Share

Aug 22, 2019

காளியும் அஞ்சலியும்

கே.ராஜேஸ்வர் நேற்று செல் பேசியில் பிறந்த நாள் வாழ்த்து சொன்னார்.

                                                              'முள்ளும் மலரும்' காளி எதற்கு தன் தங்கையின் காதலுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்? நல்ல வேலையில் இருக்கிற ஒரு டீசன்ட்டான நல்ல குண நலன் கொண்ட மாப்பிள்ளை தானே தங்கை காதலிக்கும் மனிதன். அவரை மாதிரி ஒரு நல்ல மாப்பிள்ளையை வேண்டாம் என்பதில் என்ன லாஜிக் இருக்கிறது? காளி மாதிரி ஒரு இன்னொரு கெட்ட பய தான் தங்கைக்கு கணவனாக வர வேண்டுமா?' அற்புதமான கேள்வி எழுப்பினார் ராஜேஸ்வர்.                                                   

இப்படி எனக்கும் கூட 'அஞ்சலி' படம் பற்றி ஒரு கேள்வி உண்டு.   'எந்த அப்பார்ட்மெண்ட்டிலாவது குடியிருப்பவர்கள் ஒரு இரண்டு மூன்று வயதான குழந்தையைப் பார்த்து முகம் சுளித்து 'இந்த குழந்தையால் எங்கள் பிள்ளைகளுக்கு பாதிப்பு நேரும்' என்று புகார் செய்வார்களா? இப்படி ஒரு ஈனத்தனமான ஒவ்வாமை மற்ற பெற்றோர்களுக்கு    வருமா? '

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.