Share

Sep 6, 2008

எழுத்து - புரிதல்

“Only one man ever understood me…And he didn’t understand me”

ஹெகல் இப்படி சொன்னான் . புரிதலை பற்றி இதை விட சொல்ல வேறு என்ன இருக்கிறது .

The eternal mystery of the world is its comprehensibility. - Kant

கான்ட் சொன்னதை புரிந்து கொள்ள சந்திர பாபு வின் பாடல் ஒன்று போதும் .

"ஒன்னுமே புரியலே உலகத்திலே ..

என்னவோ நடக்குது .. மர்மமா இருக்குது "

என்னடா இது கான்ட் சொன்னதை அப்படியே காப்பியடிச்சி எழுதிட்டாங்களே ன்னு புரியும் .

ஆசிரியனுக்கு ஆயுதம் "வார்த்தைகள்" தான் . எழுத்தாளனின் உபகரணம் "வார்த்தைகள் ". சரி வார்த்தைகள் எவ்வளவு சக்தி வாய்ந்தவை .

ஜோசப் கான்ராட் இதற்கு பதில் சொல்கிறான் .

"வார்த்தைகள் என்பது யதார்த்தத்தின் மிகப்பெரிய எதிரிகள் "

எழுத்தாளன் என்பவன் யார் ? இதற்கு ஒரு பதில் Thomas Mannசொல்கிறான்.

எழுதுவது என்பது மற்றவர்களை விட யாருக்கு மிக கடினமோ அவன் தான் எழுத்தாளன் .

ரோலன் பார்த் Pleasure of the text பற்றி சிலாகிப்பதற்கு எட்டு வருடம் முன்பே தீர்மானித்து முடிவு செய்த தியரி - The death of author .

பூக்கோ தன் பங்குக்கு சுத்தமாக எழுத்தாளனை பற்றிய பிரமைகளை உடைத்தெறிந்து விட்டான் .

“What is an Author?
Not a creator of , but a label on a group of statements”

தெரிதாவுக்கு வார்த்தைகள் மீது சந்தேகம் வர காரணமாயிருந்தவன் கான்ராட் தான் என எனக்கு எப்போதும் தோன்றும் . கான்ராட் தானே அதை Words are the greatest foes of reality என முன்னறிவித்தவன் . எழுதப்பட்டவற்றை பிரதி ( Text )என பெயரிட்டு ,கட்டுடைப்பு செய்ய வேண்டும் என்றான் தெரிதா .

ழாக் லக்கான் "பிரதி" அச்சில் வருவதையே அருவருப்பாக எண்ணினான் . அச்சில் வரும் எழுத்தை "குப்பை " என கேலி பேசினான் .

1 comment:

  1. Good. keep writing... I am here to read all your writings.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.