பாக்யராஜ் தோட்டத்தில் நல்ல கிணறு.
பாக்யராஜ் சார் தன் உதவியாளர்கள், கதை இலாகாவினருடன் அவ்வப்போது தோட்டத்திற்கு கதை டிஸ்கஸனுக்காக சென்னையில் இருந்து தோட்டத்திற்கு வருவதுண்டு.
தோட்டத்தில் டைரக்டர் நடந்து வரும்போது கிணற்றில் பேச்சு சப்தம்.
எட்டிப்பார்க்கிறார்.
உள்ளே அந்த நேர உதவி இயக்குநர்கள் படிகளில் அமர்ந்து இருக்கிறார்கள்.
வி. சேகர் எதிர் காலத்தில் தான் இயக்குநர் ஆகும் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் எடுக்க ஆசைப்படும் திரைப்படத்தின் கதையை பாக்யராஜின் மற்ற அசிஸ்டெண்ட் டைரக்டர்களுடன் விலாவரியாக விவரித்து விவாதித்துக் கொண்டு..
மேலிருந்து டைரக்டர் பாக்யராஜ் " டேய், இப்ப நான் எடுக்கிற "இது நம்ம ஆளு" படத்து கதையையும் மறந்துடாம கொஞ்சம் பாருங்கடா. "
'ராசுக்குட்டி' படத்திற்காக ஐஸ்வர்யாவுடன் தோட்டக்கிணற்றில் ஷூட்டிங் நடந்த போது இந்த கிணற்று டிஸ்கசன் பற்றி கேள்விப்பட்டேன்.
இப்போது 2024ல் பாக்யராஜ் சாரை
32 ஆண்டுகளுக்கு பின்னர்
ராஜநாயஹம் சந்தித்த சமயங்களில்
இதையெல்லாம் அவரிடம் நினைவு கூர்ந்து பேசியதுண்டு.
வி. சேகரை பார்த்ததே கிடையாது.
இவருடன் மட்டுமல்ல.
பாண்டியராஜன், பார்த்திபன், ஜி.எம். குமார், லிவிங்ஸ்டன் ஆகியோருடனும் அறிமுகமெல்லாம் கிடையாது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.