Share

Dec 18, 2008

Carnal Thoughts-13

சாத்வீகம்


மனைவி மக்களை பிரிந்து வேலை நிமித்தம் வேறு ஊரில் பல நண்பர்களுடன் ஒரு மாடி வீட்டில் தங்கியிருக்கும் பழனி ஆறுமுகம் காலையில் எழுந்தவுடன் குளித்து முடித்து சுவாமி படங்கள் முன் திருப்புகழ் மந்திர நூலை எடுத்து ஓதி விட்டு தான் மெஸ் க்கு போய் சாப்பிட்டு விட்டு அலுவலகம் செல்வார் . அறை நண்பர்கள் அனைவரும் ஊருக்கு போய் விட்ட ஒரு ஞாயிறு . இவர் ஊர் தூத்துக்குடி .ரொம்ப தூரம் .அதனால் இவர் மட்டும் வீட்டில் .

காலையில் எழுந்தார் .குளித்தார் . உடனே ,உடனே திருநீறு பூசி சுவாமி படங்கள் முன் வந்து திருப்புகழ் ஆரம்பித்தார் . அறையை கூட்டுவதற்கு சரசு வந்திருந்தாள். இதற்கு மாத சம்பளம் இவளுக்கு அறையில் உள்ளவர்கள் கொடுக்கிறார்கள் .இவள் கூட்ட , அவர் திருப்புகழ் ஓத , இவள் கூட்டிகொண்டே இவரருகில் வந்தாள். திருப்புகழ் ஓதுவது சட்டென்று நின்று விட்டது .
"வர்றியா " பழனி ஆறுமுகம்
"என்னது ?.." சரசு
"இல்ல .. படுப்போம் வர்றியா ?"

" நான் பிள்ளை பெத்து நாற்பது நாள் தான் ஆகுது. பச்ச உடம்பு. லச்ச ரூபா கொடுத்தாலும் "இப்ப " நான் மாட்டேன் " சரசு வின் பதில் .

திருப்புகழ் தொடர்ந்து பழனி ஆறுமுகம் ஓத , இவள் கூட்டி முடிக்கிற வேலையை தொடர்ந்தாள் .

6 comments:

  1. திருபுகழை பாட பாட வாய் மணக்கும்!


    ஹா ஹா ஹா

    ReplyDelete
  2. லச்ச ரூபா கொடுத்தாலும் "இப்ப " நான் மாட்டேன் - punch

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. Where is Carnal Thoughts-13 ?????????

    ReplyDelete
  5. Of course! This is Carnal Thoughts-13!!

    sorry
    and thanks

    ReplyDelete
  6. Wow...In the crowd of churning endless drivels on this subject, you pictured it in just four paragraphs.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.