Share

Aug 27, 2008

இலட்சிய நடிகர் S.S.R

பெரியகுளம் தலைமை தபால் நிலையத்தில் வேலை பார்த்துகொண்டிருந்த போது ஒரு நாள் இலட்சிய நடிகர் S.S. ராஜேந்திரனின் உடன் பிறந்த தம்பி பாஸ்கர் தபால் ஆபீஸ் வந்து என்னிடம் "தம்பி , இன்று மதியம் 12 மணிக்கு வீட்டிற்கு வந்து விடுங்கள் . அண்ணன் மதுரையிலிருந்து கிளம்பி இங்கே வருகிறார் .போன் இப்ப வந்தது ." என்றார் . எனக்கு சந்தோசம் . சென்னை இலிருந்து மதுரைக்கு ஏதோ நிகழ்ச்சிக்காக வந்தவர் பெரியகுளத்தில் இருக்கும் அப்பா வையும் தம்பி யையும் பார்க்க S.S.R வருகிறார் . அவரை சந்திக்க எனக்கு ஒரு வாய்ப்பு.

மதியம் 12 மணிக்கு ஆபீஸ் PERMISSIONபோட்டு விட்டு பாஸ்கர் வீட்டுக்கு போய் விட்டேன் . S.S.R தகப்பனார் சேடபட்டி சூரிய நாராயண தேவருக்கு அப்போது வயது ஒரு 75 இருக்கும் . என்னிடம் நன்றாக பேசுவார் .

ஓவியர் TROTSKY MARUDHU வின் தம்பி திலகர் மருது என் பால்ய நண்பன் . ஓவியர் மருது ஒரு முறை பெரியகுளம் வந்திருந்த போது S.S.R உடைய இன்னொரு தம்பி கதிர் வேல் மகன் பாண்டியன் உடன் என் அறைக்கு வந்து என்னிடம் பேசிகொண்டிருந்திருக்கிறார் . உண்மையில் ஓவியர் மருது வின் அப்பா மருதப்பனும் ( இவர் ஒரு ஞானி ) நானும் மதுரையில் தல்லாகுளத்தில் ரோட்டில் சந்தித்தால் கூட இரண்டு மணி நேரம் பேசி கொண்டிருப்போம் . அவர் தான் எனக்கு என் பதினெட்டு வயதில், ரஸ்ஸல் எழுதிய “WHY I AM NOT A CHRISTIAN” நூலை படிக்க கொடுத்தவர் . மருது வீட்டில் ஒரு நூலகம் உண்டு . "இயேசுவின் மரணம் காஷ்மீரதிலே " என்ற ஒரு விசித்திரமான நூல் கூட அவரிடம் இருந்து வாங்கி நான் படித்திருக்கிறேன் . S.S.R க்கு இவர் சித்தப்பா . அதனால் தான் பெரியகுளத்தில் பாஸ்கர் எனக்கு அறிமுகம் . ஓவியர் மருதுக்கு S.S.R அண்ணன் முறை .

விஷயத்திற்கு வருகிறேன் . பாஸ்கர், அண்ணன் S.S.R வரபோகிறார் என்ற பதற்றத்தில் இருந்தார். சூரிய நாராயண தேவர் குழந்தை போல . நான் பாஸ்கர் கேட்பதற்காக HITS OF S.S.RAJENDRAN ஆடியோ கேசெட் கொடுத்திருந்தேன் .கேசெட்டை போட்டு கேட்பதற்காக என் டேப் ரேகார்டரையும் கொடுத்திருந்தேன் S.S.R காக டிஎம் எஸ் பாடிய பாடல்கள் தனி சிறப்புடையவை . அந்த பாட்டு எல்லாம் கேட்கும் போதே S.S.R அதற்கு பாவத்துடன் வாயசைப்பதை உணர முடியும் . "ரொம்ப நல்லா இருந்தது.இது மாதிரி ஒரு டேப் ரேகார்டேர் ஒன்னு வேணும் " என்று சூரிய நாராயண தேவர் சொல்லிகொண்டிருந்தார் . ஒரு போன் வந்தது அப்போது . பாஸ்கர் ஏமாற்றத்தோடு என்னிடம் " அண்ணன் அவசரமாக சென்னை திரும்பி போகிறாராம் . அடுத்த முறை பெரியகுளம் வருகிறேன் என்று சொல்லிவிட்டார் தம்பி " என்றார் .

அன்று தவறிபோனவாய்ப்பு ! காலம் ஓடி விட்டது .

அதன் பிறகு இன்று வரை இலட்சிய நடிகரை நான் பார்த்ததில்லை . பார்க்க வாய்ப்பு கிடைத்ததே இல்லை . இப்போது S.S.R வயது 86.

இந்த விஷயங்களை ஓவியர் மருது இங்கே திருப்பூரில் ஒரு நிகழ்ச்சிக்கு இரண்டு வருடம் முன் வந்திருந்த போது நான் மத்திய அரிமா சங்க மேடையிலேயே பேசினேன் . எம்.எல்.ஏ . கோவிந்தசாமி அவர்கள் மருது பற்றி நான் பேசிய விஷயங்கள் பிரமிப்பாய் இருப்பதாக குறிப்பிட்டார் .

3 comments:

  1. nice incident.really i'm proud abt u.

    ReplyDelete
  2. நல்ல பதிவு..

    இயேசுவின் மரணம் காஷ்மீரதிலே " என்ற ஒரு விசித்திரமான நூல்"" ..

    ஆமாம் .. ஒஷோ பல புத்தங்களில் எழுதி இருக்கிறார்.

    ஒஷோவை.தாங்கள் வாசித்ததுண்டா..??

    சூர்யா
    சென்னை
    butterflysurya@gmail.com

    ReplyDelete
  3. Chennai Surya
    Of Course! who doesn't read Osho?

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.