Share

Sep 19, 2008

R.P.ராஜநாயஹம் பற்றி

ராஜநாயஹம் பற்றி

மணிக்கொடி சிட்டி : நேர்மையே வாழ்க்கையாகவும் வஞ்சனை கண்டால் வெகுண்டு எழும் தன்மையும் கொண்ட அருமை நண்பர் அன்பே உருவானவர் R.P.ராஜநாயஹம்

கி.ராஜநாராயணன் : நீங்கள் புதுவையை விட்டுப் போனது எனக்கு ஒரு இழப்பு. நல்ல ஒரு சினேகம் விட்டுப் போச்சி. இப்போதெல்லாம் நல்ல மனுசர்களைப் பார்ப்பது அருகிக்கொண்டே வருகிறது. கொஞ்ச நாள் பழகினாலும் மனசை பிய்த்துக் கொண்டு போய்விட்டீர்கள். என்னோடு வந்து பழகியவர்களில் நீங்கள் ஒரு வித்தியாசமானவர் தான். நீங்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு அனுபவங்கள் புதைந்து கிடக்கிறது உங்களிடம். அதே பேச்சை நீங்கள் எழுத்தில் கொண்டுவர ஆரம்பித்து விட்டால் நாங்களெல்லாம் கடையை கட்ட வேண்டியது தான்.


அசோகமித்திரன் : நீங்கள் என்னை மீண்டும் மீண்டும் வியப்பில் ஆழ்த்துகிறீர்கள். தாங்கள் என் படைப்புகள் குறித்து கட்டுரை எழுதி அதை நான் படிக்க நேர்ந்தால் மிகவும் ரசமான அனுபவமாய் இருக்கும்.



டாக்டர். கி. வேங்கடசுப்ரமணியம்: அன்புமிக்க அறிஞர் ராஜநாயஹத்திற்கு ! அறிந்தவர் அறிஞர். நீங்கள் நன்கு அறிந்தவர். எனவே இப்பட்டத்தைப் பெற தகுதியானவர். சரி துணைவேந்தரைத் தவிர வேறு யார் பட்டம் கொடுக்க முடியும் ?


சாரு நிவேதிதா : ராஜநாயஹம் உலக இலக்கியத்தின் வாசகர். எனக்கு ஷேக்ஸ்பியரில் சந்தேகம் ஏதும் இருந்தால் அவரிடம் தான் கேட்பது வழக்கம். ஹாலிவுட் சினிமா பற்றி அதிகம் அறிந்தவர். ஹாலிவுட் சினிமா பற்றி அவர் ஒரு புத்தகமே எழுதலாம். அறிவினால் வியக்க வைத்தவர் RP ராஜநாயஹம். எப்படி ஒரு ராஜா மாதிரி வாழ்ந்தவர் , இந்த ராஜநாயஹத்தைப் பற்றித்தான் வீழ்ந்தாலும் லியர்மன்னன் மன்னன் தானே என்று எழுதினேன். சங்கீதத்திலும் கரை கடந்தவர் ராஜநாயஹம்.

11 comments:

  1. இதற்கும் ஜம்பன் என்றே தலைப்பு வைத்திருக்கலாம் நீங்கள்!

    (சீரியஸா எடுத்துக்காதீங்க சார்! ச்சும்மா....!)

    ReplyDelete
  2. மன்னிக்கவும்..

    ஜம்பன் = ஜம்பம்.

    ReplyDelete
  3. தருமி: யாரு அவரு ராஜநாயகம் அப்டின்றது?

    ReplyDelete
  4. அனுபவங்களின் தொகுப்பு நீங்கள்.
    வலைப்பூ உஙளுக்கு ஏற்ற இடம்.
    ஓலயூர் எனது வீட்டிற்கு வந்தது நினைவிருக்கிரதா?

    மணிசேஷன்.
    திருச்சி.

    ReplyDelete
  5. kaazhi perungaaya dappa

    ReplyDelete
  6. hello sir

    i have been reading your blog for a longtime just curios how old are you !!!!!
    i am amazed by your experiences and your blog please keep up the good work

    Regards
    Kishore

    ReplyDelete
  7. உங்களிடம் பேசிக் கொண்டிருந்தால் போதும், அனுபவங்களையும், படித்து ரசித்தவைகளையும் கொட்டோ கொட்டுன்னு கொட்டி விடுவீர்கள். அப்பப்பா ஒரு நாளில் நான் பெற்ற அனுபவம் அருமையோ அருமை.. வாழ்த்துக்கள்..

    அனானிமஸின் காலிப் பெருங்காயடப்பா என்ற விமர்சனம் அவர் உங்களின் மீது கொண்ட அன்பின் காரணமாக சொல்லப்பட்டது என்று எடுத்துக் கொள்ளலாம்.

    ReplyDelete
  8. Mani Seshan!
    You have visited my house twice, I think. You are the person who had written a Kurunaaval in Kanaiyazhi..right! How are you!

    Parisalkaaran!
    I take it in a good sense.
    Dharumi ananymous thanks..

    Kishore I'm running 46.You are very kind to congratulate me.

    Thangavel! I think this is the time I should check and publish the comments. there will be so many ananymous in my blog hereafter.

    ReplyDelete
  9. துபையில் 4 ஆண்டுகள் தனிமையில் தவித்த போது பிளாக் படிக்க ஆரம்பித்து எத்தனையோ இரவு பகலாக படித்தேன்..

    உங்களை எப்படி தவற விட்டேன் என வருந்துகிறேன்..

    அப்பப்பா எவ்வளவு அனுபங்கள்..

    வாழ்த்துக்கள் RPR ...

    சூர்யா
    சென்னை
    butterflysurya@gmail.com

    ReplyDelete
  10. Dear Chennai Surya!

    Thanks for your kind regards.

    No wonder you were not able to read this R.P.Rajanayahem's blog while you were in Dubai. This blog is just 3 months old. From June 8th.

    ReplyDelete
  11. உங்களை அறிமுகம் செய்த சுந்தருக்கு நன்றி...

    நீங்கள் எழுதிய புத்தகங்கள் பற்றிய பதிவிட முடியுமா ?

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.