A realistic setting is invaded by something too strange to believe.
"காட்டில் திரியும் வேங்கை நிலவில் மரத்தில் நகத்தை ஆழப் பதித்து விட்டுப் போய் விடுகிறது . அதைப் பின்னரோ மறுநாளோ பார்த்த பிராணி கிலி பிடித்து உயிரை விட்டு விடுகிறது!வேட்டையாட வேண்டிய கஷ்டமில்லாமல் உணவு "
-ந. பிச்சமூர்த்தி ' பஞ்சகல்யாணி ' கதையில் புலியின் புத்திசாலித்தனமான உணவுத் தேடல் பற்றி. The peculiar attitude on the part of tiger towards it's prey!
இங்கே புலி மரத்தில் வரைகிறது .
கோவையிலுள்ள தென் பாண்டியன் கவிதை ஒன்று இந்த டிசெம்பர் மாத 'உயிரெழுத்து' பத்திரிகையில். கவிஞன் வரையும் மரம். வரைந்த பின் பறந்து விட்ட பறவைகள் மீண்டு வந்து அமர்ந்த மரம். Illogical Scenerio!
COLERIDGE FORMULAவுக்கு
Willing Suspension of Disbelief in constituting the poetic faith.
Justification of the use of fantacy and non-realistic elements in creative writing.
பறவைகளை வழி நடத்து
பறவை ஒன்றை வரையத் துவங்கினேன்
வரைந்து முடிந்ததும்
அது பறந்து விட்டது
மீண்டும் ஒரு பறவையை
வரைந்தேன்
அதுவும் பறந்து விட்டது
நான் வரைந்துகொண்டே இருந்தேன்
அவைகள் பறந்து கொண்டே இருந்தன
இறுதியாக மரம் ஒன்றை
வரைந்து முடித்தேன்
பறந்து போன அத்தனை
பறவைகளும் வந்து
அமர்ந்து கொண்டன.


//பறவை ஒன்றை வரையத் துவங்கினேன்
வரைந்து முடிந்ததும்
அது பறந்து விட்டது
மீண்டும் ஒரு பறவையை
வரைந்தேன்
அதுவும் பறந்து விட்டது
நான் வரைந்துகொண்டே இருந்தேன்
அவைகள் பறந்து கொண்டே இருந்தன
இறுதியாக மரம் ஒன்றை
வரைந்து முடித்தேன்
பறந்து போன அத்தனை
பறவைகளும் வந்து
அமர்ந்து கொண்டன.//
அற்புதம்.யார் அந்த தென் பாண்டியன்..?
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.