Share

Feb 21, 2009

Live dangerously

Live dangerously and you live right.
-Goethe

A man can stand anything except a succession of ordinary days.

- Goethe.

கடந்த சில நாட்களாக சென்னையிலும் , தமிழக நகரங்களிலும் நடக்கும் பயங்கர மயிர் கூச்செறியும் சம்பவங்களை பார்க்கும் போது 'கதே' சொன்ன மேற்கண்ட வார்த்தைகள் எனக்கு என்று இல்லை என் போன்ற மற்ற சாமானியர்களுக்கும் ,குடிமக்களுக்கும் நினைவில் வராமல் போயிருக்காது. நம் வாழ்வில் இனி சாதாரண நாட்களே கிடையாது போல் தெரிகிறது .சர்க்கஸ் கம்பி யில் நடப்பது போல தான் அனுதினமும் கழியும் போல .

சுப்ரமணிய சுவாமி தாக்கப்படும்போதே அவர் சாதியும் இழிவுபடுத்தப்படுகிறது . ஹைகோர்ட் ஹாலில் இது வரை இப்படி நடந்திருக்கிறதா .

மறு நாள் ஹை கோர்ட் வளாகத்தில் வக்கீல்களுக்கும் போலீசுக்கும் நடந்த யுத்தம் . நீதிபதி உள்பட படு காயம் .

நேற்று ஹைகோர்ட் வக்கீல்களும் , தமிழக ஏனைய நகர வக்கீல்களும் நடத்திய போராட்டங்கள்.

முதல்வரும் ,உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி, ஏனைய நீதிபதிகள் வக்கீல்களை தாடையை பிடித்து சமரசப்படுத்துவது ...சட்டம் எல்லோருக்கும் பொதுவல்லவா ?

வக்கீல்களுக்கு இவ்வளவு செல்லம் கொடுக்க வேண்டுமா ?

ஜெயலலிதா இப்போது சுப்ரமணிய சுவாமி தாக்கப்பட்ட போது பதறி ஹை கோர்ட்டில் இப்படி நடக்கலாமா என தன் கட்சி மகளிர் அணியினர் அன்று இதேஹை கோர்ட்டில் சுப்ரமணிய சுவாமிக்கு பாவாடையை தூக்கி காட்டியதை மறந்து அறிக்கை விடுவது ..

இனி எதிர்காலம் .... சட்டம் .. நீதி .. ஒழுங்கு ..

We have an awful time to be alive !

1 comment:

  1. well said.... living dangerously among dangerous people...

    or is it back to the days of 'survival of the fittest..!

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.