Share

Nov 25, 2008

மாரியப்பசுவாமிகள் செலுத்திய காணிக்கை

எஸ் ஜி கிட்டப்பா யாரையும் குறிப்பிட்டு குருவாய் சொல்ல முடியாதவர் .

"ஏக சந்த கிராஹி "என்று அந்த காலத்தில் சொல்வார்கள் .

ரொம்ப ஆச்சரியம் .

தியாகராஜரின் சுத்த சீமந்தினி ராக "ஜானகி ரமணா "கீர்த்தனையை ஒரே தரம் கேட்டு விட்டு உடனே மேடையில் பாடியவர் கிட்டப்பா! இவர் பாடிய நாத சிந்தாமணி 'எவரனி ' பற்றி நான் 'சஹானாவும் தேவாம்ருத வர்ஷிணியும்' என்ற என் ஆகஸ்ட் ஏழாம் தேதி பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன் .

அநேக கீர்த்தனைகளை பாடாந்தரமாக கேட்டு கற்றுகொண்டவர் . விளாத்திகுளம் சாமி களின் நண்பர் சங்கீத ஞானி மதுரை மாரியப்ப சுவாமி . இவரிடம் அநேக கீர்த்தனைகள் பயின்று கிட்டப்பா பாடினார் .அற்பாயுளில் இருபத்தேழு வயதில் மறைந்த துர்பாக்யசாலி கிட்டப்பா .

இந்த மதுரை மாரியப்ப சுவாமிகள் பற்றி ஒரு முக்கிய தகவல் . வயிற்று வலி வேதனையால் சொல்லொணா துன்பத்தை மாரியப்ப சுவாமிகள் அனுபவித்து துடித்திருக்கிறார் .

கடைசியில் திருச்செந்தூர் முருகனிடம் நேர்ந்து வேண்டிக்கொண்டார் . வயிற்று வலி குணமான வுடன் நேர்ச்சி கடன் செலுத்தினார் .

தன் நாக்கை அறுத்து காணிக்கை செலுத்தினார் !

தன் சங்கீதத்தை ,பாடும் திறனை தியாகம் செய்திருக்கிறார் .

தோடி சீத்தாராமையர் என்று ஒருவர் . விளக்கம் தேவையில்லை .தோடி யை அடகு வைத்து தன் கஷ்ட காலத்தில் பணம் பெற்று குடும்பம் நடத்தியிருக்கிறார் .அடகில் தோடி இருக்கும்போது கச்சேரியில் தன் பிரிய ராகம் பாடமாட்டார் . சங்கராபரணம் நரசய்யரும் இதே கதை தான் . சங்கராபரணத்தை அடகு வைத்து விட்டு கச்சேரிகளில் சங்கராபரணம் பாட முடியாமல் தவித்திருக்கிறார் .

அப்படி ஒரு காலம் ! அப்படிப்பட்ட பிறவிகள் !!

3 comments:

  1. Musicians and their eccentricities ! You never cease to amaze RPR.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.