Share

Aug 4, 2019

What angel shall bless this unworthy husband?


வீட்டின் ஃப்ரன்ச் விண்டோவை ஒட்டியுள்ள பாதாம் மரத்தில் அண்டங்காக்கைகள் பெருகிவிட்டன. ந.முத்துசாமி இறப்புக்குப் பிறகு வந்த ஜோடி நிறைய பெருக்கம் செய்திருக்கிறது.
வாதாம் மரத்தை ஒட்டியுள்ள கார்ப்பரேஷன் பள்ளிக்கு முன் பகுதியில் கோவில். அருகிலேயே தான் பக்தர்கள் குடியிருக்கிறார்கள்.
ஆகஸ்ட் முதல் வார ஞாயிறு காது கிழிகிறபடி மிக கர்ண கடூர சத்தத்தில் பக்தி பாடல்கள். சமயபுரம் மாரியம்மா பாட்டிற்கு prelude ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும் பாடலுக்கு வரும் ஆரம்ப இசை போலவே இருக்கிறது. அப்பட்டமான காப்பி. சரி பழனி பாடல் போல என எண்ணும்போது எல்.ஆர் ஈஸ்வரி ’சமயபுரம் மாரியம்மா’ என்று கூப்பாடு.
கோவிலில் மொட்டை போட்டு கிடா வெட்டி விருந்து, படையல் வழிபாடு.
மதிய விருந்து முடிந்த நேரத்தில் சாமியானா பந்தலில் புது மொட்டையான ஒரு ஆளை அவன் பொஞ்சாதி ஒரு சேரை தூக்கி தலையிலேயே சாத்து சாத்து என்று சாத்தி விட்டாள். 
Her anger, the wrath of a woman, is a sign there are somethings in this world that even the gods would dare not intervene
- Daniel Saint.

அன்றலர்ந்த புது மொட்டையில் ரத்தம் வழிகிறது.

What angel shall bless this unworthy husband? என்பார் ஷேக்ஸ்பியர்.
அவன் தலையை தடவி பார்க்கிறான். ரத்தம். வாட்டர் கேனை அப்படியே தூக்கி தலையில் ஊற்றி பெருகும் ரத்தத்தை கழுவுகிறான். தண்ணீர் தான் காலி.
பொஞ்சாதி பக்கத்தில் இருக்கும் வீட்டை நோக்கி ஓடுகிறாள். பத்து குடித்தனம் இருக்கும் சின்ன கட்டிடம். பொந்து பொந்தாய் வீடுகள். அந்த வீடுகளில் தான் இந்த கோவில் பக்தர்கள்.
ரத்தம் சொட்டும் தலையுடன் பக்கத்தில் திகைத்துப்போய் நிற்கும் தன் இரண்டு வயது பெண் குழைந்தையை தூக்கிக்கொள்கிறான். அந்த குழந்தையும் அன்றலர்ந்த மொட்டை தான். வீட்டை நோக்கி பெண்டாட்டியை விரட்டிக்கொண்டே ஓடுகிறான்.
குழந்தை இவன் தலையில் ரத்தம் வடிவதைப்பார்த்து தொடுகிறது. பாப்பா கையிலும் இப்போது ரத்தம் ஒட்டிக்கொள்கிறது. அதை தகப்பனுக்கு காட்டுகிறது.
வீட்டிற்கு சின்ன காம்பவுண்ட் சுவரில் ஏற ஒரு மர ஏணி. அதில் ஏறி விட்ட மனைவியை நெருங்கி கையை ஓங்கும்போது மனைவி விறுவிறுவென்று ஏறி அந்தப்பக்கம் குதித்து விட்டாள். இவன் ஏணியில் ஏறும் போது குழந்தை தவறி விழப்பார்க்கிறது. அங்கே நின்று கொண்டிருந்த பெண் ஒருவர் பிடித்து இறக்கி விடுகிறார். மற்றொரு பெண் இவனை பொஞ்சாதியை அடிக்க விடாமல் தடுக்கிறார்.
சிலையாய் நிற்கும் அவனிடம் தலையில் ரத்தம் வடிவதை சமிக்ஞையால் மீண்டும் அந்த பாப்பா தன் தலை தொட்டு தொட்டு காட்டுகிறது.
”I know the devil himself will not eat a woman. I know that a woman is a dish for the gods, if the devil dress her not. But, truly, these same devils do the gods great harm in their women, for in every ten that they make, the devils mar five.”
- Shakespeare in Antony and Cleopatra.







No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.