Share

Sep 4, 2009

Art is vice

'சாந்தி நிலையம் ' படத்தில் நாகேஷிடம் வீட்டுக்கு வந்த விருந்தாளி உற்சாகமாக " மகாலிங்கம் புல்லாங்குழல் கேட்டிங்களா '' என்பார் .
நாகேஷ் பதில் :" கேட்டுப்பார்த்தேன் . தரமாட்டேன்னுட்டார் . இப்பல்லாம் யாருக்கும் தர்றதில்லயாம்."

மாலி புல்லாங்குழல் வாசிப்பு பற்றி அந்தகால ரசிகர்கள் சிலாகித்து சொல்வது :
'மாலி 'காத்து '(காற்று ) யாருக்கும் வராது.'

மாலியின் Eccentricity பற்றி பல கதைகள் உண்டு .
மாலி புல்லாங்குழல் எப்போதும் கேட்கும்போது பிரஞ்சு ஓவியன் எட்கர் டிகேஸ் வார்த்தைகள் உடனே ஞாபகம் வரும் .
“Art is vice.You don't marry it legitimately, you rape it.”

மௌனி யின் வரிகள் : விரல்களின்றியும் வீணையில் சங்கீதம் வியாபகம் கொள்ளும் போலும் . சுருதி ,விலகி நின்று எட்டியா நின்று இடைவிடாது முணுமுணுக்கிறது. சப்தத்தினின்றும் சங்கீதம் விடுதலை பெற்று எட்டிய வெளியில் மெளனமாக வியாபகம் கொள்கிறது"

மாலியின் புல்லாங்குழலில் இப்படி பிரமை ஏற்படவே செய்யும் . ஆழ்ந்து காது கொடுத்த பின் ஒருநீண்ட பெருமூச்சு வெளிப்படும் .

மைக்கேல் ஜாக்சன் பாடுவதும் , ஆடுவதும் பிரஞ்சு ஓவியனின் இந்த வார்த்தைகளுக்கு பொருந்தும் .“Art is vice.You don't marry it legitimately, you rape it.”

இருபது வருடங்களுக்கு முன்

'Thriller'
'Bad'
'Dangerous'கேசட்களை கேட்காத நாளே எனக்கு கிடையாது . இன்றைக்கு டி .வி செய்தியில் மைக்கேல் ஜாக்சன் இறுதிச்சடங்கு நடந்தது பற்றி காட்டப்பட்டது .

..



லா .ச .ரா வின் கதையில் அம்மா தயார் செய்யும்
பாயசம் : சமையலறையைக் குங்குமப் பூவின் மனம் தூக்கிற்று. யாகக் குண்டம் போல தொட்டி முற்றத்தில் ஆவி புகைந்தது. முந்திரியும் ,வறுத்த திராட்சை பழங்களும் அத்தனை முழிகளாய் விழித்தன. சேமியா , ஆவியின் அசைவில் நெளிந்தது. அம்மாவின் கூந்தல் முடிச்சிலிருந்து ஒரு மல்லிப்பூ அதில் உதிர்ந்திருந்தது.

..


புதுமைப்பித்தன் ஏழையின் குடிசை வீடு பற்றி :'வறுமையின் இருள் அடித்த கர்ப்பக்கிரகம். '


கோபி கிருஷ்ணனின் "இனிமையான வக்கிரம் "கதை எழுத்துக்கலையின் உக்கிரம் . இவருடைய எல்லா எழுத்தும் உக்கிரம் . அலுப்பு என்பதை பதிவு செய்தார் .
" அலுப்பு " ( Ennui )கோபி கிருஷ்ணனை கலைஞன் ஆக்கிவிட்டது .
Art is vice.

கு .ப .ரா .வின் 'சபரியின் பிரேமை ' சிறுகதை பற்றி கோபி கிருஷ்ணன் சொன்ன விஷயம் நினைவுக்கு வருகிறது -"சபரியின் பிரேமை இயற்கைக்கு எதிராக இந்திரியங்களைக் கட்டுப்படுத்துவதனால் ஏற்படும் துயரை எடுத்துச் சொல்கிறது ."
கோபி கிருஷ்ணனின் ' இனிமையான வக்கிரம் ' கதையை படித்தால் அந்த நேர் எதிர் 'Child'(!) பற்றி புரிந்து கொள்ளமுடியும் . கோபியின் Black Humour !

....









1 comment:

  1. இடுகை தொழில் நுட்பம் நன்றாக உள்ளது. ஆனால் சுயவிபரம் எதுவுமே இல்லை. என்ன வயது உங்களுக்கு? சரி என்ன லேகியம் சாப்பிடுகிறீர்கள். இத்தனை ஞாபக சக்தி.


    சிறப்பு.




    தேவியர் இல்லம். திருப்பூர்.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.