேதிதா குறிப்பிட்டிருந்தார். ராசலீலா நாவலில் பத்தாய் பற்றி சாரு வின் குறிப்புகளை காணலாம் .
கௌதம சித்தார்த்தனை சந்தித்த போது அவருடன் கற்றது தமிழ் இயக்குனர் ராம் இருந்தார் . அந்த படம் சம்பந்தமான நிகழ்ச்சிக்காகத்தான் இருவரும்
திருப்பூர் வந்திருந்தார்கள் . நான் இன்னமும் "கற்றது தமிழ் " பார்க்கவில்லை .கட்டாயம் பார்ப்பதாக உத்தேசம் . இயக்குனரின் பேச்சு இந்த முடிவுக்கு வர வைத்திருக்கிறது .
குற்றவுணர்வை சொல்லாமல் இருக்க முடியவில்லை .FELLINIயின் eight and half வாங்கி வைத்திருக்கிறேன் . இன்னும் அதை பார்க்க முடியவில்லை . திரைப்படம் பார்க்க நேரம் வேண்டும் . மன நிலையும் ஓரளவு சீராக இருக்க வேண்டும் .


கௌதம சித்தார்த்தன் திரைப்பட முயற்சியிலிருக்கிறார் .
"புதுமைப்பித்தன் துவங்கி கௌதம சித்தார்த்தன் வரை" கோடம்பாக்கம் முயற்சி தொடர்கிறது ....."
நீட்ஷே யின் “The eternal recurrence of the same events” நினைவிற்கு வருகிறது. சரி
கௌதம சித்தார்த்தனாவது ஜெயிக்க வேண்டும் .

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.