ஹரிராம் சேட் கடுவாப்புலியை சிவாஜி கணேசனுடன் சேர்ந்து வேட்டையாடினாராம்.
ம்..வாழ்ந்துருக்காங்க.
"கடுவாப்புலிக்கு காலைக்கோட்டான் எதிரி"ன்னு சொலவட.
காலைக்கோட்டான் பறவை.
கடுவாப்புலி இரையில வாய் வக்குறப்ப காலக்கோட்டான் குரல் கேட்டுச்சின்னா கொடூரமான கடுவாப்புலி பதறி இரைய விட்டுட்டு பயந்து ஓடியே போயிடுமாம். விசித்திரம்.
சுள்ளான் டேவிட் சண்டியரு கோலியாத்த சாச்சிப்பட்டான்.
அறுவது வருஷத்துக்கு முன்ன மதுரையில
பத்து வயசு சுள்ளான்
சண்டியரு சக்கரத்தேவர
பொசுக்குன்னு
கத்திய 'சக்'னு அல்லையில சொருகிட்டான்.
காலக்கோட்டான் சமாச்சாரம் வேற. கடுவாப்புலி இதோட குரலுக்கு பயப்பிடும்னு கூடத் தெரியாது.
கடுவாப்புலிக்கிட்ட மாட்டிக்கிட்ட மானையோ, முயலையோ காப்பாத்துற நோக்கமெல்லாம் கெடயாது. அது இயல்பா சாதாரணமாகத்தான் குரல் கொடுக்குது. கடுவாப்புலி பெரிய ஆபத்துன்னு மெரண்டு போய், செரமப்பட்டு வெரட்டிப்பிடிச்ச மான விட்டுட்டு ஓடுது. காலக்கோட்டான கடுவாப்புலி பாக்கறதும் இல்ல. பாத்ததில்ல. ஆனா அதோட குரல கேக்க
பயமாருக்கு.
The better part of valor is discretion.
- Shakespeare
எரயே வேணாம். இப்போதக்கி தப்பிச்சாகனும்.
கடுவாப்புலிங்கறது புலியா?
கழுதப்புலியா?
காலைக்கோட்டான் ஆந்தையா? ஆந்தை மாதிரி இன்னொரு பறவையா?
Comments
Chandhra Mouli S :
காலைக் கோட்டான் ஒரு வகை ஆந்தையாம். மனித நடமாட்டம் இல்லாத அடர்வனத்தில் வசிக்குமாம். அதன் குரல் பதிவு இல்லை
Guna Seelan K :
கடுவாப்புலி என்பது சிறுத்தைபுலி. அதுதான் சத்தம் கேட்டால் பயப்படும். கோட்டான் என்பது ஆந்தையின் இன்னொரு வகை. காலைக்கோட்டான் என்பது தனிப்பறவை அல்ல. அது கூகைதான் கோட்டான் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. ஆந்தை என்பது சிறிதாய் இருக்கும். கோட்டான் கொஞ்சம் பெரிதாக இருக்கும்.
Tamilselvan Siva : மலையாளத்துல புலிய கடுவான்னு சொல்லுவாங்க…
கோட்டான் கூகை =barn owl .
Interestingly when you search further
கடுவாய் (Hyena; hyaena hyaena):
பாலூட்டிகளிலே பற்களின் அழுத்தம் 800 கிலோகிராம் செலுத்தும் தன்மை உள்ளவை ஹைனா என்னும் கடுவாய் விலங்குகள் தாம். 1100 psi (pounds per square inch) pressure are exerted to break the bones of dead animals' carcasses. எனவே, கழுதைப்புலிகளுக்குப் பழம்பெயர் கடுவாய் என்பதாகும். இவை பட்டியில் இருக்கும் ஆடு மாடுகளை வேட்டையாட வரும் போது கோட்டான் (barn owl) கத்தும் எனக்கொள்ளலாம்…
Vijai Pandian :
கடுக்கா புலி ... சிறுத்தை புலி ஆந்தை பெரிய உருவத்தில் இருப்பது... கோட்டான்..
அதாவது மனிதர்கள் மற்றும் பெரிய உருவம் கொண்ட உயிரினம் வந்தால் மேல் பகுதியில் இருந்து தனக்காக சத்தமிடும் அந்த சத்தம் சிறு புலிக்கு ஆபத்து என உணர்ந்து ஓடும் ...
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.