சாமிக்கண்ணு அந்த கால சிரிப்பு நடிகர் . வசனம் பேசுபோது ஒரு நக்கல் நையாண்டியுடன் பேசுவார் .
பாமா விஜயம் படத்தில்
'வாங்க '
சாமிக்கண்ணு ' வரமாட்டேன் ' -வேகமாக கோபமாக வருவார் .
'உட்காருங்க '
"உட்கார மாட்டேன் " -கோபமாக உட்கார்வார் .
இவருக்கு பிற்காலத்தில் வாய்ப்பு மகேந்திரன் 'முள்ளும் மலரும்' 'உதிரிப்பூக்கள் ' 'ஜானி 'படங்களில் கொடுத்தார் . பாலு மகேந்திரா ' அழியாத கோலங்கள் படத்தில் வாய்ப்பு கொடுத்தார் .
இவரை பற்றி பலரும் அறியாத செய்தி :
பராசக்தி படம் ஆவதற்கு முன் நாடகமாக 1940களின் கடைசியில் நடிக்கப்பட்டதுண்டு . அப்போது அதற்குவசனம் கருணாநிதி அல்ல . அந்த பராசக்தி நாடகத்தில் "குணசேகரன் " பாத்திரத்தை நடிகர் சாமிக்கண்ணு தான் ஏற்று கதாநாயகனாக நடித்தவர் என்றால் இன்று எல்லோருக்கும் ஆச்சரியமாக இருக்கும் . ஏன் ஏன்றால் சிவாஜி கணேசன் திரையில் " பராசக்தி " படத்தில் செய்த பாத்திரம் தான் குணசேகரன் .
இன்னொரு செய்தி :
கே பாலச்சந்தர் ஒரு முறை குறிப்பிட்டு பத்திரிகையில் அந்த காலத்தில் ஒரு செய்தி நான் படித்திருக்கிறேன் . சாமிக்கண்ணு நாடக நடிப்பை பார்த்து தான் தனக்கு நாடகத்தின் மீது ஆர்வம் வந்ததாக பாலச்சந்தர் குறிப்பிட்டிருக்கிறார் .


வேட்டி அவுருதுய்யா, வேட்டி அவுருதுய்யா என்று சாமிக்கண்ணு பேசும் வசனம் ரஜினி நடித்த போக்கிரி ராஜா படத்தில் ரொம்ப பிரபலமான வசனம்.