Share

Dec 30, 2009

தத்துவம் கேள்விகளாலானது



Deep-rooted gender biasஎன்பதாக விவாதங்கள் நிறைய நடக்கிறது.

பிலாசபி என்பதில் பெண் தத்துவமேதை என பெரும்பாலும் கிடையாது. ஓரிருவர் இருக்கிறார்கள்.
“Second Sex” எழுதிய பெண் தத்துவவாதியும் பெண்ணியவாதியுமான சிமோன் திபுவோ (Simon de Beauvoir) பால் பிரிவினையையே ஒத்துக்கொள்ள மறுத்தார்.
சிமோன் திபுவோ Female nature
என்பதாகவும் Male natureஎன்பதாகவும் கருதப்பட்ட இருமை எதிர்வுகளை நம்பவில்லை. மாறாக ஆண்களும் பெண்களும் இந்த உள்ளார்ந்த மனச்சாய்வுகளில் அல்லது இலட்சியங்களில் இருந்து தங்களைத் தாமே விடுவித்துக்கொள்ளவேண்டும் என நம்பினார்.

மனிதன் யார்? மனித இயல்பு என்ன? இதன் மீதான விசாரணை தத்துவ உலகில் காலம் காலமாக நடந்து வருகிறது. அப்படி 'நிரந்தர மனித இயல்பு ' என்று எதையும் தீர்மானிக்கமுடியாது என நம்பினார் சார்த்தர். “We are condemn to improvise!”மனிதர்கள் மேடைக்கு இழுத்து வரப்பட்ட நடிகர்கள். ஸ்க்ரிப்ட் கிடையாது. இயக்குனர் யாருமே கிடையாது. நாமே தான் நம் கதாப் பாத்திரத்தை தீர்மானிக்கவேண்டும். We are condemn to improvise.அர்த்தமே இல்லாத உலகவாழ்வில் முற்றிலும் அந்நியமாகிப் போகும் மனிதன். இதன் காரணமாக ஒரு ennuiவில் சிக்கிவிடுகிறான். Man has no basic nature to fall back on.

ஜோஸ்டீன் கார்டர் எழுதிய நாவல் Sophie's world ஒரு reference bookஎன்று சொல்லவேண்டும். தத்துவத்துறை பற்றிய வரலாறு Sophie's world.

Who we are? Why we are here?Will there still be something that every body needs?


It is easy to ask philosophical questions than to answer them. மாற்றி சொல்வதானால் கேள்விகள் தான் தத்துவம்.

ஆல்பர் காம்யு தன் “The Fall” நாவலில் பல தத்துவக் கேள்விகளை அதனால் தான் வைத்தான்.

1 comment:

  1. RP Sir

    i am reading this book called as 'Fooled by Randomness'. i am not sure if this is relevant to this topic in a complete sense but it's an interesting book.

    Regards
    Kannan
    Johannesburg

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.