Sep 1, 2008
கதே தன் இளமை துவங்கி மரணம் வரை எழுதிய நாடகம்
74 வயதிலே கதே ஒரு சிக்கலை எதிர்கொண்டான்.
ஒரு பெண் .அவளுக்கு 19வயது தான். அவள் மீது சீரியஸாக காதல் வந்து விட்டது . அவளை
விரட்டிக்கொண்டு போயும் பிரயோஜனம் இல்லை. ஏமாற்றம் தான் மிஞ்சியது .
அந்த
சோகத்தை தான் The Marienbad Elegy கவிதையாக வடித்தான் .
கதே Faust காவியத்தை
23 வயதில் எழுத ஆரம்பித்து 82 வயதில் இறப்பதற்கு முன் முடித்து விட்டான் . 1832ல்
இறந்தான் .இரண்டு பாகங்கள் கொண்ட Faust எழுதி முடிக்க எவ்வளவு காலம்! Faustஒரு
ரசவாத நாடகம் . ஜெர்மன் மொழியில் இவன் இதை எழுதினான் .
140 வருடத்திற்கு முனனதாக
கிறிஸ்தொபேர் மார்லொவ் ஆங்கிலத்தில் Dr.Faustus எழுதிவிட்டு 29 வயதில் இறந்து
போனான் என்பது முரண் நகை .
மார்லோவின் நாடகத்திற்கும் , கதே யின் நாடகத்திற்கும்
நிறைய மாறுதல் உண்டு .
கதை நாயகன் Faustus விலக்கப்பட்ட அறிவை தேடுபவன்
.மாயாஜாலம்,ரசவாதம் இவற்றில் விற்பன்னன் . மார்லொவ் இவன் கதையை நன்மைக்கும்
தீமைக்கும் நடக்கும் யுத்தமாக வடித்தான் .
முடிவு கதை நாயகனின் வீழ்ச்சி .
சாத்தான் Mephistopheles வில்லனாக மார்லோவின் நாடகத்தில் வருவான் . அதே சாத்தான்
ஒரு சேவகனாக கதே யின் நாடகத்தில் இருப்பான் .
59 வயதில் கதே தன் நாடகத்தின்
முதல் பாகத்தை முடித்து விட்டான் . இதில் மார்கரெட் என்ற மாசற்ற பெண்ணை மயக்கி
கதைநாயகன் Faustபின் இழந்து விடுகிறான் .
தத்துவ பிரவாகமாகிய இரண்டாம் பாகத்தில்
Faust ட்ராய் நகர ஹெலனை திருமணம் செய்து ஒரு இலட்சிய சமுதாயத்தை உருவாக்குவான்
.
கதே யின் நாடகம் மேடை யில் நடிக்க வேண்டிஎல்லாம் எழுதப்படவில்லை .
Faustஒரு Closet drama . ஒரு தனிமையான வாசகன் வாசிப்பதற்க்காக . சில சமயம் ஒரு
சின்ன கூட்டத்தில் சிறு அறையினுள்ளே சத்தமாக வாசிக்கப்படுவது தான் Closet drama
.
ஜெர்மன் இலக்கியத்தில் Faust மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது .
கதே
யை மேற்கோள் காட்டாத மேதைகள் குறைவு .
கதே ஒரு Polymath !`கற்ற ஞானி
.
இப்போது உலகெங்கும் பலரும் பயன்படுத்திகொண்டிருக்கும் கீழ்க்கண்ட மேற்கோள்கள்
கதே யுடையன தான் .
A man can stand anything except a succession of
ordinary days.
A useless life is an early death.
Live dangerously
and you live right.
There is nothing worse than aggressive
stupidity.
மார்லொவ் எழுதிய Dr.Faustusதிரைப்படமாக 1966ல் ரிச்சர்ட்
பர்ட்டன் ,எலிசபத் டைலர் நடித்து திரைப்படமாக வந்துள்ளது .
'Was
this the face that launched a thousand ships
And burnt the topless towers of
Ilium
Oh, Sweet Helen Make me immortal
With a kiss
All is dross that is
not Helena '
மேற்கண்ட வசனங்களை ரிச்சர்ட்
பர்ட்டன் எலிசபெத் டைலரை பார்த்து பேசம் காட்சி சிலிர்ப்பானது .
கதே பற்றியும் , கதே யின் Faustகூட திரைப்படங்களாக வந்துள்ளன என தெரிகிறது .
1926 ஆண்டில் ஒரு Silent movie யும் 1941இல்All that money can buy கூட கதே
எழுதிய Faust.
Dr.Faustus நாவலாகவும் Thomas Mann எழுதி (நான்கு வருடத்தில் எழுதிவிட்டார் )
1947 ல் வெளிவந்துள்ளது
..............
அந்த சோகத்தை தான் The Marienbad Elegy கவிதையாக வடித்தான் .
கதே Faust காவியத்தை 23 வயதில் எழுத ஆரம்பித்து 82 வயதில் இறப்பதற்கு முன் முடித்து விட்டான் . 1832ல் இறந்தான் .இரண்டு பாகங்கள் கொண்ட Faust எழுதி முடிக்க எவ்வளவு காலம்! Faustஒரு ரசவாத நாடகம் . ஜெர்மன் மொழியில் இவன் இதை எழுதினான் .
140 வருடத்திற்கு முனனதாக கிறிஸ்தொபேர் மார்லொவ் ஆங்கிலத்தில் Dr.Faustus எழுதிவிட்டு 29 வயதில் இறந்து போனான் என்பது முரண் நகை .
மார்லோவின் நாடகத்திற்கும் , கதே யின் நாடகத்திற்கும் நிறைய மாறுதல் உண்டு .
கதை நாயகன் Faustus விலக்கப்பட்ட அறிவை தேடுபவன் .மாயாஜாலம்,ரசவாதம் இவற்றில் விற்பன்னன் . மார்லொவ் இவன் கதையை நன்மைக்கும் தீமைக்கும் நடக்கும் யுத்தமாக வடித்தான் .
முடிவு கதை நாயகனின் வீழ்ச்சி . சாத்தான் Mephistopheles வில்லனாக மார்லோவின் நாடகத்தில் வருவான் . அதே சாத்தான் ஒரு சேவகனாக கதே யின் நாடகத்தில் இருப்பான் .
59 வயதில் கதே தன் நாடகத்தின் முதல் பாகத்தை முடித்து விட்டான் . இதில் மார்கரெட் என்ற மாசற்ற பெண்ணை மயக்கி கதைநாயகன் Faustபின் இழந்து விடுகிறான் .
தத்துவ பிரவாகமாகிய இரண்டாம் பாகத்தில் Faust ட்ராய் நகர ஹெலனை திருமணம் செய்து ஒரு இலட்சிய சமுதாயத்தை உருவாக்குவான் .
கதே யின் நாடகம் மேடை யில் நடிக்க வேண்டிஎல்லாம் எழுதப்படவில்லை . Faustஒரு Closet drama . ஒரு தனிமையான வாசகன் வாசிப்பதற்க்காக . சில சமயம் ஒரு சின்ன கூட்டத்தில் சிறு அறையினுள்ளே சத்தமாக வாசிக்கப்படுவது தான் Closet drama .
ஜெர்மன் இலக்கியத்தில் Faust மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது .
கதே யை மேற்கோள் காட்டாத மேதைகள் குறைவு .
கதே ஒரு Polymath !`கற்ற ஞானி .
இப்போது உலகெங்கும் பலரும் பயன்படுத்திகொண்டிருக்கும் கீழ்க்கண்ட மேற்கோள்கள் கதே யுடையன தான் .
A man can stand anything except a succession of ordinary days.
A useless life is an early death.
Live dangerously and you live right.
There is nothing worse than aggressive stupidity.
மார்லொவ் எழுதிய Dr.Faustusதிரைப்படமாக 1966ல் ரிச்சர்ட் பர்ட்டன் ,எலிசபத் டைலர் நடித்து திரைப்படமாக வந்துள்ளது .
'Was this the face that launched a thousand ships
And burnt the topless towers of Ilium
Oh, Sweet Helen Make me immortal
With a kiss
All is dross that is not Helena '
மேற்கண்ட வசனங்களை ரிச்சர்ட் பர்ட்டன் எலிசபெத் டைலரை பார்த்து பேசம் காட்சி சிலிர்ப்பானது .
கதே பற்றியும் , கதே யின் Faustகூட திரைப்படங்களாக வந்துள்ளன என தெரிகிறது .
1926 ஆண்டில் ஒரு Silent movie யும் 1941இல்All that money can buy கூட கதே எழுதிய Faust.
Dr.Faustus நாவலாகவும் Thomas Mann எழுதி (நான்கு வருடத்தில் எழுதிவிட்டார் ) 1947 ல் வெளிவந்துள்ளது
..............
Nov 27, 2008
An Anecdote in “The Outsider”
ஆல்பெர் காம்யுவின்" The Outsider” நாவலில் மெர்சோ சிறையில் செய்தித்தாளில் ஒரு செய்தியை படிக்கிறான் .
"செகொஷ்லோவாகியாவில் ஒரு கிராமம் . அங்கிருந்து ஒரு வாலிபன் பிழைப்பு தேடி வெளியூர் கிளம்புகிறான் .கிராமத்தில் அவன் தாயாரும் தங்கையும் இருக்கிறார்கள் . அங்கே ஒரு சத்திரத்தை நடத்திகொண்டிருக்கிறார்கள்.
இவன் இருபத்தைந்து வருடம் கழித்து நிறைய சம்பாதித்துக்கொண்டு ,தன் மனைவி ,குழந்தையுடன் கிராமத்துக்கு திரும்பி வருகிறான் . தன்தாய்க்கும் தங்கைக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்க எண்ணி வேறொரு சத்திரத்தில் தன் மனைவி குழந்தையை தங்க வைத்து விட்டு தன் குடும்ப சத்திரத்திற்கு வருகை தருகிறான் . அங்கே அறையொன்றில் தங்குகிறான் . அவன் தாயாருக்கும் தங்கைக்கும் அவனை அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை . மாலை விருந்தில் இவன் அவர்கள் பார்க்கும்படியாக தன்னிடம் உள்ள பெருந்தொகை யை தற்செயலாக காட்டுவது போல் காட்டுகிறான் . இவனுடைய தாயாரும் தங்கையும் அன்றிரவு அந்த பணத்தை கைப்பற்ற வேண்டி இவனை கோடரி யால் அடித்துகொன்று விடுகிறார்கள் . பிணத்தை ஆற்றில் போட்டு விடுகிறார்கள் .
மறு நாள் அங்கே இவனை தேடி அவன் மனைவி குழந்தையுடன் வருகிறாள் . நேற்று வந்து தங்கியவன் உன் பிள்ளை தான் என்று அந்த தாயிடம் சந்தோசமாக சொல்கிறாள் .
அந்த தாய் தூக்கு போட்டு இறக்கிறாள் . தங்கை கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்கிறாள் ."
.....


மறு பதிப்புகளை மீண்டும் படிக்க தந்ததற்கு நன்றி.
AN ANECDOTE IN “THE OUTSIDER”
அந்த கதையில் செய்திதாளில் வரும் செய்தியே ஒரு சிறுகதையாகவே இருகிறதே!