Share

Nov 20, 2008

பூர்வ ஜென்ம வாசனை

எங்கோ படித்த நினைவு ! சீதை பற்றி இரண்டு வரிகள் !" சேறு தெளித்த தாமரை போல சீதை பிரகாசமாகவும் இருந்தாள். சோகமாகவும் இருந்தாள் ."
கவிதை தானா இது ? என்ன அழகான சீதை பற்றிய ஓவிய சித்திரம் !வார்த்தைகள் இப்படி சில நேரம் சித்திரமாகின்ற அபூர்வம் நிகழ்வதுண்டு .

....

கோகுலத்தில் யசோதை சோறு ஊட்டி கொண்டு குழந்தைகள் பலராமனுக்கும் ,கிருஷ்ணனுக்கும் ராமாயணம் கதை சொல்லிகொண்டிருக்கிறாள் . பலராமனுக்கு நான்கு வயது . கிருஷ்ணனுக்கு மூன்று வயது . " ராவணன் சீதையை தூக்கி செல்கிறான் . சீதை கதறுகிறாள் ." இப்படி யசோதை சொல்லிகொண்டிருக்கும்போது பாலகிருஷ்ணன் ஆவேசமாக எழுந்து நின்று உணர்ச்சி மேலிட வெடிக்கிறான் !" லக்ஷ்மணா ! என் வில் எங்கே ? அம்பு எங்கே ? "

யசோதை க்கு குழந்தையை சமாதானப்படுத்தி ஆவேசம் குறைய செய்து மீண்டும் சோறூட்ட நீண்ட நேரமாகிறது ..

....

இது கம்ப ராமாயணத்தில் !
அண்ணனுடன் காட்டுக்கு அனுப்பு முன்
" நீ முன்னம் முடி " என சுமித்திரை தான் பெற்ற பிள்ளை லக்ஷ்மணனிடம் சொன்னாளாம் .
'உன் அண்ணனுக்கு உயிராபத்து என்றால் அவன் இறக்கு முன் நீ செத்து விடு '

'ராமன் இறந்தான் என்ற செய்தி வரும் முன் ராமனை காக்கும் போராட்டத்தில் லக்ஷ்மணன் இறந்துவிட்டான் என்ற செய்தி தான் என் காதிற்கு முதலில் வர வேண்டும் .'

லக்ஷ்மனனின் தாய் இப்படி சொல்கிறாள் .

2 comments:

  1. //சுபத்திரை தான் பெற்ற பிள்ளை லக்ஷ்மணனிடம்//

    அது 'சுமித்திரை'. சுபத்திரை என்பது மகாபாரதத்தில் கிருஷ்ணனின் சகோதரி. அர்ஜுனனின் மனைவி. அபிமன்யுவின் தாய்.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.