Share

Mar 7, 2025

Besant Nagar Beach Singer Rajanayahem

What அடி ராக் mummy 
What what thoughtsஸு,
My chestடு shakeகுதடி

.....

இப்ப பெசண்ட் நகர் பீச்சில் பாடும் போது 
கேள்வி "உங்க வயசு என்ன சார்?"

ராஜநாயஹம் பதில் : Ninety Six running.
இப்படி சொல்லும் போது கேட்கிற யாருமே திகைத்து விளம்புவது
'என்ன சொல்றீங்க? நம்பவே முடியல. 
96 வயசா? ரொம்ப ஆச்சரியமா இருக்கே.
உங்கள பாத்தா 95 வயசு தான் தெரியுது. ஏன் பொய் சொல்றீங்க. 95 வயசுங்கறத ஏன் மறைக்கிறீங்க. 96 வயசுன்னு மிகையா சொல்றீங்களே.'

இன்றைக்கு 16 வருடங்களுக்கு முன்
2009ம் ஆண்டிலேயே 
வலைத்தளத்தில் ராஜநாயஹம் புகைப்படங்கள் காணக்கிடைத்ததில்லை.
நிறைய யூகங்கள். 

பழைய எழுத்தாளர்,
 ராஜநாயஹத்திடமே சொன்னார். 'வலையுலகில் "பெரியவர் ராஜநாயஹம்" என்று தான் முத்திரை.

அப்போது பின்னூட்டத்தில் கூட கேள்வி
" இந்த தள்ளாத வயதில் உனக்கு இவ்வளவு திமிரா?"

2012ல் தான் மூத்த மகன் கீர்த்தி ஃபேஸ்புக்கில், ப்லாக்கில் ராஜநாயஹம் புகைப்படங்களை பழைய பதிவுகளிலும் கூட upload செய்தான்.

பெசண்ட் நகர் பீச் 
R.P. ராஜநாயஹம் பாடிய பாடல்கள் 

1.    03. 03. 2025

கூன் பிறையை போற்றிடுவோம்.
 குர் ஆனை ஓதிடுவோம் 

2.    01. 03. 2026

அழைப்பவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்

https://www.facebook.com/share/p/15NFSeJZho/

அமெரிக்கன் காலேஜில் படிக்கும் போது 
ராஜநாயஹம் கலக்கல்.

மரத்தடியிலும்,
 காஸ்மோ பாலிட்டன் க்ளப்  பஸ்ஸிலும்

"அடி What அடி ராக்mummy What what thoughtsஸு.
My chest Shakeக்குதடி, சிறு Eyeஆடி Noseகுத்தி,
மாணிக்க red, மச்சானை pullலுதடி.
Five,six rupeesஸுக்கு மணிgarland
Your neckக்குக்கு suitableலடி
அடி our city மீனாட்சி seeத்தாலும்
அவ Eyesக்கு sorrowவடி
அடி without fail I youவை jail எடுப்பேன்.
Single double ஆக இருக்கட்டுமே
அட Aunti, அவ பெத்த U-foam மெத்தை
அட ராக்mummy Marriage வைபோகமே!
Decorative மெஜுராவில்  White mummy story, daily daily Walkக்குதடி.”https://www.facebook.com/100006104256328/posts/4075347439345358/?app=fbl

Mar 4, 2025

ரோஷம்

திருச்சி தமிழ் இலக்கியக் கழகத்தில் அமுதன் அடிகள் என்னிடம் கு.அழகிரிசாமியின் சிறுகதைகளை அங்கே ஒரு பிரபலத்திற்கு தந்துதவும்படி சொன்னார். ”புத்தகங்கள் திரும்ப கிடைக்கும். நான் பொறுப்பு” என்றார்.

அதன் படி அந்த மனிதர் என் வீட்டுக்கு வந்து என்னிடம் இருந்த அனைத்து அழகிரிசாமி சிறுகதை தொகுப்புகளையும் வாங்கிச்சென்றார்.
அவருக்கு அழகிரிசாமி கதைகள் கட்டுரை எழுத வேண்டியிருக்கிறதாம். ஒரே மாதத்தில் திருப்பித்தருவதாக சொன்னார். ஆறு மாதமாக தரவேயில்லை.

அமுதன் தர்மசங்கடத்துடன் கையை பிசைந்தார். என்ன இந்த மனிதர் இப்படியிருக்கிறார் என்று வேதனைப்பட்டார்.

நான் மனந்தளரவில்லை. அவருடைய வீட்டுக்குப் போய் விட்டேன். அவருடைய மனைவி தான் இருந்தார். புத்தகத்தை திருப்பித்தர நினைவு படுத்தி விட்டு வந்தேன்.

ஒரு வாரம் கழித்து அவர் தன் மகளை அழைத்துக்கொண்டு வந்தார். 
முகம் விளங்கவில்லை. 
புத்தகங்களை திருப்பி கேட்டு அவரை அவமானப்படுத்தி விட்டதாக கருதுகிறார் என்பது அவர் முக விலாசத்தில் தெளிவாக தெரிந்தது. 

“நானெல்லாம் ரொம்ப கௌரவமானவன். ரோஷமானவன்” டயலாக் சொல்லி புத்தகங்களை திருப்பி தந்து விட்டு
 நன்றி சொல்லாமலே 
திரும்பிச் சென்று விட்டார்.

Beach songs

03.03. 2025
Besant Nagar Beach 
Morning

1. ஏசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார் 

2. Koraa Kaagaz Thaa Ye Man Meraa
Likh Liyaa Naam Is Pe Teraa

3. Khilte hain gul yahan khil ke bikharne ko

Milte hain dil yahan milke bichhadne ko

https://www.facebook.com/share/p/14vAkbvBgC/

https://www.facebook.com/share/p/141h4ewfkb/

Mar 3, 2025

தீரா வன்மம்



அவர் கவிஞர்.  கலைஞரின் பெரும் பக்தர். அவரைப் பார்க்க போயிருந்த போது,
எம்ஜிஆர் பற்றி எரிச்சலோடு " நீங்க
 ஒரு தேவடியாப்பயல பத்தி எழுதுறீங்களே. அவன் இங்க தான் இருந்தான்" 
Tiger footed rage.The dragon and his wrath.

இன்னொருவர் 
சிவாஜியின் அத்தியந்த பக்தர்.
அவரோடு பேசும் போது எம்ஜிஆர் பெயரையே உச்சரிப்பதில்லை என தெரிய வந்தது. " அவன் பேரயே நான் சொல்ல மாட்டேன் " 

 Tongue  tells the anger of heart

- Shakespeare

96 வயசா? பாத்தா 95 தான் தெரியிது


இப்ப பெசண்ட் நகர் பீச்சில் பாடும் போது 
கேள்வி "உங்க வயசு என்ன சார்?"

ராஜநாயஹம் பதில் : Ninety Six running.
இப்படி சொல்லும் போது கேட்கிற யாருமே திகைத்து விளம்புவது
'என்ன சொல்றீங்க? நம்பவே முடியல. 
96 வயசா? ரொம்ப ஆச்சரியமா இருக்கே.
உங்கள பாத்தா 95 வயசு தான் தெரியுது. ஏன் பொய் சொல்றீங்க. 95 வயசுங்கறத ஏன் மறைக்கிறீங்க. 96 வயசுன்னு மிகையா சொல்றீங்களே.'


இன்றைக்கு 16 வருடங்களுக்கு முன்
2009ம் ஆண்டிலேயே 
வலைத்தளத்தில் ராஜநாயஹம் புகைப்படங்கள் காணக்கிடைத்ததில்லை.
நிறைய யூகங்கள். 

பழைய எழுத்தாளர்,
 ராஜநாயஹத்திடமே சொன்னார். 'வலையுலகில் "பெரியவர் ராஜநாயஹம்" என்று தான் முத்திரை.

அப்போது பின்னூட்டத்தில் கூட கேள்வி
" இந்த தள்ளாத வயதில் உனக்கு இவ்வளவு திமிரா?"

2012ல் தான் மூத்த மகன் கீர்த்தி ஃபேஸ்புக்கில், ப்லாக்கில் ராஜநாயஹம் புகைப்படங்களை பழைய பதிவுகளிலும் கூட upload செய்தான்.

பெசண்ட் நகர் பீச் 
R.P. ராஜநாயஹம் பாடிய பாடல்கள் 

1.    03. 03. 2025

கூன் பிறையை போற்றிடுவோம்.
 குர் ஆனை ஓதிடுவோம் 



2.    01. 03. 2026

அழைப்பவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்

https://www.facebook.com/share/p/15NFSeJZho/

Feb 23, 2025

Besant Nagar Beach Fun

22. 02. 2025
Evening 

- Besant Nagar Beach 

5 p.m

Hare Rama Hare Krishna


- Besant Nagar Beach 
6.15 p.m

ராஜநாயஹம் பாடிய பாடல்கள் 

1. அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன்.
பார்ப்பவர் கண்ணுக்கு தெரிவேன் என்றான் பாரதத்தில் கண்ணன்.

2. தேவன் கோவில் மணி ஓசை 
நல்ல சேதிகள் சொல்லும் மணி ஓசை
பாவிகள் மீதும் ஆண்டவன் காட்டும் பாசத்தின் ஓசை மணி ஓசை 

3. கோரா காகஸ் தா ஏ மன் மேரா
லிக்லியா நாம் இஸ்பே தேரா 

4. கில் தேஹைன் குல் யஹான் 
கில் கேபி கர்ணகோ
மில் கேபி சடுணகோ
மில் தேஹைன் தில் யஹான்

Feb 17, 2025

மஹா சிவராத்திரி மஹோற்சவம். பெசண்ட் நகர் ரத்னகிரீஸ்வரர் கோயில்






15.02. 2025
7 pm

மஹா சிவராத்திரி மஹோற்சவம் - 2025

பெசண்ட் நகர் ஸ்ரீரத்னகிரீஸ்வரர் ஆலயம் 
நாதஸ்வரம் 
செந்தன் அமுதன் & பார்ட்டி 
மங்கள இசை

....

16.02. 2025

7.46 pm

ரத்னகிரீஸ்வரர் ஆலயம் 

சீர்காழி சிவசிதம்பரம் 

1."இல்லை என்பான் யாரடா 
என் அப்பனை
தில்லையை பாரடா"

ஹரி காம்போதி ராகம்

சுத்தானந்த பாரதி கீர்த்தனை

8.10 pm

2. "பூ மேல் வளரும் அன்னையே,
ஒளி பொருந்தும் பொன்னே
இரட்சிப்பாய் என்னையே
செழுங்கமலப் பூ மேல் வளரும் அன்னையே"

ஆனந்த பைரவி ராகம்

மழலை சிதம்பர பாரதி கீர்த்தனை

8.30 pm

3.  "சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி
சிவகங்கை குளத்தருகே ஸ்ரீ துர்கை சிரித்திருப்பாள்"

சிந்து பைரவி ராகம் 

உளுந்தூர்பேட்டை சண்முகம் பாடல்

......

17. 02. 2025 
திங்கட்கிழமை 

7 pm.

மஹா சிவராத்திரி மஹோற்சவம் 

ரத்னகிரீஸ்வரர் கோவிலுக்கு போகும் போது சென்ற இரண்டு நாட்களாக நிகழ்ச்சிகளுக்கு  உடை Tee shirt, shorts.
டவுசர் போட்டு வருவதை கவனித்து விட்டு 
வேட்டி கொடுத்து கட்டிக்கொள்ள வைத்து பின் நாற்காலியில் அமரச்சொன்னார்கள்.
Be a Roman in Rome.


எல். புவனேஸ்வரி உபன்யாசம்.
நாயன்மார்கள் பற்றி 

..

ரத்னகிரீஸ்வரர் ஆலயம் 
மஹா சிவராத்திரி மஹோற்சவம் 

18.02. 2025

7.30 pm


காயத்ரி கிரீஸ்  வாய்ப்பாட்டு

"சம்போ மஹாதேவா சங்கர் கிரிஜா ரமணா

சம்போ மஹாதேவா சரணாகத 
 ஜன ரக்சாகர அம்போருஹா .."

காமவர்தணி (பந்துவராளி) ராகம் 

தியாகராஜர் கீர்த்தனை

..

7.50 pm 

"அகிலாண்டேஸ்வரி ரக்ஸமம் அகாம
சம்ப்ரதாய நிபுண ஸ்ரீ"

துஜாவந்தி ராகம்

முத்துசாமி தீட்சிதர் கீர்த்தனை

..

8 pm

"நம்பி கெட்டவர் எவரய்யா?"

ஹிந்தோளம் ராகம் 

பாபநாசம் சிவன் பாட்டு

..

8.15 pm

"வானனை மதி சூடிய மைந்தனை,
தேனனை, திரு அண்ணாமலையனை,
ஏனனை, இகழ்ந்தார் புரம்மூன்று எய்த
ஆனனை,---அடியேன் மறந்து உய்வனோ? "

திருநாவுக்கரசர் பாடல் 

கீரவாணி ராகம்



......

மஹா சிவராத்திரி மஹோற்சவம் 

20.02. 2025 

பத்மபூஷன் திருச்சூர் V. ராமச்சந்திரன் கச்சேரி 

6.45 pm

தத்வமறிய தரமா 

ரீதிகௌளை ராகம் 

பாபநாசம் சிவன் பாட்டு 

......

7 pm

ஆனந்த நடமாடுவார் தில்லை

பூர்வி கல்யாணி ராகம் 

இயற்றியவர் நீலகண்ட சிவன்

.....

7.10 pm

"ஸ்ரீ வைதேக ராகம்"

வைத்தீஸ்வரன் கோயிலில் பாடப்படும் அபூர்வ கீர்த்தனை

....

"உன்னடியே கதியென்றடைந்தேன் தாயே"

பஹுதாரி ராகம் 

ஜி. என். பாலசுப்பிரமணியம் இயற்றிய கீர்த்தனை.
 எம்.எல். வசந்த குமாரி, திருச்சூர் ராமச்சந்திரன் இருவருக்கும் குருநாதர் ஜி.என்.பி.

.......

7.45 pm

"பார்வதி நாயகனே சரணம்"

சண்முகப்ரியா

பாபநாசம் சிவன் பாட்டு

......

22.02.2025

மஹா சிவராத்திரி மகோற்சவம் 

டாக்டர் M. நர்மதா 
வயலின் 

பூங்குளம் சுப்ரமணியம் 

கடம் J. ராமதாஸ்


7.15 pm

"நாத தனுமனுஷம்" 
தியாகராஜா
சித்தரஞ்சனி 


7.30 pm

முத்து தாண்டவர்
மாயமாளவ கௌள

பைராகி ராகம் ரேவதி 
ஓ சம்போ

"பராத்பரா"
வாச்சஸ்பதி ராகம்
பாபநாசம் சிவன்
இளைய சிவன் பற்றி அருணகிரிநாதர் 
"முத்தை தரு பத்தி திரு நகை"
கௌள ராகம்

......

23.02.2025  Evening 

 Maha Shivratri Mahotsavam
வைஷ்ணவி ஆனந்த் பாட்டு
ஸ்ரத்தா வயலின் 
மடிப்பாக்கம் சுரேஷ் மிருதங்கம் 
கல்யாணி விஸ்வநாதன் தம்பூரா 

6.50. pm 

                                                           
இன்னமும் சந்தேகப்படலாமோ 
அநுபல்லவி                                                                                                                                  
பொன்னம்பலந்தனில் தாண்டவமாடிய
பொன்கழலை நினைவில் வைக்கத் தெரிந்த நீதான் 
இன்னமும் சந்தேகப்பட லாமோ?

கோபால கிருஷ்ண பாரதி 
கீரவாணி ராகம் 

....

7 pm 
"இலலோ ப்ரணதார்த்தி ஹருடனு சுபே ரெவரிடரே "

தியாகராஜ கீர்த்தனை 

அடானா ராகம் 

.....

7.20 pm

"அருள வேண்டும் தாயே  அங்கயற் கண்ணி நீயே
எனக்கருள வேண்டும் தாயே... "    

எம்.எம். தண்டபாணி தேசிகர் கீர்த்தனை 

சாருமதி ராகம்

.....


ஏதய்யா கதி எனக்கு                                          ஏதய்யா கதி

மா தயாநிதி உமாபதி சுகுமார வரகுணநிதி
நீதான் அல்லது வேறு      

கோட்டீஸ்வர அய்யர் இயற்றிய பாடல் 

சல நாட்டை  ராகம்

....

" சந்திர சூட சிவசங்கர் பார்வதி
ரமண நினகே நமோ நமோ" 

புரந்தரதாஸர் கீர்த்தனை 

.....

Feb 16, 2025

மாங்குயில் பாடிடும் கீதம் கேளாய்

15.02. 2025
6.30 pm 
Besant Nagar Beach 

மாங்குயில் பாடிடும் கீதம் கேளாய் 

R.P. ராஜநாயஹம் பாடிய பாடல்கள் 


1. நான் உன்னை சேர்ந்த செல்வம் 
நீ என்னை ஆளும் தெய்வம் 

2. பார் மகளே பார் பார் மகளே பார் 
நீயில்லாத மாளிகையை பார் மகளே பார் 

3. யார் சிரித்தால் என்ன 
இங்கு யார் அழுதால் என்ன 
தெரிவது என்றும் தெரிய வரும் 
மறைவது என்றும் மறைந்து விடும் 

4.  குரங்கு வரும் தோட்டமடி பழத்தோட்டம் 
வண்டு வரும் தோட்டமடி மலர்த்தோட்டம்..
மனத் தோட்டம் போடுமென்று பணத்தோட்டம் போடுதேயடி முத்தம்மா 

5. காதல் நிலவே கண்மணி ராதா 
நிம்மதியாக தூங்கு 
கனவிலும் நானே மறுபடி வருவேன் 
கவலையில்லாமல் தூங்கு 

6. We shall overcome 
    We shall overcome 
    We shall overcome some day 
    Deep in my heart 
    I do believe 
    We shall overcome some day 

7.  Congratulations and celebration 
    When I tell everyone 
    You are in love in love with me 

8. I'm tempted my darling to steal you away
    So help me my darling 
     Stay out of my way



https://www.facebook.com/share/p/15jbEYQgum/

https://www.facebook.com/share/p/1AXBRphwT7/

Feb 15, 2025

வேடிக்க - 34 ஆட்டோ டிரைவர் மஹாலட்சுமி

வேடிக்க - 34 

A working woman is always perfect. She uses her hands, legs, head for this society.

பெசண்ட் நகர் ஸ்ரீரத்னகிரீஸ்வரர் கோயில் நாகஸ்வர கச்சேரி கேட்ட பின் மகாத்மா காந்தி சாலை வழியாக நடந்த போது, இருட்டில் நின்று கொண்டிருந்த ஆட்டோவில் காக்கி சட்டை அணிந்த பெண் ஆட்டோ டிரைவர் மஹாலட்சுமி. 
மஹாலட்சுமி நிச்சயமாக வீரலட்சுமி.
ஓலா ஆட்டோ டிரைவர். வேளச்சேரியில் இருந்து பெசண்ட் நகர் வேளாங்கண்ணி ஆலயத்திற்கு வந்து சவாரியை இறக்கி, அடுத்த ட்ரிப் எதிர் பார்த்து நிற்கிறாள்.
அம்மா இருக்கிறார். இரண்டு குழந்தைகள் இவருக்கு.
"கணவர் பிரிந்து விட்டார்" துயர புன்னகையுடன்.

"ஓலா அடுத்த ட்ரிப் கால் வந்து விட்டது சார்"


Mahalakshmi is not afraid to be smart. She never expects any body to build the world she wants.

Feb 14, 2025

இரண்டாம் பதிப்பு நூல்கள் சினிமா எனும் பூதம் இரண்டு பாகங்களும் அரசியல் பிழைத்தோர் நூலும்

சினிமா எனும் பூதம் பாகம் 1

சினிமா எனும் பூதம் பாகம் 2

 அரசியல் பிழைத்தோர் 

R.P. ராஜநாயஹம் மூன்று நூல்கள் 
இரண்டாம் பதிப்பு 

Jairigi publications 

Name:Ashok Sai Ramana 
Publisher
Phone:+918643842772;


Feb 8, 2025

யோகம்



வானத்துப்பறவைகள் மட்டுமின்றி கோழி போன்ற பறவைகளும் கூட விதைப்பதுமில்லை, அறுப்பதுமில்லை.
பிரசவத்திற்கு self standing.

பறவை, மிருகம் எல்லாமே.

Maternity hospital தேவையில்லை, மருந்து, மாத்திரை, நர்ஸ், டாக்டர் தேவையேயில்லை.


https://www.facebook.com/share/v/1Az4ENdqEZ/

வேடிக்க - 33 விடாமுயற்சி


வேடிக்க - 33

அஜித் படங்களில் ஆசை, காதல் கோட்டை, முகவரி போன்ற படங்களை பிடிக்கும்.
அஜித்திடம் இதை நேரில் பத்தொன்பது வருடங்களுக்கு முன் சொன்ன போது 
 " என்ன சார், 'வரலாறு' படத்தை மறந்துட்டீங்க.."
மெய் வருத்த கூலி விடாமுயற்சி.
உண்மையில் அஜீத் - த்ரிஷா ஜோடி தான் பிரமாதமான பொருத்தம். 

அஜித் பேரு இதுல அர்ஜுன்.
வில்லன் அர்ஜுன் இன்னமும் என்னா FIT.

1st Bigg Boss winner ஆரவ்.
 குற்றாலம் மெயின் ஃபால்ஸ்ல 
விளம்பர போஸ்டர்ல பார்த்ததுண்டு. விடாமுயற்சியால இப்ப அடியாளா.

தியேட்டர விட்டு வெளியே வந்த போது ரெண்டு வாலிப பசங்க 
"Fantastic movie"
"Wonderful"

ராஜநாயஹம் : You like the movie? You enjoy this extremely Horrible Violence?

" Yeah. Yeah"

https://www.facebook.com/100006104256328/posts/3772843542929084/?app=fbl

.......

VIOLENCE - ஜெயிலர், விக்ரம் 
- R.P. ராஜநாயஹம் 

கொல கொள்ள

ஜெயிலர்ல  மோகன்லால், ஜாக்கி ஷ்ராஃப், சிவராஜ்குமார்னு 
படா 'மேல் மூடி'கள்ளாம் வரத்து. Supporting actors.
விக்ரம் கமலுக்கு ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதின்னு ரெண்டு 
செம 'மேல் மூடி'க.

புத்ர சோகம்
ரஜினிக்கு வசந்த் ரவி.
கமலுக்கு காளிதாஸ் ஜெயராம்.

கொழந்த சென்டிமென்ட்
ஜெயிலர்ல மாஸ்டர் ரித்விக், 
விக்ரம்ல மாஸ்டர் தர்ஷன்.

ரெண்டுலயும் மாரிமுத்த பாக்கலாம்.
பன்னீரா வர்ராரு, நாகராஜா வந்தாரு.

ரெண்டு படத்துக்கும் அநிருத் இசைக்களரி..

ரஜினியும், கமலும் பிரமிக்க வைக்கும்
செம பெர்மாமன்ஸ்.
Both Kamal and Rajini differ in style not in ideas.
No change in "SYSTEM".

விநாயகன் 'தங்காத்து'

நகைய
ஒரசிப்பாத்தா 
விநாயனுக்கு 
விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் 
மச்சம் கம்மி.

Trend. நெறய்ய கொல கொள்ள கத தான்
இங்க இப்ப பிரமாண்ட வசூல்.

அமெஞ்சுக்கற்து தான். வாச்சுக்றது தான். ஜில்ப்பு ஜிப்பா ஜிக்கான் ஜலாபத்ரி ரெய்டு..

Feb 6, 2025

AVM ராஜன் - புஷ்பலதா ஜோடி

AVM ராஜன் - புஷ்பலதா ஜோடி 
- R.P. ராஜநாயஹம் 

1964 மே மாதம் 27ம் தேதி மாலை முரசில் இந்திய பிரதமர் நேருவின் மரணம் தலைப்பு செய்தி.

அதே மாலை முரசின் இரண்டாவது முக்கிய செய்தி AVM ராஜன் - புஷ்பலதா திருமணம்.

தமிழக டீக்கடை மக்கள் சூடான தேநீரை ஊதி ஊதி உறிஞ்சி குடிக்கும் போதே இந்த நேரு மரணச் செய்தியில் ஊறித் திகைத்து சினிமா திருமண செய்தியிலும் அன்று ஊறித் திளைத்தார்கள்.

அன்று நள்ளிரவு தாண்டிய அதி காலையில் சென்னை அருணாசலம் ஸ்டுடியோவில் ஷூட்டிங் ப்ரேக்கின் போது ( அங்கே படத்தில் நடித்துக்கொண்டிருந்தார்கள்)
ஸ்டுடியோ முன் பகுதியில் இருந்த பிள்ளையார் கோவிலில் ராஜன் தாலி கட்டி புஷ்பலதாவை திடீர் திருமணம் செய்து கொண்டார்.

அவசர கல்யாணமாக இருளில் நடந்த கல்யாணம் தான். ஆனால் எவ்வளவோ வருடங்கள் இந்த நட்சத்திர தம்பதிகள் இணைந்து வாழ்ந்திருக்கிறார்கள்.
நின்று நீடித்த ஜோடி.

ஜெமினி கணேசன் - சாவித்திரி,
எஸ்.எஸ். ஆர் - விஜயகுமாரி போலவெல்லாம் இவர்கள் கல்யாண வாழ்க்கை துவண்டு விடவேயில்லை. 

ராஜனுக்கு இரண்டாவது திருமணம்.
இரண்டாவது மனைவியாக ஆக நேர்ந்து விட்டதே என்ற ஆயாசம், வருத்தத்தை பல முறை பேட்டி, கேள்வி பதிலில் புஷ்பலதா பகிர்ந்து கொண்டதுண்டு.

புஷ்பலதாவுக்கு மிக களையான அழகான விசேஷ முகம்.
 விஷேச நடிகரான ராஜனும் அழகன்.




......

ராஜநாயஹம் எழுதிய 
'ஏசுவின் அடிமையின் ஜெபக்கூட்டம்'
பதிவில்

புஷ்பலதா பற்றி ராஜன் 1993ல் :

‘ அடிமை கும்பிடாத சாமி இல்ல. 
ஒரு முறை இந்த மைக் கை கூட கும்பிட்டிருக்கிறேன்.
அடிமையிடம் ஒரு காலத்தில் 
நிறைய கார் இருந்தது.

என் வீட்டில் என் மனைவி கேட்டார்.
 ‘ ஏங்க நிம்மதி கிடைத்ததா?’

‘இல்லை,இல்லை’

அடிமை அழுதுகொண்டே பல நாள் ஒரு அறையில். வெளியே வராமல் அந்த அறையிலேயே.

 பல நாள் கழிந்தவுடன் ஒரு நாள் அறை வாசலில் ஒரு தேவதை. என் மனைவி தான்!
அன்றைக்கு தான் தரிசனம் கிடைத்தது’

அதன் பிறகு ஒரு நாள் 
சிகரெட் பிடித்துக்கொண்டு நான்.

என் மனைவி கேட்டார்’ ஏங்க இது இன்னும் தேவையா?’

அடிமை மீண்டும் தேம்பி தேம்பி அழுது...'

  
ராஜநாயஹம் எழுதிய 
'ஏசுவின் அடிமையின் ஜெபக்கூட்டம்'
பதிவில்

புஷ்பலதா பற்றி ராஜன் 1993ல் :

‘ அடிமை கும்பிடாத சாமி இல்ல. 
ஒரு முறை இந்த மைக் கை கூட கும்பிட்டிருக்கிறேன்.
அடிமையிடம் ஒரு காலத்தில் 
நிறைய கார் இருந்தது.

என் வீட்டில் என் மனைவி கேட்டார்.
 ‘ ஏங்க நிம்மதி கிடைத்ததா?’

‘இல்லை,இல்லை’

அடிமை அழுதுகொண்டே பல நாள் ஒரு அறையில். வெளியே வராமல் அந்த அறையிலேயே.

 பல நாள் கழிந்தவுடன் ஒரு நாள் அறை வாசலில் ஒரு தேவதை. என் மனைவி தான்!
அன்றைக்கு தான் தரிசனம் கிடைத்தது’

அதன் பிறகு ஒரு நாள் 
சிகரெட் பிடித்துக்கொண்டு நான்.

என் மனைவி கேட்டார்’ ஏங்க இது இன்னும் தேவையா?’

அடிமை மீண்டும் தேம்பி தேம்பி அழுது...'

  

ராசுக்குட்டி ஷூட்டிங் போது மனோரமா சொன்னார்: புஷ்பலதா கிறிஸ்தவப்பெண். அவள் தான் 
ராஜனை மாற்றி விட்டாள்

முரசு டிவியில் R.P. ராஜநாயஹம் 'சினிமா எனும் பூதம்' நிகழ்ச்சியில் ஏ.வி.எம். ராஜன், புஷ்பலதா பற்றி இரண்டு எபிசோட்ஸ் இடம் பெற்றிருக்கிறது.

.....

Feb 5, 2025

கிளர்ந்தெழும் தாபம், அதி மதுர மதுர

கிளர்ந்தெழும் தாபம், அதி மதுர மதுர 
R.P. ராஜநாயஹம் நூல்கள் பற்றி 
வீரன்மணி பாலமுருகன்:
Veeranmani Balamurugan 

"இலக்கியத்தில் புனைவுகளில், அப்புனைவுகளில் சீமான் சீமாட்டிகளுக்கும் பிரபுகளுக்கும் கனவான்களுக்கும் , சாமானியனுக்கும் மட்டுமே இடமிருந்ததில்லை. இந்த உலகத்தால் கைவிட்டப்பட்ட, நிராகரிக்கப்பட்ட, வெறுக்கப் பட்ட குரூபிகளுக்கும், திருடர்களுக்கும், வேசைகளுக்கும் வஞ்சகர்களுக்கும் கூட இட மிருக்கிறது. அவர்களின் வாழ்வும் இலக்கிய அந்தஸ்து பெற்று இருக்கிறது.
 அந்த வகையில் தீவிர தமிழ் இலக்கியத்தில் அத்தகைய சில மனிதர்களின் வாழ்வியலை காட்சிப் படுத்தியவர்களில் 
எழுத்தாளர் ஜி. நாகராஜனுக்கு இங்கு முக்கிய இடமிருக்கிறது. அத்தகு விளிம்பு நிலை வாழ்வியலின் தாத்பரியத்தை ஜெயகாந்தன் போன்றவர்கள் அதை வெகு ஜனபரப்பில் விரித்து வெளிச்சம் பரப்பினார்கள்.
 இதன் தொடரச்சியான போக்குகளில் ஒன்றாகத்தான் எழுத்தாளர் பன்முக கலைஞர் R.P. ராஜநாயஹத்தின்  அனுபவ சித்திரங்களான இந்த மதுர அதி மதுர கிளர்ந்தெழும் தாபம் எனும் இரு தொகுப்புகள். 


இதில் கோவில்களும் கோபுரங்களும் நிறைந்த மாமதுரையின் அதே வீதிகளில் வாழ்ந்த வேசைகளைப் பற்றியும் சல்லிகளை பற்றியும் அவர்களின் அன்றாடங்கள் பற்றியும் சுவாரஸ்யம் மேலோங்க எழுதிச்செல்கிறார் R.P.ராஜநாயஹம். 

இது மதுரையின் கால நகர்வொன்றின் தனித்த அடையாளம். இது போன்ற அதிர்ச்சியளிக்கக் கூடிய நீங்கள் விரும்பத் தகாத ஒரு வாழ்வியல் சித்திரத்தை வேறு எங்கும் காண முடியாது. இணையங்களில் தேடி அடைய முடியாது. ஆனால் அக்காலத்தின் சாட்சியாக நின்று அதன் குறுக்கு வெட்டு தோற்றத்தை அளிக்கிறது இந்த இரு புத்தகங்கள். 

சிலர் இப்பதிவுகளை ஆபாசமும் அருவெறுப்பும் நிறைந்தது என நினைக்கக் கூடும். அப்படி நினைப்பவர்களுக்கு கலையம்ச குறைபாடு இருக்கிறது என்று தான் கருத்த முடியுமே தவிர வேறு சொல்வதற்கு ஒன்றுமில்லை. அது ஆபாசம் அல்ல அத்தகு சித்திரங்களுக்கு உயிரூட்டும் கச்சா பொருள்கள் என்றே வாசிப்பவர்கள். உணர்வார்கள். 

கி. ராஜநாராயணன், கழனியூரன் தொகுத்து நாட்டுப் புற பாலியல் கதைகள் மறைவாய் சொன்ன கதைகள் எனும் பெயரில் தொகுப்பாக வெளி வந்திருக்கிறது. அதை ஆபாசம் என்று சொல்ல முடியுமா? அதெல்லாம் இலக்கிய அந்தஸ்து பெற்ற கிராம வாழ்வியலின் அழிக்க முடியாத கல்வெட்டுகள். 

மனித வாழ்வியலில் கேலி, கிண்டல், ஆபாசம் என எல்லாவற்றுக்கும் இடமிருக்கிறது. பலர் நினைப்பது போன்ற இணையதள மலினமான போர்னோ ஆபாசங்கள் அல்ல அவை கலையின் அம்சங்கள்.
 இரண்டுக்கும் நுட்பமான பெரிய வேறு பாடு இருக்கிறது. 

இந்த நூலில் RP ராஜநாயஹம் எதையும் வலிந்து எழுதிச் செல்லவில்லை.
 தான் கண்டதை அப்படியே ஒரு சாட்சியின் வாக்கு மூலமாக தனது பாணியில் கூறிச் செல்கிறார். அவர் வழியாக அக் காட்சிகளை, மாந்தர்களை காணும் வாய்ப்பை நாம் எழுத்தின் வழி தரிசிக்கிறோம் அவ்வளவுதான்.
 தூங்கா நகரின் ஒரு காலகட்டத்தின் யாராலும் தீட்டப் படாத சித்திரம் இது வாசித்துப் பாருங்கள்.

 புதிய அனுபவங்களை 
RP ராஜநாயஹத்துடன் சேர்ந்து நீங்களும் பெறுவீர்கள்."

நூல்கள் கிடைக்குமிடம் 

ஜெய்கிரி பதிப்பகம்.


Feb 3, 2025

கிளர்ந்தெழும் தாபம், அதி மதுர மதுர

கிளர்ந்தெழும் தாபம், அதி மதுர மதுர 
R.P. ராஜநாயஹம் நூல்கள் பற்றி 
வீரன்மணி பாலமுருகன்:
Veeranmani Balamurugan 

"இலக்கியத்தில் புனைவுகளில், அப்புனைவுகளில் சீமான் சீமாட்டிகளுக்கும் பிரபுகளுக்கும் கனவான்களுக்கும் , சாமானியனுக்கும் மட்டுமே இடமிருந்ததில்லை. இந்த உலகத்தால் கைவிட்டப்பட்ட, நிராகரிக்கப்பட்ட, வெறுக்கப் பட்ட குரூபிகளுக்கும், திருடர்களுக்கும், வேசைகளுக்கும் வஞ்சகர்களுக்கும் கூட இட மிருக்கிறது. அவர்களின் வாழ்வும் இலக்கிய அந்தஸ்து பெற்று இருக்கிறது.
 அந்த வகையில் தீவிர தமிழ் இலக்கியத்தில் அத்தகைய சில மனிதர்களின் வாழ்வியலை காட்சிப் படுத்தியவர்களில் 
எழுத்தாளர் ஜி. நாகராஜனுக்கு இங்கு முக்கிய இடமிருக்கிறது. அத்தகு விளிம்பு நிலை வாழ்வியலின் தாத்பரியத்தை ஜெயகாந்தன் போன்றவர்கள் அதை வெகு ஜனபரப்பில் விரித்து வெளிச்சம் பரப்பினார்கள்.
 இதன் தொடரச்சியான போக்குகளில் ஒன்றாகத்தான் எழுத்தாளர் பன்முக கலைஞர் R.P. ராஜநாயஹத்தின்  அனுபவ சித்திரங்களான இந்த மதுர அதி மதுர கிளர்ந்தெழும் தாபம் எனும் இரு தொகுப்புகள். 


இதில் கோவில்களும் கோபுரங்களும் நிறைந்த மாமதுரையின் அதே வீதிகளில் வாழ்ந்த வேசைகளைப் பற்றியும் சல்லிகளை பற்றியும் அவர்களின் அன்றாடங்கள் பற்றியும் சுவாரஸ்யம் மேலோங்க எழுதிச்செல்கிறார் R.P.ராஜநாயஹம். 

இது மதுரையின் கால நகர்வொன்றின் தனித்த அடையாளம். இது போன்ற அதிர்ச்சியளிக்கக் கூடிய நீங்கள் விரும்பத் தகாத ஒரு வாழ்வியல் சித்திரத்தை வேறு எங்கும் காண முடியாது. இணையங்களில் தேடி அடைய முடியாது. ஆனால் அக்காலத்தின் சாட்சியாக நின்று அதன் குறுக்கு வெட்டு தோற்றத்தை அளிக்கிறது இந்த இரு புத்தகங்கள். 

சிலர் இப்பதிவுகளை ஆபாசமும் அருவெறுப்பும் நிறைந்தது என நினைக்கக் கூடும். அப்படி நினைப்பவர்களுக்கு கலையம்ச குறைபாடு இருக்கிறது என்று தான் கருத்த முடியுமே தவிர வேறு சொல்வதற்கு ஒன்றுமில்லை. அது ஆபாசம் அல்ல அத்தகு சித்திரங்களுக்கு உயிரூட்டும் கச்சா பொருள்கள் என்றே வாசிப்பவர்கள். உணர்வார்கள். 

கி. ராஜநாராயணன், கழனியூரன் தொகுத்து நாட்டுப் புற பாலியல் கதைகள் மறைவாய் சொன்ன கதைகள் எனும் பெயரில் தொகுப்பாக வெளி வந்திருக்கிறது. அதை ஆபாசம் என்று சொல்ல முடியுமா? அதெல்லாம் இலக்கிய அந்தஸ்து பெற்ற கிராம வாழ்வியலின் அழிக்க முடியாத கல்வெட்டுகள். 

மனித வாழ்வியலில் கேலி, கிண்டல், ஆபாசம் என எல்லாவற்றுக்கும் இடமிருக்கிறது. பலர் நினைப்பது போன்ற இணையதள மலினமான போர்னோ ஆபாசங்கள் அல்ல அவை கலையின் அம்சங்கள்.
 இரண்டுக்கும் நுட்பமான பெரிய வேறு பாடு இருக்கிறது. 

இந்த நூலில் RP ராஜநாயஹம் எதையும் வலிந்து எழுதிச் செல்லவில்லை.
 தான் கண்டதை அப்படியே ஒரு சாட்சியின் வாக்கு மூலமாக தனது பாணியில் கூறிச் செல்கிறார். அவர் வழியாக அக் காட்சிகளை, மாந்தர்களை காணும் வாய்ப்பை நாம் எழுத்தின் வழி தரிசிக்கிறோம் அவ்வளவுதான்.
 தூங்கா நகரின் ஒரு காலகட்டத்தின் யாராலும் தீட்டப் படாத சித்திரம் இது வாசித்துப் பாருங்கள்.

 புதிய அனுபவங்களை 
RP ராஜநாயஹத்துடன் சேர்ந்து நீங்களும் பெறுவீர்கள்."

நூல்கள் கிடைக்குமிடம் 

ஜெய்கிரி பதிப்பகம்.


Jan 29, 2025

வேடிக்க - 31

வேடிக்க - 31
- R.P. ராஜநாயஹம் 
திருச்சி ரோட்டரி கிளப்பில் Chief guest ஆக கலந்து கொள்ள போன போது, ரயில் பயணத்தின் போது 
டெல்லி குருமூர்த்தியை சந்தித்தேன். காலையில் பெசண்ட் நகர் எலியட்ஸ் பீச்சில் பார்க்கும் வாய்ப்பு.
டெல்லி ஆல் இண்டியா ரேடியோவில் production executive ஆக பணியாற்றி ஓய்வு பெற்றவர். பெருமைக்குரிய அனுபவங்களுக்கு சொந்தக்காரர்.
முன்னதாக டெல்லி வானொலி Announcer cum Senior Translater.

தன் வேலை பற்றி குருமூர்த்தி:
"Translator cum announcer and incharge of Tamil unit, வெளிநாட்டு சேவை பிரிவு  தில்லி"

டெல்லி வானொலி பணி பற்றி குரு மூர்த்தி "நான் மூத்த மொழிபெயர்ப்பாளர் மற்றும் அறிவிப்பாளராக   பணிபுரிந்தேன். இருபது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் பிரிவின் நிகழ்ச்சி பொறுப்பாளராக இருந்தேன்." 

Translator cum announcer and incharge of Tamil unit, வெளிநாட்டு சேவை பிரிவு  தில்லி.

அபூர்வ மனிதர் A.R. ராஜாமணி பற்றி..
ஆரம்ப காலங்களில் ராஜாமணி ராமானுஜ மெஸ்ஸில் தான் இருந்ததாக குருமூர்த்தியிடம் குறிப்பிட்டாராம். போஸ்டல் அட்ரஸ் ராமானுஜர் மெஸ் தான்.

சாகித்ய அகாதமிக்காக திருலோக சீதாராம் குறித்த நூலை ராஜாமணி எழுதியுள்ளார்.

டெல்லி எழுத்தாளர் சங்கத்தை தனி மனிதனாக நடத்திய இலக்கியவாதி.
க.நா.சு, செ.ரவீந்திரனுக்கெல்லாம் ராஜாமணி நெருக்கமான நண்பர். பெண்ணேஸ்வரனோடும் நல்ல பரிச்சயம்.

ராஜாமணிக்கு புரவலர் செ.ரவீந்திரன்.

ராஜாமணி பிரம்மச்சாரி. நிரந்தர வருவாய் எதுவும் இல்லாத நிலையில் வாழ்நாள் முழுவதும் இலக்கிய சேவையே மூச்சாக கொண்டிருந்த உத்தமர்.

தமிழ் பத்திரிகைகளில் டெல்லி விஷயங்கள் எழுதியிருக்கிறார்.

சென்னை வந்தால் ந. முத்துசாமி கூத்துப்பட்டறையில் தங்குவார்.

ராஜாமணி டெல்லி எழுத்தாளர் சங்கத்தை வைத்து எழுத்தாளர் மாநாடு நடத்தியவர்.

ஜெயகாந்தன் டெல்லி வந்த போது ராஜாமணியை சுட்டிச் சொன்னார் 
"அவனக்கூப்புடு. 
என் ஃப்ரண்டு ராஜாமணி"

A.R. ராஜாமணி பற்றி 
அற்புத மொழிபெயர்ப்பாளர் ஷாஜகான் கூறுகிறார்
 "ராஜாமணி நல்ல வாசகர். தில்லியில் நடந்த இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு தவறாமல் வருகை தருவார்.  நிகழ்ச்சிகளைப் பற்றி பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்பினாரே தவிர, நல்ல எழுத்தாளர் என்று சொல்ல இயலாது. குழு மனப்பான்மைக்கு ஆளாகாதவர் என்பதால், எல்லாருக்கும் நல்லவர். 

மொழிபெயர்ப்பு என்ற விஷயத்தில், மூலத்துக்கு நேர்மையாக இருப்பது என்பதைவிட, மூலத்தைப் படித்துவிட்டு, சொந்தமாக அடித்து ஆடுவது அவர் வழக்கம்.

ராமானுஜம் மெஸ் முகவரிதானே தவிர, அவர் தங்கியது அங்கு அல்ல. கரோல்பாக்கில் ஒரு வீட்டின் மாடிப்படிக்குக் கீழே ஓர் அறையில். 

கடைசி காலத்தில் குருமூர்த்திதான் ராஜாமணிக்குப் புரவலர்."

....