Share

Sep 29, 2009

காந்தியார் மரணம் மோகமுள் நாவலில்


மோகமுள் நாவலில் கதைநாயகன் பாபுவும் கதைநாயகி யமுனாவும் காந்தி மரணம் மீதான உணர்வுகளை பேசுகிறார்கள்.


பாபு : மனுஷன் போய் எட்டுமாதமாகி விட்டது... இந்த மனிதன் போய்விட்டார் என்று கேட்டதில் இருந்து வேண்டியவர்களைப் பார்க்கிற போதெல்லாம் அழுகை குமுறி,குமுறி வந்தது . டவுனில் ( சென்னை ) தியாகராஜ ஆராதனை அன்று சாயங்காலம் கச்சேரி நடக்கிறபோது யாரோ ஒரு இளைஞன் வந்தான் . கச்சேரிக்கு நடுவில் ஓடி வந்து முகம் பேயறைந்தாற்போல் கோண , " அண்ணா " என்று வித்வானைப் பார்த்து ஒரு சத்தம் போட்டான் .திடீரென்று வாத்யம் , பாட்டு எல்லாம் நின்று விட்டது . " காந்தி செத்துப் போயிட்டாராம் அண்ணா " என்று விசித்து அழத்தொடங்கி விட்டான் .
"என்னது "
" எப்ப "
" என்னடாது .... ஏய் பாலு .."
" யார்ரா சொன்னா ?"
" ரேடியோவிலே அண்ணா ''
ஒரே கலவரம். வெளியே கடைகளை அவசரமாக அடைத்துக் கொண்டிருந்தார்கள் .பார்க்கிற முகம் எல்லாம் அழுதுகொண்டிருந்தது .

யமுனா : ஆமாம் பாபு . நானும் அம்மாவும் திருவையாத்திலே அன்னிக்கு , கச்சேரி கேட்டுக்கொண்டிருந்தோம் .திடீர்னு ஒருத்தர் வந்து சொன்னார் . பந்தல் முழுக்க எழுந்து விட்டது . ஒரே அழுகை. ஒரு போலீஸ்காரன் குழந்தை மாதிரி தேம்பித் தேம்பி அழுதான். அம்மா மூச்சை போட்டு விழுந்துவிட்டாள்.

பாபு : புத்ரா என்று சுகனைப் பார்த்து கூப்பிட்டாராம் வியாசர் . பிரிவு தாங்காமல் மரங்கள் கூட ஓலைமிட்டதாம் . கூலிக்கு விழுந்த அடி மதுரை முழுவதும் விழுந்தது . இந்த உயிரை மரணம் பிடுங்கும்போது ஜீவராசி எல்லாம் நொந்து துடிச்சது.


3 comments:

  1. நல்லாயிருக்குங்க!

    ReplyDelete
  2. http://www.guardian.co.uk/world/video/2009/sep/16/sri-lanka-tamil

    ReplyDelete
  3. He was like a glittering diamond, very rare personality.

    காந்தியின் நினைவை மின்னல் கீற்று போன்ற ஒரு சம்பவத்தை நினைவில் இருந்து எடுத்து வைத்து பெரிய தாக்கத்தை உருவாக்கி விட்டீர்கள்

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.