Share

Sep 17, 2008

வறுமையுடன் கல்விப்பணி

சாந்தி ராமு சொன்ன தகவல் .நிஜமாய் நடந்த சம்பவம் இது .

ஒரு பல்கலைக்கழகத்தில் ஒரு வகுப்பு . இளம் விரிவுரையாளர் ஒருவர் வகுப்பு எடுத்துகொண்டிருக்கிறார் . லெக்சர் கொடுத்து கொண்டிருந்தவர் திடீரென்று மயங்கி விழுகிறார் . அவரை தெளிவித்து முதல் உதவி செய்த பின் அவரை விசாரித்து பார்க்கும்போது தெரிய வரும் தகவல் மகத்தான சோகம் . ' சாப்பிடாததால் மயங்கி விழுந்திருக்கிறார் . தற்செயல் அல்ல . சாப்பிடாததற்கு காரணம் நேரமின்மை அல்ல . அவசரமாய் கல்லூரி கிளம்பியதால் அல்ல . சாப்பிடுவதற்கு அவரிடம் பணம் இல்லை .

பல்கலைக்கழகத்தில் வேலை பெறுவதற்காக கடன் வாங்கி பத்து லட்சம் நிர்வாகத்திடம் கொடுத்து விட்டு, வாங்குகின்ற மாத சம்பளத்தை முதலுக்கும் வட்டிக்கும் கொடுத்துகொண்டிருக்கும் போராட்டத்தில் .. வறுமை காரணமாக சாப்பிட முடியாமல் மயங்கி விழுந்தவர் . வெறும் வயிறு .

பற்றியெரியும் இந்த வயிற்றுக்கு யார் பதில் சொல்ல போகிறார்கள்?

என்ன ? இருக்குன்னு சொல்ல பசியாவது இருக்கேன்னு சந்தோஷ படனும்னு சொல்றீங்களா ?

காசு கொடுத்து வேலை வாங்கியதால் வறுமையை சந்திக்கும் புலமை .

காசு கொடுத்து வேலை வாங்கியபின்னும் வறுமை !

அடிப்படை சௌகரியங்களை கூட வேலை பிடுங்கி கொள்ளுமா ?

பிச்சை புகினும் கற்கை நன்று என்று சொன்ன செல்வி அவ்வை பசியோடு கல்வி புகட்டுவதை பற்றி நினைத்து பார்த்திருக்க மாட்டார் .

சரி சேர்ந்தே இருப்பது வறுமையும் புலமையும் என்றாலும் இவ்வளவு பணத்தை இறைத்து வறுமையை வாங்க வேண்டுமா ?

பணம் இவ்வளவு இல்லை என்றால் வாத்தியார் வேலை கிடையாது என்றால் உண்மையான தகுதி உள்ளவர்களின் நிலை .( இந்த வரியில் பிரச்சார வாடை தெரிகிறதோ ?)

பசியில் மயங்கி விழுந்த வாத்தியாரிடம் “Lecturer, First of all , you learn to survive well , or not to teach at all” என்று நாம் சொன்னால் அவர் பதில் இப்படித்தானே இருக்கும் “The only thing that interferes with my learning to live is my EDUCATION”

ஒரு சிறப்பு அதிகாரி தன் வேலைக்காக அந்த பல்கலை கழகத்துக்கு கொடுத்த தொகை பதின்மூன்று லட்சத்து அறுபதினாயிரம் .இவர் எப்போதும் ஏதோ பறிகொடுத்தது போல இருப்பாராம் .

சாந்தி ராமு இந்த சிறப்பு அதிகாரி முகத்தில் சந்தோசத்தை பார்த்ததேஇல்லை . சந்தோசம் என்ன முகத்தில் ஒரு தெளிர்ச்சியே இல்லை . சாந்தியின் நண்பர் சுப்பு இவரிடம் சொல்கிறார் .

"எப்படி முகம் சோபிக்கும் .இழந்தது பல லட்சங்கள் சாந்தி .. பல லட்சங்கள் ...."

பல்கலைக்கழக நிர்வாகம் என்ன சொல்லும் "வியாபாரத்திலே இதெல்லாம் சகஜமப்பா "

Education is a progressive discovery of our own ignorance! - Dryden

2 comments:

  1. I think they could have survived living on invested bank interest alone, and probably waiting for the right opportunity or work in a "tuition mode" if they are really capable to impart knowledge. (Works for Maths, Physics, Chemistry & Biology... may be Computer Science now)

    My friends brother, works in Belgaum in a tutorial, teaching B.E., B Tech students... he is an M Tech from IIT Madras (1975)!

    Just my thought!

    ReplyDelete
  2. வாழ்க்கைக்காக தான் வேலையே தவிர,
    வேலைக்காக வாழ்க்கை இல்லை...

    16ம் வாய்பாடு வரை படிச்சிருக்கேன்..

    Software தெரியாது.. சேமியா உப்புமா பிடிக்காது

    Surya
    Chennai
    butterflysurya@gmail.com

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.