Share

Feb 21, 2009

தெய்வாம்சமும் மிருகாம்சமும்

Sublimation and Transformation

போன்னி சாம்பர்லைன் என்ற எழுத்தாளர் எழுதிய சிறுகதை .'யூதாசின் முகம் ' என்ற தலைப்பு .


சிசிலிய நகரத்தின் தேவாலயத்தில் சுவர் ஓவியம் தீட்டும் வாய்ப்பு கிடைக்கபெற்ற ஓர் ஓவியர் பல ஓவியங்களை கோவில் சுவற்றில் வரைய ஆரம்பிக்கிறார் . குழந்தை ஏசு வின் ஓவியம் வரைய அவருக்கு மாசு மரு இல்லாத ஒரு முகத்தை தேடியிருக்கிறார் . ஒரு நாள் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவனை பார்க்கிறார் . அழுக்காக இருந்தாலும் அந்த பால் முகம் தான் அவர் தேடிய முகம் என்பதால் அந்த சிறுவனை அழைத்து கொண்டு போய் அவனுடைய அழகிய முகத்தை குழந்தை ஏசுவாக வரைகிறார் .

யூதாஸ் ஓவியம் அவருக்கு மிகப்பெரிய சவாலாகி விட்டது . ஏசுவை காட்டிகொடுத்த கயவன் முகம் ! பல வருடம் தேடியும் அவர் எதிர் பார்த்த தீய , காம , கொடூர முகம் கொண்ட பல மனிதர்களை அவர் காண நேர்ந்தும் ஓவியருக்கு யூதாஸ் முகம் என யாரையும் தேர்வு செய்ய இயலவில்லை .

வருடங்கள் ஓடி விட்டது .ஒரு நாள் வைன் குடிக்க பார் போயிருந்த போது ஒரு ஆள் 'வைன் , எனக்கு வைன் வேண்டும் ' என புலம்பியவாறே பார் வாசலில் விழுகிறான் . வைன் அருந்திகொண்டிருந்த ஓவியர் எழுந்து வந்து அவனை தூக்கி பார்க்கிறார் . ஆச்சரியம் ! அவர் எதிர்பார்த்த கொடூர ,பயங்கர முகம் கொண்டமனிதன் அவன் ! அதி பயங்கர மிருக முகம் .

'வா ! உனக்கு வைன் , உணவு ,உடை தருகிறேன் ' என அழைத்துக்கொண்டு போய் அவனையே யுதாசாக வரைய ஆரம்பித்தார் . இரவும் பகலுமாக வரைந்து கொண்டிருந்த நிலையில் அவன் அழ ஆரம்பித்தான் ." உங்களுக்கு என்னை தெரியவில்லையா ? என்னை தான் நீங்கள் பல வருடங்கள் முன் 'குழந்தை ஏசு'வாக வரைந்தீர்கள் . என்னை உங்களுக்கு இன்னுமா அடையாளம் தெரியவில்லை ?" தேம்பி தேம்பி அழுதான் .


2 comments:

Note: Only a member of this blog may post a comment.