Share

Sep 20, 2008

கடும்கோபம்

மட்டன் ஸ்டால் பாய் வயதானவர் . எண்பதை வயதாக கொண்டவர்.மதுரையை எழுபது வருடமாக நுகர்பவர் .

சுருட்டு பத்த வைக்கிற தீப்பெட்டி அவருக்கு உயிர் மாதிரி .

நம்ம குருவிமண்டையன் ,மொட்டையன் , ஆட்டு மூக்கன் (நிஜமாகவே இவன் மூக்கு ஆட்டுக்கு இருக்கிற மாதிரியே இருக்கும் ) தொல்லை (இவனால் பல தொல்லைகள் விளைந்ததால் இவனுக்கு தொல்லை என்றே பெயர் .)ஒத்த காதன் ஆகிய இவர்கள் கஞ்சாவுக்கு காசு பார்த்து விட்டார்கள் .வாங்கி விட்டார்கள் .சிகரெட்டும் பிரட்டி விட்டார்கள் .(சிகரெட்டுக்கு உருண்டை விழியன் இன்று சிக்கினான் . அப்புறம் முனகிகிட்டே தான் போனான் .) தீப்பெட்டி தான் பிரச்னை .பிறகு பார்க்குக்குள் போய் விட்டால் சிவ போதை தான். ராஜ போதை தான் .

தொல்லை தான் பாயிடம் கேட்டான் .வாயில் பீடி .

'பாய் !பீடிக்கு கொஞ்சம் Fire service பண்ணுங்க பாய் . '

பாய் எச்செரிக்கை யானவர் . அப்போது தான் பற்ற வைத்திருந்த சுருட்டை நீட்டினார் .

'பாய் சுருட்டு வாடை பிடிக்காது பாய் . பீடி அப்புறம் சுருட்டு வாடை அடிக்கும் தீப்பெட்டி கொடுங்க '

பாய்க்கு மனசே இல்லை . தீபெட்டியை கொடுக்கிறார் .

தீபெட்டியை திறந்து ஒரு குச்சி தீப்பெட்டி ஓரத்தில் அடித்து பத்த வைக்கிறான் .

டே . ஒரு நாலு குச்சி எடுத்துக்கடா . நம்ம பாய் டா ' இது ஒத்த காதன் .

தொல்லை பத்து குச்சி எடுக்கிறான் .

டே தொல்லை ! தீப்பெட்டி ஓரத்து மருந்து பட்டையை லேசா கிழிச்சிக்கடா .பார்க் லே மருந்து (கஞ்சா ) சிகரெட்ட குச்சியாலே பத்த வைக்க . நம்ம பாய் தாண்டா '- இது மொட்டையன் .

ஒரு ஓரத்து பட்டையை முழுதும் தொல்லை கிழித்து எடுத்துகொண்டான் .

சிதைக்கப்பட்ட தீப்பெட்டியை திரும்ப பாய் கையில் வைக்கிறான் .

பாய் கண்ணெதிரே அவருடைய கண்ணான தீப்பெட்டி கற்பழிக்கபட்டு விட்டது ! பாய்க்கு கோபத்தில் கண் சிவந்து விட்டது .

கிளம்ப இருந்த கஞ்சா மன்னர்களை பார்த்து பாய் ' டே கொஞ்சம் நில்லுங்கடா .'

'என்ன பாய் '

பாய் ' கொஞ்சம் நான் வேட்டியை தூக்கிகிட்டு குனிஞ்சிகிரேன் . வருசையா நின்னு ஒவ்வொருத்தனும் தள்ளிக்கிங்கடா '

பாய் கோபத்தை வெளிப்படுத்தும் விதம் இப்படி தான் .

சரியா மட்டன் வியாபாரம் ஆகலேயேன்னு ஒரு நாள் ரொம்ப கவலையில் பாய் இருக்கும்போது தொல்லை ' பாய் என் புது வாட்சை பாருங்க ' ன்னான் . கையை ஆட்டிஆட்டி புது வாட்சை காட்டினான் .பாய் கொந்தளித்து Spontaneous ஆ 'என் சுன்னியிலே கட்டு ' என்றார் .

தூங்கி கொண்டிருந்த பாய் மூக்கில் மற்றொரு நாள் தொல்லை மூக்கு பொடியை போட்டு விட்டான் .எல்லாரும் சிரிக்கிராங்கே . பாய் தும்மு தும்முன்னு தும்மி முடித்தவுடன் தொல்லையை கூப்பிட்டார் . பாவம் போல முகத்தை வைத்துக்கொண்டு தொல்லை இவர் அருகில் வந்து 'என்ன பாய்'

பாய் ' ங்கோத்தா புண்டையிலே போயி போடணும் '

மற்றவர்களை ஒரு பார்வை பார்த்து ' என்ன நான் சொல்றது '

1 comment:

  1. Bhaiyin nagaisuvai vunaruvu nalayirukku ... dailoguesa corritta nayabagam vachikittuu timeinga kothuvitta...RP ... superappu... appuram andha slangu... (nadai).... yendha ooru?

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.