Share

Dec 31, 2016

ரங்கராஜ் பாண்டே


1999ல் மார்ச் 27ம் தேதி, ஸ்ரீவில்லிபுத்தூர் பென்னிங்க்டன் லைப்ரரியில் நான் அசோகமித்திரனை அறிமுகப்படுத்தி பேசினேன்.

என்னிடம் இருந்த அசோகமித்திரனின் அத்தனை நூல்களும் அன்று காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
அசோகமித்திரன் அவற்றை ஒரு பார்வை பார்த்து விட்டு புருவத்தை உயர்த்தி “அட ராமச்சந்திரா! நான் இவ்வளவு புத்தகங்கள் எழுதியிருக்கிறேனா!”
நிகழ்ச்சி முடிந்த பின் மேடையில் அசோகமித்திரனை பலரும் சந்தித்து அளவளாவிய போது ஒரு இருபது வயது மதிக்கத்தக்க இளைஞன் அசோகமித்திரனிடம் “ பாலகுமாரனைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்க நான் உடனே சொன்னேன். “Balakumaaran – Poor man’s Janakiraman!”
உடனே “ ஏன்? அப்படி சொல்றீங்க?” - மென்மையாக கேட்ட அந்த இளைஞன் ரங்கராஜ் பாண்டே!

நான் “அப்படித்தான் சொல்லனும்.”
அசோகமித்திரனுக்கு பதில் சொல்வதைத் தவிர்த்து விட்ட ஆசுவாசம். மென்மையாக இருவரையும் பார்த்து சிரித்தார்.



.....................................................

http://rprajanayahem.blogspot.in/2016/12/blog-post_9.html

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.