Share

Nov 17, 2009

மதுகோடா

இந்தியாவில் ஒன்பது பெரிய நகரங்களில் டெல்லியையும் ,மும்பை ,கொல்கொத்தா சேர்த்து,மொத்தம் எழுபது இடங்களில் இன்கம் டாக்ஸ் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது . இதற்கே அந்த மது கோடாவுக்குகின்னஸ் சாதனைப்புத்தகத்தில் இடம் இன்னொரு முறை தரவேண்டும் ! ஏனென்றால் அவர் ஏற்கனவே கின்னஸ் புத்தகத்தில் சாதனையாளராக இடம் பிடித்து விட்டவர் . சுயேச்சை எம் .எல் .ஏ ஆக இருந்து ஜார்கண்ட் முதல்வர் ஆனதற்காக கின்னசில் மது கோடா இடம் பெற்றவர் .இப்போது இரண்டாயிரம் கோடி ... இதை எழுத தயக்கமாய் இருக்கிறது .. இன்னும் ஆயிரம் கோடிங்க ... என நீங்க சொன்னா .. நான் நம்பத்தான் வேண்டும் .ஹவாலா மோசடி..!

மதுகோடா சூடத்தை கொளுத்தி சத்தியம் தான் செய்கிறார் ." நான் ரொம்ப நல்லவன் .. என் பேரை இவனுங்க சதி செய்து கெடுக்கரானுங்க.. என்னை கொல்ல திட்டம் போட்டுட்டானுங்க .."

அயோக்கியனுங்க ஏசு நாதரையே கொன்னவனுங்கய்யா .. காந்தியவே சுட்ட படுபாவிங்க ... மதுகோடா கதியை நினைச்சா நெஞ்சே பதறுதே! என்ன பாடு படுத்தப் போறானுங்களோ.. தெரியலேயே .. மதுகோடாவ சிலுவையிலே அறைஞ்சிடுவான்களோ .. இல்ல ..துப்பாக்கியால சுட்டுக்கொன்னு போடுவாங்களோ .. தெய்வமே ... இந்த அநியாயத்தை கேக்க ஆளே இல்லையா ..தெய்வமே ...தெய்வத்துக்குத் தான் கண்ணே இல்லையே..

6 comments:

  1. கோடாவைப் போனால் போகட்டும் போடா என்று ஒதுக்கித் தள்ளும் அளவுக்கு, உள்ளூரிலேயே கில்லாடிக்குக் கில்லாடிகள் இருப்பது கண்ணுக்குத் தெரியவில்லையா, ராஜ நாயஹம் சார்?

    ReplyDelete
  2. அய்யோ தமாசு தமாசு... தூ தேறி

    ReplyDelete
  3. According to latest Outlook, approximately 73000000000000 (mind boggling) has been siphoned off through corruption in the last two decades in India post liberalization.
    அரசியல்ல இதெல்லாம் சகஜம் !

    ReplyDelete
  4. மதுகோடா போன்ற அரசியல்வாதிகள்
    இந்திய மக்களின் பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் (குறிப்பாக ஸ்விஸ்) டெபொசிட் செய்கிறார்கள்.
    தற்போதைய வல்லரசுகள் இப்படிப்பட்ட வங்கிகளை
    கொண்ட நாடுகள் மீது படை எடுத்து, அந்த வங்கிகளில் உள்ள பணம் மற்றும், தங்க கட்டிகளை தன் வசமாக்கும். இதை தான் ஹிட்லர் செய்தார். எப்படி பார்த்தாலும் இந்தியர்களாகிய நம் உழைப்பு மற்றும் இந்தியாவின் வளங்கள் இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் மூலம் வல்லரசுகள் கையில் போய் சேரும்.
    எல்லாம் அவன் செயல்!

    ReplyDelete
  5. மதுகோடா ரெண்டு வருசத்துல நாலாயிரம் கோடி அடிச்சிருந்தா, அஞ்சு தடவ முதலமைச்சரா இருக்கேன்னு பெருமையா சொல்லுரவன் எத்தனை ஆயிரம் கோடி அடிச்சிருக்கானோ ? இப்பவே கண்ண கட்டுதே !

    ReplyDelete
  6. Ha, We have seen and heard many such scams (Nagarwala, Bofors,Cement, Coffin, Graveyard Shed, Foder, Taj carridor, Spectrom Etc). Now Congress arques with Opposition as UPA Scam Vs NDA scam like DMK vs ADMK. Ministers think they can elude with the public money. KINGS FEARED GODS then and NOW NO FEARS since GOD is BLIND as you have said. M.S.Vasan

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.