Share

Feb 28, 2009

வன்னி ரத்தகண்ணீர்


RP Sir

I saw this letter from Vanni on one of the websites..heart wrenching...

வன்னியிலிருந்து வலியின் விழிம்பில் ஓர் கடிதம்.-

"நலமுடன் இருக்கிறீர்களா? உலகத்தமிழர்களே!"உங்களில் ஒருவன் (கண்கள் நிறையக் கனவுகளோடும், துள்ளி விளையாடிய கால்களில் ஷெல்அடித்தரணங்களின் வலியோடும்அகதி முகாமில் வாடும்புலம்பெயர்ந்த ஈழக்குழந்தையின் கிழிந்துபோன சட்டைப்பைகளில்இருந்த உடைந்தபென்சிலின்ஒட்டுத்துண்டில்இந்தக்கடிதம்எழுதப்படுகிறது)நலமுடன்இருக்கிறீர்களா? உலகத்தமிழர்களே?குண்டு விழாதவீடுகளில்,அமெரிக்காவுடனானஅணுகுண்டுஒப்பந்தத்தில்கையெழுத்திடுவதுபற்றி அளவளாவிக்கொண்டிருப்பீர்கள்,இடைஞ்சலான நேரத்தில்கடிதம் எழுதுகிறேனா?எனக்குத் தெரியும்,என் வீட்டுக் கூரையில்விழுந்தசிங்களவிமானத்தின்குண்டுகள் என்னைப் போலபல்லாயிரக்கணக்கானதமிழ்க்குழந்தைகளைஅநாதை ஆக்கியபோது, நீங்கள் எதாவதுநெடுந்தொடரின்நாயகிக்காகக் கண்ணீர்விட்டுக்கரைந்திருப்பீர்கள்......என் அம்மாவும்அப்பாவும்அரைகுறையாய் வெந்துவீழ்ந்தபோது, உங்கள்வீட்டுவரவேற்ப்பறைகளில்அரைகுறை ஆடைகளுடன்அக்காமாரெல்லாம்ஆடும் " மஸ்தானா,மஸ்தானாவின்"அரையிறுதிச் சுற்றுமுடிவுக்குவந்திருக்கும்.அண்ணனும், தம்பியும்நன்றாகப்படிக்கிறார்களா? அம்மா,அப்பாவின்மறைவுக்குப் பின்னால்,எனக்குத் தலைவாரிவிட்டு, பட்டம்மாவீட்டில்அவித்த இட்டலிகொடுத்துப் பள்ளிக்குஅனுப்பிய அண்ணனும்இப்போது இல்லை,நீண்ட தேடலுக்குப்பின்னர் கிடைத்த அவன்கால்களை மட்டும்மாமாவும்,சித்தப்பாவும்வன்னிக் காடுகளில்நல்லடக்கம்செய்தார்கள்......அப்போதே எழுத வேண்டும்என்று ஆசைதான் எனக்கு,நீங்கள் இலங்கைகிரிக்கெட்அணியின் இந்தியச்சுற்றுப் பயணத்தை, இரவுபகல் ஆட்டமாய்ப்பார்த்திருந்தீர்கள்....அதனால்தான் எழுதவில்லை.........ஒலிம்பிக் தீபத்தின்சுடர்களை உலகம்முழுவதும், என்னைப்போலஒரு மலைநாட்டு திபெத்சிறுவனும், அவன்இனத்துப்பெரியவரும்சந்து பொந்தெல்லாம்மறித்துத் தடுத்தபோது,எனக்கு உங்கள் நினைவுவந்தது.....அதுமட்டுமல்ல,இந்திய அரசுகளின்உதவியோடு, இலங்கைராணுவத்திற்கு நன்றிசொல்லும்திரைப்படச் சுருளின்பிரதிகளும் நெஞ்சில்நிழலாடியது.ஒரு பக்கம், இரங்கற்பாஎழுதிக் கொண்டு,மறுபக்கம், நவீனஆயுதங்களைஅனுப்பி வைக்கும்உங்கள் கூட்டணித்தலைவர்கள் எல்லாம்நலமா தமிழர்களே?இன்னொரு முறைஆயுதங்கள் அனுப்பும்போது மறக்காமல் ஒருஇரங்கற்பாஅனுப்புங்கள், சாவின்மடியில் எங்களுக்குஒருதமிழ்க்கவிதையாவதுகிடைக்கும் அல்லவா?இன்னொரு தமிழகத்தின்மறைவான இடத்தில்நீங்கள் இலங்கைராணுவத்திற்குபயிற்சி அளிக்கும்போது, குழந்தைகளையும்,கர்ப்பிணிப்பெண்களையும்வலியின்றிக் கொல்வதுபற்றி ஒருவகுப்பெடுத்துவிடுங்கள். கொஞ்சம்பாவமாவதுகுறையட்டும்.......மாஞ்சோலையில் ஒரு மாலைநேரத்தின் மங்கலானவெளிச்சத்தில்,தம்பியின்பிஞ்சு உடல்நான்கைந்தாய்சிதறடிக்கப்பட்ட அந்தகோர நாளில் நாங்கள்எல்லாம் கூட்டமாய்அழுது கொண்டிருந்தோம்,குழந்தைகள் இருக்கும்பள்ளிக்கூடங்களைதேடிக் கண்டு பிடித்துகொலைவெறியோடு உங்கள் "நேசநாட்டு" விமானங்கள்குண்டு மாரி பொழிந்தபோதுநீங்கள் இந்தியவிடுதலையின் பொன்விழாக்கொண்டாட்டங்களுக்கானகுறுஞ்செய்திவாழ்த்துக்களில்களித்திருந்தீர்கள்,உலகத்தொலைக்காட்சிகளின்நீங்கள் பார்த்துமகிழும் முதன் முறைத்திரைப்படங்கள்தடை படுமே என்று தான்அப்போது எழுதவில்லை,எங்கள் இனப் போராளிகளைகொன்று குவித்து,நிர்வாணமாக்கி, இறந்தஉடலுக்குக்கொடுக்கின்ற இறுதிமரியாதை இல்லாமல், எம்இறப்பை எள்ளி நகையாடியஉங்கள் "சார்க்"கூட்டாளியின் கொடியமுகம் கண்ட போதே எழுதிஇருக்க வேண்டும்.அப்போது நீங்கள் கட்சிமாநாடுகளில் கவனமாய்இருந்தீர்கள்,பெண்களின்இடுப்பில் பம்பரம்விட்ட களைப்பில் கட்சிதுவக்கியகேப்டன்களின்பின்னால்அணிவகுத்துநின்றீர்கள், நீங்கள்போட்ட வாழ்ககோஷங்களின்இரைச்சலில்எங்கள் நிஜக்கேப்டன்களின்வீரமரணம் கேள்விக்குறியாய்க் கலைந்துபோனது,தமிழர்களே?அப்பாவின்வயிற்றை அணைத்துக்கொண்டு, செப்பயான்குளத்தில்முங்கி எழுந்தநினைவுகளை மனதில்சுமந்து கொண்டு, வாரம்இரண்டு முறைஅடிகுழாயில் அடித்து,அடித்து கொஞ்சமாய்ஒழுகும் தண்ணீர்நின்றுபோவதற்குள் ஓடி வந்துகுளித்து விடுகிறேன்அகதி முகாமில்.முகாமின், தகரத்தடுப்புகளின்இடைவெளியில் தெரியும்பள்ளிக்கூடமும்,அதிலிருந்து வரும்மதிய உணவின் வாசமும்,அம்மாவின் மடியில்இருந்து,எப்போதும் கிடைக்கும்அன்பையும் எண் பழையவாழ்வையும் நினைவுபடுத்தும்.ஆயினும் பாழும் வயிறு,பசி கலந்த வலி கொடுத்துபாய்ந்து ஓடிவரிசையில்நிறுத்தி விடும்,அளந்துகொடுக்கப்படும்அவமானச்சோற்றுக்காய்.......அப்போதெல்லாம் எழுதத்தோன்றும் எனக்கு, ஆனால்நீங்கள் பீஸாக்கடைகளின்,வட்ட மேசைகளில்அமர்ந்து ஆங்கிலம்பேசிக்கொண்டிருந்தீர்கள்,எழுதத்தோன்றவில்லை.....எனக்கு....அமைதியாய் விடியும்பொழுதும்,அழகாய்க் கூவும்குயிலும்,தோகை விரிக்கும்மயிலும்,காதல் பேசும்கண்களும்,தாத்தா பிடித்தமீன்களில் அம்மா வைத்தகுழம்பும்,தாமரை மலரின் தாள்கள்பறிக்க நாங்கள்குதித்த குளங்களும்,பக்கத்து வீட்டுப்பாண்டி அண்ணன் வேடுகட்டக் குவித்து வைத்தமணலும்,அதில் சங்கு பொறுக்கிவிளையாடிய என்தம்பியின் கால்தடங்களும்,கருவேலன் காடுகளில்பொன் வண்டு பிடித்த என்பழைய நினைவுகளும்,இனிமேல் எனக்குக்கிடைக்கவே கிடைக்காதாஉலகத் தமிழர்களே?எல்லோரும் சேர்ந்துமூட ஞானிக்கு எழுதியநீண்ட கடிதமெல்லாம்வேண்டாம்அண்ணா, என்கேள்விகளில் எதாவதுஒன்றுக்கு, உங்கள்வீட்டில் கிழித்துஎறியப்படும்நாட்காட்டித்தாள்களின்பின்புறமாவது பதில்எழுதுங்கள்,உலகத் தமிழர்களே........ஏனெனில் நீங்கள்எழுதப் போகும் பதிலில்தான் ஒரு இருண்டு போனஇனத்தின்விடுதலையும், துவண்டுபோன அகதிகளின்வாழ்க்கையின்மறுபிறப்பும்இருக்கிறது.வலி கலந்தநம்பிக்கைகளுடன்,உங்கள் தொப்புள்கொடிஉறவு,தமிழீழத்திலிருந்து! முடிந்தால் உங்கள் ஊர் பத்திரிகைகளுக்கும், நண்பர்களுக்கும் இக்கடிதத்தை அறியத்தாருங்கள்!

regards

Kannan


Saturday, 28 February, 2009


2 comments:

  1. I couldn't read beyond few lines before stopping to wipe out my tears.

    Is that all what we can do ?

    ReplyDelete
  2. No sir.., we can also organize an one day hunger strike to show our concern for our people in Sri Lanka and make sure to get the news published with photographs in the leading dailies so that it reaches all the people...!
    and rest in peace having done our part...!
    Sorry.. 'its getting late for my film show.. we can discuss this later....!'

    This is the current trend among
    our people sir... 'as long as I am not affected its not my problem.. there are others to look into the problem and so I am helpless..'

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.