Share

Aug 12, 2008

அபினவ் பிந்த்ரா சாதனையும் கருணாநிதியின் சோதனையும்

ஒலிம்பிக்கில் அபினவ் பிந்த்ரா( இலுப்பம்பூ சக்கரை! )இந்தியா வுக்கு தங்கம் வாங்கித்தந்த சந்தோசத்தை அனுபவித்த அதே நேரத்தில் ஒரு சோக செய்தியையும் கேட்கும் துர்பாக்கியம் ஏற்பட்டதை சொல்லாமல் இருக்க முடியவில்லை.
பழைய பல்லவி தான்.ஆனால் பாவம் இந்த முறை இவர்களிடம் ஷேக்ஸ்பியர் சிக்கி விட்டார். 
தி.மு.க பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா  'திரு. கருணாநிதி அவர்கள் ஷேக்ஸ்பியரை தாண்டிபோய்விட்டார். அதனால் அவருக்கு உடனே நோபெல் பரிசு உடனே உடனே தந்தேயாக வேண்டும்' என்று பிரகடனபடுத்தியுள்ளார். கிட்டத்தட்ட நோபல் கமிட்டிக்கு விடப்பட்டுள்ள மிரட்டல்!

The possession of power , unavoidably spoils the free use of reason
-Immanuel Kant


எதிர்காலத்தில் எப்படியெல்லாம்கருணாநிதி மீசையில் மண் ஒட்டவில்லை என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டியிருக்கும். அதற்கு சில டிப்ஸ் தர விரும்புகிறேன் .
நோபல் கமிட்டீ பரிசு கொடுக்க தவறிய எழுத்தாளர்கள் வரிசையில் கருணாநிதியையும் சேர்த்து நோபல் கமிட்டீ யின் திறமையின்மையை, மெத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுவது அவரது மகத்துவத்தை வெளிப்படுத்தும்.
லியோ டால்ஸ்டாய், ஜாய்ஸ், போர்ஹே ஆகிய மகத்தானவர்களுக்கும் நோபல் பரிசு கிடைக்காததை சுட்டிக்காட்டி கருணாநிதியை அவர்கள் தோளோடு நிறுத்தி கழக கண்மணிகளுக்கு ஆறுதல் சொல்லலாம்.

இவ்வளவு ஏன் ? மஹாத்மா காந்தியின் பெயர் அவர் உயிரோடு இருந்த காலத்தில் ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பதுகளில், நாற்பதுகளில் அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஐந்து முறை சிபாரிசு செய்யப்பட்டும் நோபல் கமிட்டீ காந்தியாருக்கு பரிசு தர மறுத்த அவலத்தை சுட்டிக்காட்டி கழகத்தின் இரண்டாம் மட்ட தலைவர்களும், மூன்றாம் மட்டமான தலைவர்களும் தங்களை தேற்றிகொள்ளலாம்.

1 comment:

  1. அரசியலில் இதெல்லாம் சகஜம்.. தலைவர்களைப் பாராட்டுவது ஒன்றும் புதுதில்லையே...

    இப்படிப்பட்ட பாராட்டுகளால் நெளிவது தலைவர்கள் தான்... ஹி..ஹி... பயம் தான் காரணம் இப்படி எழுத.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.