Share

Sep 22, 2008

பச்சை குழந்தையின் பார்வை


பத்து வயதிலேயே காதல். Love and Romance! பெண்கள் என் வாழ்வில்.


ஒரு குறிப்பிட்ட என்னுடைய காதலி யை நானே தேடி கண்டு பிடித்துவிட்டேன்.
கால் நூற்றாண்டுக்கு பின் . ஆமாம். 25 வருடங்களுக்கு பின்.

My winsome angel! தனிமரமாக ...
அவளிடம் முதலில் தொலைபேசியில் பேசினேன். உடனே போய் பார்க்க வில்லை. தினமும் இரண்டு முறை தொலைபேசியில்.மூன்று மாதம் ஒரு முப்பது கடிதம் ஒவ்வொன்றும் இருபதுபக்க கடிதம் எழுதினேன்.
அப்புறம் போய் பார்த்தேன்.

என் தேவதையின் பார்வையில் ரொமான்ஸ் இல்லவே இல்லை. அதிசயம். ஆனால் பச்சை குழந்தை பார்ப்பது போலவே இருந்தது அவள் பார்வை. குழந்தையின் பார்வை!


”நான் பழுத்திருக்கும்போது வராமல்
உளுத்துப் போனபின்
புழு கொத்த வரும் மனம் கொத்தி நீ!”
இது கல்யாண்ஜியின் கவிதை. அபிதா!

இதழ்களின் லேசான குமிழில் ‘அ’, இதழ்களின் சந்திப்பில் ’பி’, உதடுகளின் தெறிப்பில் ’தா’. லா.ச.ராவின் அபிதா.
ஹைமவதி, ஹிமவான் புத்ரி, பர்வத ராஜகுமாரி!

என் கண்ணீர் வற்றி விட்டது.
...............................................................
ஒரு முழு இரவுவிடியும் வரை நானும் அவளும் தனி அறையில் தனிமையில்.
ஒரு நிமிடம் கூட தூங்கவில்லை .ஆனால் ......
No Physical Love!
............................................................

சோரம் போவது அவ்வளவு சுலபம் இல்லை என்று அசோகமித்திரன் சொல்வார்!
ஒரு முறை அசோக மித்திரன் புதுவை வந்திருந்தபோது இலக்கிய விவாதத்தில் சற்று வேகமாகவே என்னிடம் சொன்னார் 'சோரம் போவது அவ்வளவு சுலபம் இல்லை.'
அப்போது புரிந்து கொள்ள குழப்பமாகத்தான் தோன்றியது.



...........................

My winsome angel!
So long! Farewell!!
இன்று நாம் மீண்டும் பிரிந்து விட்டோம் . என் காலம் உள்ளவரை உன் நினைவு என் கண்ணில் கசிந்து கொண்டிருக்கும்.




"If I should meet you after a long time
How should I greet thee?
With silence and tears."
-Byron



........................

http://rprajanayahem.blogspot.in/…/09/carnal-thoughts-3.html



3 comments:

  1. If I should meet after a long timeHow should I greet thee?with silence........Silence............Silence gives e____nessSilence is everythingEverything comes in silenceEverything oneday became silence(silence is not equal to 'keeping silence')But Kadhal adhandha greatest silenceukku munnal nirkumm pralayam....mmm.. this is the way life chalthe hai

    ReplyDelete
  2. Lovely!!! not only the way you describe things, but the Quote used appropriate places also Lovely!! lovely!!!

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.