யார் நீ?

"மனித நாகரீகம் மற்றும் மொழி தோன்றிய பின் மனிதனின் நீண்ட வரலாற்றில் சட்டென்று விடை தர முடியாததோர் அசாத்தியமான கேள்வி இந்த " யார் நீ? " எந்த விடையும் பூரணமாக இருக்கமுடியாது ."
- அசோகமித்திரன் 'விழாமாலைப்போதில்'

கரு இல்லாத முடடையில்லே
குரு இல்லாத வித்தையில்லே
என்றாலும் நீ யார் ? கேள்வி தொடர்ந்து வந்துகொண்டு இருக்கிறது . நதி மூலம் ,ரிஷி மூலம் கண்டுபிடிக்க தவிப்பு தொடர்கிறது .
நான் யாராய் இருந்தால் உனக்கென்ன ?

Even Eminence requires a luxurious,deluxe frame to make it presentable.

ரயில் சிநேகம் -ப்ளாக் சிநேகிதம் ஒரு ஆராய்ச்சி பதிவு யாராவது எழுதிப் பார்க்கலாம் . பெரிய பிரமைகள் தேவையே இல்லை. நேர்மையேயில்லாத முகமற்ற Anonymousகளின் பின்னூட்ட உலகமல்லவா ?
Comments are free, but Facts are sacred!
தத்துவவாதி சோப்பன்ஹீர் யாருடைய துணையும் இல்லாமல் தனிமையில் வாழ்ந்தான்.அவனுக்கு துணை ஒரே ஒரு நாய் மட்டுமே . அதற்கு கொஞ்சம் தத்துவார்த்தமாக அவன் ' ஆத்மா ' என்று பெயரிட்டிருந்தான் . யார் அந்த நாய் ? 'ஆத்மா' என்பது தான் பதிலாக இருக்கமுடியும் . ஆனால் அந்த நகரத்தில் இருந்த மனிதர்கள் எல்லோருமே அந்த நாயை " குட்டி சோப்பன்ஹீர்" என்று தான் அழைத்தார்கள் .அவன் அந்த நாயின் பெயர் ' ஆத்மா , ஆத்மா , ஆத்மா ' என்று எவ்வளவோ ,எப்படியெல்லாமோ வற்புறத்தி சொல்லிப் பார்த்தும் கூட அந்த முட்டாள் ஜனங்கள் "குட்டி சோப்பன்ஹீர்,குட்டி சோப்பன்ஹீர்,குட்டி சோப்பன்ஹீர்,குட்டி சோப்பன்ஹீர்" என்றே செல்லமாக அந்த நாயை குறிப்பிட்டார்கள்.


அப்படியானால் சோப்பன்ஹீர் என்பவர் யார் ?
அந்த அசந்தர்ப்பமான மனப்போக்குள்ள ஜனங்கள் இந்த தத்துவவாதி சோப்பன்ஹீர் அவர்களை " பெரிய ஆத்மா " என்று கூட சொல்வார்கள் தானே!
அடையாளச்சிக்கல் கர்ணனுக்கு, ஏகலைவனுக்கு மட்டுமில்லை ..ஆத்மா என்ற நாய்க்கு கூடத்தான் இருந்திருக்கிறது என்பதே மகத்தான சோகம்!

4 comments:

  1. நாய்க்கு மட்டும் தானா:-))

    நம்ம எல்லாருக்குமே அப்பப்ப இந்த அடையாளச் சிக்கல், ஏதோ மலச்சிக்கல் மாதிரி வந்துட்டுப்போறது தானே!

  1. Krishnan said...:

    Good one on identity crisis RPR.

  1. முதலாக பயந்து போய் வியந்து போய் ? . கோணல் மானலாக யோசிக்காமல் சுற்றி வளைத்து எழுதாமல் எப்படி உங்களால் இத்தனை தைரியமாய் உங்களை வௌிப்படுத்த முடிகிறது. ஏற்கனவே ஓ பக்கங்கள் படிக்கும் போது நிறையவே எனக்குள் நானே பயந்து கொள்வேன். அவரை மனோ வியாதிக்காரர் என்ற வரைக்கும் அத்தனை பேர்களும் விமர்சித்தாலும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அல்லது உண்மைகளை அத்தனை அப்பட்டமாக ஏற்றுக்கொள்ளாத மனம் என்று தான் எனக்குத் தோன்றுகிறது. அப்படித்தான் உங்கள் " நான் யாராக இருந்தால் என்ன?"

  1. //ஆத்மா என்ற நாய்க்கு கூடத்தான் இருந்திருக்கிறது என்பதே மகத்தான சோகம்!//

    நாய்க்கு எந்த அடையாளச்சிக்கலும் இருந்ததாக அது எங்கும் சொல்லியதா?

    :-)))

    அதுக்கு(நாய்) இது(ஆத்மா) என்று அடையாளத்தை வலிந்து கொடுத்துவிட்டு பின்னர் மற்றவர்களும் அதை இதாகவே அடையாளாம் காணவேண்டும் என்று நம்பிய சோப்பன்ஹீர் எப்படி தத்துவவாதியாக இருக்கமுடியும்.

    எதுவும் அது பாட்டுக்கு இருக்க நாம் நாமாக இருக்கலாம் யாருக்கும் நாம் யார் என்று சொல்லாமலேயே.

    அடையாளங்களை அடுத்தவர்மீது வலிந்து திணிப்பதால் வரும் பிரச்சனைகள்.

Post a Comment

Followers