Share

Dec 4, 2008

பின் மும்பை நிலவரம்

பொண்டாட்டியை பறிகொடுத்த சோகமும் சர்தாரி முகத்திலே தெரியலே . மும்பையிலே இப்படி நடந்து போச்சேன்னுற துக்கமும் சர்தாரி மூஞ்சிலே காணலயே . நல்லா ஈ ..ஈ ..ஈன்னு இளிச்சிக்கிட்டு !

பாகிஸ்தான் ஜனாதிபதிசர்தாரியோட குதூகலமும் கும்மாளமும் பார்த்தா ஏதோ இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்ட புது மாப்பிள்ளை மாதிரி குஷி யா சிரிக்கிறாரு .

"அயோக்கிய பயல்களை நாங்களே உண்டு இல்லைன்னு பண்ணிடறோம்.உங்க சோலிமயித்த பாத்துகிட்டு போங்க " ன்னு இந்தியாவுக்கு அல்வா கொடுக்கிறாரு .

.......

“Politicians , You have divided us
Terrorists have united us now”
இப்படி Banner ஒன்று நேற்று மும்பையில் நடந்த மக்களின் Peace March ல் காண கிடைத்தது . சபாஷ் !

"தாக்கரே" கூட்டத்துக்கிட்ட சிக்காம முதல்ல இவங்க தப்பிச்சிட்டாலே

அதுவே நல்ல ஆரம்பம் தானே !

.......

மஹாராஷ்ட்ர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் ராஜினாமா ! For this relief, Much Thanks என்கிற ஆசுவாசம் அவருக்கு . இனி என்ன ? எவன் கேட்க முடியும் . மகனை வைத்து நிம்மதியாக சினிமா எடுக்கலாம் . படத்தயாரிப்பாளர் வேலை ரெடியா காத்திட்டிருக்கு .

......

இந்த அமெரிக்காக்காரன் (ஈராக்,ஆப்கானிஸ்தான்கட்டபஞ்சாயத்காரன் ) அனுப்பின பொம்பிளை என்னமோ கண்டார ஒலி ரைஸ் , இல்லை ..கண்டோலீசா ரைஸ் ! அந்தம்மா இங்கேயும் தலையாட்டுது . பாகிஸ்தான் காரன் கிட்டேயும் தலைய ஆட்டுது . உருப்படியா என்ன ஏதாவது செஞ்சுச்சா ... செய்யுமா ..

.......

போயும் போயும் வயுத்து உழவுக்காரன் மலத்தையா திம்பான் . சிதம்பரம் தானா உள்துறைக்கு ..

சரி, நிதித்துறை தப்புச்சிடுச்சேன்னு சந்தோசபடுறீங்க .. Optimistic approach! இல்ல..இல்ல இது Healthy Cynicism!!

'துக்கத்தின் மறுபக்கம் சந்தோசம் ' அப்படின்னா என்னன்னு இப்ப புரியுது .

.....

ஒன்னு கவனிச்சிங்களா ! கருணாநிதி , ஜெயலலிதா , எம்ஜியார் பற்றி என்னகடுமையா எழுதுனாலும் யாரும் கேட்க மாட்டாங்க . ஏன்னா அவங்க கட்சி தொண்டர்கள் யாரும் இதை எல்லாம் படிக்க மாட்டாங்க . ஆனா அச்சுதானந்தன் சமாச்சாரம் பார்த்தீங்களா .பல காம்ரேட்கள் வரிந்துகட்டிக்கொண்டு அவர் தப்ப உணர்ந்து மன்னிப்பு கேட்ட பிறகு கூட வக்காலத்து வாங்குறாங்க . தோழர்கள் சொல்வதின் சாரம் - 'எடியூரப்பாவை முதல்நாள் எட்டி உதைக்காம ஏன் சந்தீப் அப்பா உள்ள விட்டாரு ? எங்க அச்சு ரொம்ப வயசானவரு . திருவனந்தபுரத்திலிருந்து பெங்களூரு ரொம்ப தூரம் . அதனால தான லேட் ஆ வந்தாரு . அவரை நாய்ன்னா அப்புறம் அவரு சும்மா இருக்க முடியுங்களா அதனால தான் அப்படி பேசுனாரு . ஒரு தடவை அவர் சொன்னதை டி வி லே பலமுறை ஒளிபரபுரானுக காவாலிங்க. ' இது தான் மார்க்சீய உணர்வு .

டி வி காரங்கே பண்ண லொள்ளு ஒன்னும் புதுசு இல்லையே ! மும்பை கலவரம் தான் அவனுங்க கொண்டாடுன தீபாவளி .அவனுங்க அதுக்குன்னே தானே காத்துகிட்டிருக்கானுங்க . மீடியா அலும்பு பத்தி தெரியாததா ?

.....

6 comments:

  1. Wow, ennaa adi! Adi ovvonnum summa idi maadhiri irukku!! Shake well (nallaa kalakkunga)!!!

    ReplyDelete
  2. //நிதித்துறை தப்புச்சிடுச்சேன்னு சந்தோசபடுறீங்க .. //

    உண்மையும் அதே தான்,
    நீதி துறை தப்பித்து நாடு மாட்டி கொண்டது.

    ReplyDelete
  3. Unmai...Unmai...

    Adiyum...Idiyum...

    ReplyDelete
  4. சரியாகச் சொன்னீர்கள்! நிதித் துறை தப்பித்தது. இவர் இனி உள் துறையை என்ன பண்ணுவாரோ ! அவர் ஒரு அறிவாளி மாதிரி காட்டிக் கொள்ளும் திறமையற்றவர் தானோ
    ரிஷபன்

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.