Share

Jan 3, 2009

பிரார்த்தனை

அந்தோனி டிமெல்லோ ஒரு கிறித்துவ பாதிரி . நிறைய குட்டிகதைகள் எழுதியுள்ளார் . மதத்திற்கு விரோதமான கருத்துக்கள் அந்த கதைகளில் இருப்பதாக அவர் மீது கத்தோலிக்கம் கண்டனம் வைத்தது .அவர் எழுதிய குட்டி கதை ஒன்று .

' ஒரு பாதிரி ஜெபம் செய்ய ஆரம்பிக்கிறார் . அப்போது மழைக்காலம். அதன் காரணமாக அவருடைய சர்ச் ஒட்டியுள்ள வீட்டை சுற்றி தேங்கிய குட்டையில் தவளைகள் சப்தம் .

பாதிரியார் பிரார்த்தனைக்கு இந்த தவளை சத்தம் குந்தகம் விளைவிக்கின்றன என எண்ணி அயர்ச்சியாடைகிறார் .

“Quiet . I’m at prayer” என்று ஒரு கூப்பாடு போடுகிறார் .

தவளைகள் அனைத்தும் நிசப்தமாகி விடுகின்றன . பயங்கர அமைதி !

பாதிரி சந்தோசமாக உரக்க கூவி பிரார்த்திக்கிறார் .

“My Father! Who art in heaven!”

வானத்திலிருந்து ஒரு அசரிரி

“OK! I am hearing you.
But why did you stop the prayer of the Frogs?!”

2 comments:

  1. பிரமாதம் RPR அவர்களே

    ReplyDelete
  2. Excellent Story!!

    Reminds me of Osho's stories.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.