Share

Dec 22, 2016

A stranger’s kindness


ஸ்ரீவில்லிபுத்தூரில் அப்போது என் மனைவியின் தாலி செயின் அறுந்து வீட்டில் கீழே விழுந்து விட்டது. அதை சரி செய்ய ஒரு நகைக்கடையில் கொடுத்து இருந்தேன். 
அதை மீண்டும் அந்த நகைக்கடையிலிருந்து வாங்கிக்கொண்டு டூவீலரில் வந்து கொண்டிருந்தேன். தாலி செயினை கவனமில்லாமல் ஒரு சின்ன கேஷ் பேக்கில் வைத்து அதை ஃப்ரண்ட் பாரிலேயே தொங்க விட்டு வந்து கொண்டிருந்தேன். திடீரென்று “ சார்! சார்! “ கூப்பிடுகிற சத்தம் காதில் விழுந்தாலும் யாரோ யாரையோ கூப்பிடுகிறான் என நினைத்து வண்டியை நிறுத்தாமல் போய்க்கொண்டிருந்தேன். 

“ சார்! ஒங்க பேக் கீழ விழுந்திருச்சி சார்!” என்று நல்ல சத்தமாக கத்தும் சத்தத்திற்கு டூவீலரை நிறுத்தி திரும்பிப் பார்த்தேன். என்னுடைய கேஷ் பேக் தான் கீழே விழுந்திருக்கிறது..ஐயய்யோ.. உடனே இறங்கி அதை ஓடிப்போய் கையில் எடுத்துக்கொண்ட பின் எனக்கு இதை கவனப்படுத்திய நல்ல மனிதருக்கு நன்றி சொல்ல திரும்பிப்பார்க்கிறேன். அவர் சைக்கிளை நிறுத்தாமலேயே சென்று விட்டார். அவர் முகத்தைக்கூட சரியாக பார்க்கவில்லை.

தெய்வம் மனுஷ்ய ரூபனே.
The kindness of a stranger.
I can never repay his help, but an act of kindness is never wasted.
…………………………………………….

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.