Share

Feb 2, 2009

ராயல் சமாச்சாரம்

வீரபாண்டிய கட்டபொம்மனின் இன்றைய வாரிசு ஜெக வீரபாண்டிய பீமராஜா ! ஜோசியம் சொல்லி பிழைக்கிறார் . இவர் மகன் வேன் டிரைவர் . மகனுக்கு பாஞ்சாலங்குறிச்சி பூங்கா வாட்ச்மேன் அரசாங்க வேலையாக கிடைக்குமா, அரசாங்க பியூன் வேலை கூட கிடைக்காதா என்று பீமராஜா தவிக்கிறார் .கட்டபொம்மனை தூக்கில் போட்ட பிறகு அவர் மனைவிக்கு சிறையில் ரெட்டை குழந்தைகள் பிறந்தன . அந்த இரண்டு ஆண் குழந்தைகளின் வம்சாவழி பீம்ராஜா !

பல நூற்றாண்டு முன் ராஜாவாய் இருந்த கட்டபொம்மன் வம்சாவழியின் நிலை தான் இப்படி என்றால் இன்றைக்கு

ராஜாவாக இருக்கிற பாரக் ஒபாமா தம்பி கதை அதை விட பரிதாபம் .

உலகத்துக்கே முதல் மனிதன் அந்தஸ்தில் பாரக் உசைன் ஒபாமா . இவர் தகப்பனார் இவர் தாயை விவாகரத்து செய்த பிறகு இன்னொரு திருமணம் செய்து அந்த மாற்றாம் தாய் பெற்றமகன் ஜார்ஜ் உசைன் ஒபாமா . இவர் கென்யாவில் இப்போது நைரோபியில் ஒரு குடிசைப்பகுதியில் வசித்து வருகிறார் . தொழில் மெக்கானிக் .அமெரிக்க ஜனாதிபதி யின் சகோதரனான இந்த ஜார்ஜ் ஒபாமா மரிஜுவானா என்ற போதைபொருள் வைத்திருந்தார் என்று கென்யாவில் கைது செய்யப்பட்டிருக்கிறார் .

'பாரக் ஒபாமாவுக்கு ராஜயோக ஜாதகம் . அவருடைய தம்பி ஜார்ஜ் ஒபாமாவுக்கு அவயோக பாவ ஜாதகம் . '

- இங்கே உள்ளூரு ஜோஷியர் சொல்றாரு !

"விதி செய்யும் விளைவினுக்கே வேறு செய்வார் புவி மீது உளரோ ?"

-- பாரதி 'பாஞ்சாலி சபதத்தில்' சொல்றாரு!

4 comments:

  1. மிகவும் வருத்தமாய் இருக்கிறது. இக்கால தலைவர்கள் அதனால்தான் என்னவோ 10 தலைமுறைக்கு சொத்து சேர்கிறார்கள் :-)

    ReplyDelete
  2. பாவம் என்ன செய்ய,
    ஒரு நடிகன் அல்லது நடிகையின் வாரிசு என்றால் முதல்வர் ஒடோடிபோய் உதவி செய்திருப்பார். வீரபாண்டிய கட்டப்பொம்மன் நடிப்புக்காக தூக்கில் தொங்கவில்லையே?

    ReplyDelete
  3. கட்டபொம்மன் சரிதையில் வரும்
    இன்னொரு பிரபலத்தின் வாரிசுகள்.
    நெல்லையில் சந்திப்பு பேருந்து நிலையத்தில்
    வரிசையாகக் வளாகம் கட்டி
    வாடகைக்கு விட்டிருக்கிறார்கள்.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.