Share

Dec 2, 2008

அரசியல்வாதிகளின் மும்பை கலவர அரசியல்

1.சந்தீப் உன்னிகிருஷ்ணன் தந்தை செய்த காரியம் மிகுந்த சிறப்புடையது என்றால்

கேரளா முதல்வர் 85வயது அச்சுதானந்தன் தேசத்திற்காக தன் இன்னுயிர் நீத்த புனிதனின் தந்தையை 'மெண்டல் ' என்று அவமானப்படுத்தியிருப்பது மிகவும் கேவலமானது .

அச்சுதானந்தன் பதவி விலக வேண்டும் என்று பலரும் வற்புறுத்தியுள்ளனர் .

அச்சுதானந்தன் சம்பவம் நடந்த உடனே சந்தீப் வீட்டிற்கு போய்விடவில்லை .கேரளாவில் பலரும் அவரது மெத்தனத்தை சுட்டிக்காட்டிய பின்னே மெதுவாக பெங்களூர் கிளம்பி போயிருக்கிறார். அரசியல்வாதிகள் துக்க வீட்டிற்கு வருவதே கூட ஒரு பகட்டு அரசியல் நடவடிக்கை . அந்த சம்பவத்தை நான் பலமுறை NDTV, TIMES TODAY அது ஒளிபரப்பப்படும்போது துவங்கி பார்த்தேன்.புத்திர சோகம் என்பது எத்தனை கொடுமையானது . உலகின் அத்தனை சோகங்களிலும் தாங்கவே முடியாதது புத்திர சோகம் . தன் பிள்ளையை தேசத்திற்காக பலிகொடுத்து விட்டு அப்படிப்பட்ட சோகத்தில் உள்ள தந்தை அந்த நேரத்தில் தன்னை வரவேற்று கௌரவிக்கவில்லை என்பதற்காக அவரை பைத்தியக்காரன் என ஏசுவது காட்டுமிராண்டிதனமில்லையா ? பதவி திமிர் இல்லையா . எனக்கு ஒரே வருத்தம் தான் . ஒரு முதிர்ந்த கம்யுனிஷ்ட் தலைவர் இப்படி அநாகரீகமாக நடந்து கொண்டு வெறுப்புக்கு உள்ளாகி விட்டாரே என்பது மட்டும் தான் .

My empathy goes to Sandeep’s father.

அரசியல்வாதிகள் தேச துக்கத்தை கூட தன்முனைப்புடன் பார்ப்பவர்கள் என்பதைத்தான் அச்சுதானந்தனின் அவதூறு நிரூபித்திருக்கிறது .

2. பாலிவுட் ராம்கோபால்வர்மாவும் , மஹாராஷ்ட்ர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கும் தாஜ் ஹோட்டல் பார்க்க, 'சினிமா வியாபாரரீதி' யாகதேசிய சோகத்தை தன்முனைப்புடன் (எரிகிற வீட்டில் பிடுங்கியவரையில் லாபம் . மும்பை கலவர பின்னணியை வைத்து அழகான ஹிந்திதிரைப் படம் மக்களுக்காக எடுக்க வேண்டாமா . லோகேசன் பார்க்க வேண்டாமா ? )அணுகியது அரசியல் வாதிகள் மீதான சந்தீப் உன்னிகிருஷ்ணனின் தந்தையின் அவமரியாதைநடவடிக்கை சரியானது,நியாயமானது என்பதை நிரூபித்து விட்டது .

ச்சீ ச்சீ ....

................................

டிசெம்பெர் மூன்றாம் தேதி

1.கேரளா முதல்வர் அச்சுதானந்தன் தரமற்ற தன் பேச்சுக்காக பகிரங்க மன்னிப்பு கேட்டிருக்கிறார் .

2.மகாராஷ்ட்ரா முதல்வர் பதவி விலகுவது உறுதியாகியிருப்பதாக தெரிகிறது .

9 comments:

  1. நீங்கள் அந்த சம்பவத்தைப் பார்க்காமல் எழுதியிருக்கிறீர்கள்.. சந்தீப் ஒரு தியாகி என்பதை மறுப்பதற்கில்லை ஆனால் அதற்காக அவர் தந்தை நடந்து கொண்ட விதத்தை ஏற்கமுடியாது. ஒரு மாநில முதல்வரை “stinking dogs" என்று விளிப்பது - அதுவும் அவர் வேலை மெனக்கெட்டு கேரளாவிலிருந்து பெங்களூருக்கு ஆறுதல் சொல்லவே வந்திருக்கிறார் - நியாயமா?

    அப்படி அவர் அரசியல்வாதிகளையே வெறுப்பவரென்றால் ஏன் எடியூரப்பாவும் அவர் கட்சியினரும் வந்திருந்த போது இந்த அறச்சீற்றத்தை கான்பிக்கவில்லை? தொலைக்காட்சியில் அவர் நடந்து கொண்ட விதத்தைப் பார்த்தாலே தெரிகிறது அவர் ஒரு சைக்கோ என்று.

    ReplyDelete
  2. Disgusting is a milder word to describe these politicians.

    ReplyDelete
  3. மகாராஷ்ட்ர முதல்வர் செய்த தவறுக்கு கேரளா முதல்வர் எப்படி பொறுப்பேற்க முடியும்? வீட்டிற்கு துக்கம் விசாரிக்க வந்த ஒருவரை நாயே போடா என்று விரட்டியடித்த ஒருவருக்கு நீங்கள் வக்காலத்து வாங்குவது ஆச்சரியமாக இருக்கிறது.

    ReplyDelete
  4. சந்தீப்பின் தந்தையை சைகோ என்றும் அவர் செய்தது தவறு என்றும் சொல்பவர்கள் செத்துப் போங்கள். உங்கள் தந்தை எப்படி ரீயாக்ட் செய்கிறார் என்று பார்க்க வேண்டும். சாதாரணமாக கொழுப்பெடுத்து சாவும் உங்களுக்காகவே உங்கள் தந்தை, தாய் ஆவேசப்படும் போது அந்த வீரத் திருமகனின் தந்தை அப்படி நடந்து கொண்டது ரொம்பவே குறைவு தான். செருப்பைக் கழட்டி அடித்திருக்க வேண்டும். இனிமேல் மக்கள் அதை பார்த்துக் கொள்வார்கள்.

    ReplyDelete
  5. Those who are by the side of Kerala CM will come to know about Sandeep Father's situation and upset, when your sons and daughter die at the age of 31 due to weak and corrupted politicians.......

    Cant the Kerala CM who is more than 60 years(guess), understand a situation of a father who lost his ONLY SON who is ONLY 31 years old......He can .....only if he had sent his son and daughter to army. If he is a true communist he would have done it.

    "Enimael makkal athai parthu kolvargal" They have done it they had hanged achuthananthan's photo on a dog. Alas........dog i avamana paduthitanagapa...........
    I feel pity about that dog.

    ReplyDelete
  6. "Anonymous :Cant the Kerala CM who is more than 60 years(guess)"

    Kerala CM is 85 years old, easily the oldest CM in our country, Kalaignar the close second oldest at 84 years old.

    ReplyDelete
  7. 'அறிஞர் ராஜநாயகம்' என்று திரு கி வேங்கட சுப்பிரமணியன் எழுதியதை நான் வழிமொழிகிறேன்.

    //1.கேரளா முதல்வர் மன்னிப்பு
    2.மகாராஷ்ட்ரா முதல்வர் பதவி விலகுவது//

    ReplyDelete
  8. டைம்ஸ் நௌ நிருபர் : உங்களை நாய் என்று திட்டியதைப் பற்றி நீங்கள் சொல்வது என்ன?

    அச்சுதானந்தன் : அவர் மகன் ஒரு மாபெரும் தியாகி. அப்படி இல்லாதிருந்தால் ஒரு நாய் கூட அவர் வீட்டுக்குப் போயிருக்காது.

    +++++++++++++++++++++++++++++++++++

    இதில் கேள்வியை மட்டும் எடிட் செய்து விட்டு பதிலை திரும்பத் திரும்ப ஒளிபரப்பிய டைம்ஸ் நௌ தொலைக்காட்சியின் நேர்மை தான் அச்சுதானந்தனை திட்டிக் கொண்டிருக்கும் அனைவரின் நேர்மையும்..

    - குமார்.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.