பொதுவாகவே கவிதை என்று எப்போதும் ஆடு புழுக்கை போடுவது போல தான் இப்போது கூட மொத்த மொத்தமாக பலரும் போடுகிறார்கள் என்பது வாஸ்தவம் தான். பல கவிதை தொகுப்புகளை பார்க்க நிர்பந்தம் ஏற்படும்போதெல்லாம் 'ஆட்டுபுழுக்கைகள்' ஞாபகம் வருவதை தவிர்க்க முடிவதில்லை. ஆனால் ஏனோ சுய தரிசனமாக, சுய விமரிசனமாக 'ஆட்டு புழுக்கைகள்' என்ற தலைப்பில் ஒரு கவிதை தொகுப்பு கூட இன்று வரை வெளியானதில்லை.
ஹைக்கு சில பல நல்ல படி தேறியிருக்கின்றன. நாற்பது வருடங்களுக்கு முன் கணையாழியில்( ஆகஸ்ட் 1969) சந்திரலேகாவின் ஹைக்கு கவிதைகள் இரண்டு :
1. தென்னை ஆடுகையில்
தேங்காய்க்குள்ளே
சிற்றலை நெளியுமோ ?
2 . செங்கிரீடம், ராஜ கம்பீரம்
சேவல் ஏறுது குப்பை மேட்டில் .
......
ஆத்மாநாமின் இந்த கவிதை ஹைக்கு தானா ? அல்லது ஹைக்கு நான்கு வரியில் வரக்கூடாதோ?
எந்தக் குறிப்பிட்ட திசையையும்
பின் பற்றாது
வண்ணத்துப் பூச்சிகள்
வாழ்க்கை நடத்துகின்றன
..
ராஜ சுந்தரராஜன் ஹைக்கு கவிதை . தலைப்பு 'விட்ட குறை '.
மண் மீது ஒரு பறவைப் பிணம்
மல்லாந்து நோக்குது
வானை .
இவருடைய ' பரஸ்பர ஆதாயம் ' கவிதை
காக்கைகள் கொத்த
எருமை நிற்கிறது இணங்கி
உண்ணிகள் காரணம்


//எந்தக் குறிப்பிட்ட திசையையும்
பின் பற்றாது
வண்ணத்துப் பூச்சிகள்
வாழ்க்கை நடத்துகின்றன //
ஆத்மநாமின் வரிகளிலிருந்து விடுபடமுடியாமல் மயககம் கொள்கிறது மனது.
//தென்னை ஆடுகையில்
தேங்காய்க்குள்ளே
சிற்றலை நெளியுமோ ?
//
சந்திரலேகாவின் அழமான நுட்பமான பார்வை. ஆச்சரியம் + ஒரு வித அதிர்ச்சி.