Share

Oct 11, 2025

God's own country

மலையாளம் தாய்மொழியாகக் கொண்ட இரண்டு பெரியவர்கள். இருவருக்கும் 
 75 வயதிருக்கும்.

ஒருவர் சென்னை பச்சையப்பாஸ்ஸில் தான் படித்தவர். 

மற்றவர் மம்முட்டி ரசிகர். 
அன்று சென்னையில் மம்முட்டி வீட்டிலும் மகன் துல்ஹர் சல்மான் வீட்டிலும் வருமான வரி சோதனை. 
ரயிலில் ராஜநாயஹம் Otto T. Shirtல்.

மந்தைவெளி டவுசர் கடை, எல்டாம்ஸ் ரோட் Samco பற்றியெல்லாம் பேசினார்கள்.

ஒருவருடைய பாட்டி அப்பாவுக்கு சொத்து கொடுக்காமல் பேரனான இவருக்கு சொத்தை கொடுக்க விரும்பி கேரளாவில் சொந்த ஊருக்கு வந்து விடச்சொல்லி வரச்சொல்லி, இளமையில் இவரும் போயிருக்கிறார்.
ஆறு மாதத்தில் இவர் தன் பாட்டியிடம் 
 " உன் சொத்தே எனக்கு வேண்டவே வேண்டாம். நான் இங்கே இருக்கவே மாட்டேன்" என்று மலையாள மொழியில் சொல்லி விட்டு மெட்ராஸ் வந்து விட்டாராம்.
ஏன்?
அந்த ஜனங்கள் பிடிக்கவில்லை. 
நல்லவர்கள் இல்லை.
God's own country but
 Devil's own people.

அதோடு கேரளாவில் ரொம்ப stray dogs.

கேரளாவில் இப்போதும் பிடித்தவை
1.பச்சை பசேல் பசுமை அழகு.
2. அந்த தண்ணீர் Sweet water.

மம்முட்டி ரசிகரான மற்றவர் சொல்கிறார்.
God's own country gone to dogs.

ஆவடியில் இறங்கினார்கள்.

மோகன்லால் அந்திம காலத்தில் கேரளாவில் இருந்து வெளியேற விரும்புவது,
கமல்ஹாசன் கடைசி காலத்தில் கேரளாவுக்கு போக விரும்புவது..

Taste differs.
One man's food is another man's poison 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.