ஒரு முழுமையான கச்சேரி பார்த்த திருப்தி 'ஜகதலப் பிரதாபன்' படத்தில் பி.யு. சின்னப்பா மூலம் கிடைக்கும் . " தாயைப் பணிவேன் அன்புடனே தாயை பணிவேன். ஒரு தாயை பணிவேன் " இந்த பாடலில் விஷேசம் என்னவென்றால் மொத்தம் ஐந்து சின்னப்பாக்கள் இந்த பாடலில் ! பாடகர் சின்னப்பா .வயலின் வாசிப்பவரும் சின்னப்பா தான். மிருதங்க வித்வானும் சின்னப்பா.இன்னொரு சின்னப்பா கஞ்சிரா வாசிப்பார் . மற்றொரு சின்னப்பா கொன்னக்கோல் பாகவதர் !அமர்க்களம் தான். 65வருடங்களுக்கு முன் இப்படி புதுமை.
பின்னால் 'திருவிளையாடல் 'படத்தில் 'பாட்டும் நானே பாவமும் நானே' பாட்டு சிவாஜிக்கு இதே போல அமைத்தார்கள் .
1944 ல் வெளி வந்த படம் ஜகதலப் பிரதாபன். அப்போது சின்னப்பாவுக்கு இருபத்தெட்டு வயது தான்.35வயதில் சின்னப்பா மறைந்து விட்டார் . எம்ஜியாரை விட ஒரு வயது தான் மூத்தவர் சின்னப்பா. எம்ஜியார் பிறந்த ஜாதகத்தை வித்வான் வே.லட்சுமணன் 1911ல் வைத்து கணித்து குறித்தார். ( ஏனென்றால் ஜாதகம் குறிக்க உண்மையான பிறந்த நேரம் ,தேதி ,வருடம் தேவையாயிற்றே !)அதன்படி பார்த்தால் எம்ஜியாரைவிட சின்னப்பா ஐந்து வயது இளையவர் .
ஆனால் காலம்
எம்.கே .டி - பி .யு .சின்னப்பா ,
எம்ஜியார் -சிவாஜி ,
கமல் -ரஜினி
என திரைப்பட சகாப்தங்களை பிரித்தது !
எம் கே டி படங்களில் அவர் உட்கார்ந்தால் பாட்டு .. எழுந்தால் பாட்டு ...நடக்கும்போது கூட ஒரு பாட்டு பாடுவார் . ஆள் ரொம்ப அழகானவர் . அவருடைய காலத்தில் பி யு சின்னப்பா அவருக்கு ஈடான நட்சத்திர நடிகர் . குஸ்தி போடுவார்.சொந்தக்குரலில் தான் பாடுவார் .எம்.கே.டியை விட திறமையான நல்ல நடிகர் .
எம்.கே .டி பாடல்கள் ஜனரஞ்சகமானவை .ஆனால் பி .யு. சின்னப்பா பாடல்களை எல்லோரும் பாடிவிட முடியாது . சின்னப்பா தாளஞானம் மிகுந்தவர் என்பதால் அற்புதமாக ஸ்வரம் பாடுவார் .
சமீபத்தில் 'குமுதம்' வார இதழ் ஒன்றில் சின்னப்பாவின் மனைவி நடிகை கண்ணாம்பாஎன்று 'சுனிலிடம் கேளுங்கள் ' பகுதியில் தவறுதலாக ,அபத்தமாக குறிப்பிட்டிருந்தார்கள் . கண்ணாம்பா 'கண்ணகி ' திரைப்படத்தில் சின்னப்பாவின் ஜோடியாக நடித்தவர் தான் . ஆனால் அவருடைய கணவர் நாகபூசனம் என்பவர் . இந்த நாகபூசனம் -கண்ணாம்பா தம்பதி பின்னால் எம்ஜியாரை வைத்து 'தாலி பாக்கியம் ' என்ற படம் தயாரித்து மிகுந்த அவஸ்தைக்கு உள்ளானார்கள் . கண்ணாம்பா வின் கணீரென்ற 'மனோகரா ' வசனம் யாராலும் மறக்கமுடியாதது .
பின்னால் 'திருவிளையாடல் 'படத்தில் 'பாட்டும் நானே பாவமும் நானே' பாட்டு சிவாஜிக்கு இதே போல அமைத்தார்கள் .
1944 ல் வெளி வந்த படம் ஜகதலப் பிரதாபன். அப்போது சின்னப்பாவுக்கு இருபத்தெட்டு வயது தான்.35வயதில் சின்னப்பா மறைந்து விட்டார் . எம்ஜியாரை விட ஒரு வயது தான் மூத்தவர் சின்னப்பா. எம்ஜியார் பிறந்த ஜாதகத்தை வித்வான் வே.லட்சுமணன் 1911ல் வைத்து கணித்து குறித்தார். ( ஏனென்றால் ஜாதகம் குறிக்க உண்மையான பிறந்த நேரம் ,தேதி ,வருடம் தேவையாயிற்றே !)அதன்படி பார்த்தால் எம்ஜியாரைவிட சின்னப்பா ஐந்து வயது இளையவர் .
ஆனால் காலம்
எம்.கே .டி - பி .யு .சின்னப்பா ,
எம்ஜியார் -சிவாஜி ,
கமல் -ரஜினி
என திரைப்பட சகாப்தங்களை பிரித்தது !
எம் கே டி படங்களில் அவர் உட்கார்ந்தால் பாட்டு .. எழுந்தால் பாட்டு ...நடக்கும்போது கூட ஒரு பாட்டு பாடுவார் . ஆள் ரொம்ப அழகானவர் . அவருடைய காலத்தில் பி யு சின்னப்பா அவருக்கு ஈடான நட்சத்திர நடிகர் . குஸ்தி போடுவார்.சொந்தக்குரலில் தான் பாடுவார் .எம்.கே.டியை விட திறமையான நல்ல நடிகர் .
எம்.கே .டி பாடல்கள் ஜனரஞ்சகமானவை .ஆனால் பி .யு. சின்னப்பா பாடல்களை எல்லோரும் பாடிவிட முடியாது . சின்னப்பா தாளஞானம் மிகுந்தவர் என்பதால் அற்புதமாக ஸ்வரம் பாடுவார் .
சமீபத்தில் 'குமுதம்' வார இதழ் ஒன்றில் சின்னப்பாவின் மனைவி நடிகை கண்ணாம்பாஎன்று 'சுனிலிடம் கேளுங்கள் ' பகுதியில் தவறுதலாக ,அபத்தமாக குறிப்பிட்டிருந்தார்கள் . கண்ணாம்பா 'கண்ணகி ' திரைப்படத்தில் சின்னப்பாவின் ஜோடியாக நடித்தவர் தான் . ஆனால் அவருடைய கணவர் நாகபூசனம் என்பவர் . இந்த நாகபூசனம் -கண்ணாம்பா தம்பதி பின்னால் எம்ஜியாரை வைத்து 'தாலி பாக்கியம் ' என்ற படம் தயாரித்து மிகுந்த அவஸ்தைக்கு உள்ளானார்கள் . கண்ணாம்பா வின் கணீரென்ற 'மனோகரா ' வசனம் யாராலும் மறக்கமுடியாதது .


chinnappa was mannish and alrounder.VIZZY