Share

Sep 29, 2017

To be stuck within a traffic jam


காலை நேரம் பத்து மணியிருக்கும்.

ஆலப்பாக்கத்திலிருந்து ஆற்காட் ரோடு வழியாக கூத்துப்பட்டறை போக ஸ்கூட்டரில் கிளம்புகிறேன்.


சீமான், திருமாவளவன் இருவரும் விளம்பரத்திற்காக ரொம்ப செலவழிக்கிறார்கள். பெரும் பணக்காரர்கள் போல. சென்னையை இவர்களின் போஸ்டர்களும் பேனர்களும், சுவர் விளம்பரங்களும் ரொம்ப ஆக்கிரமிக்கின்றன. இருவரும் தங்கள் தலைமையை மக்கள் ஏற்க வேண்டும் என பலமாக நிர்ப்பந்திக்கிறார்கள்.

டாஸ்மாக் சரக்குகள் முழுமையாக ஏற்றப்பட்ட வேன். ஒரு இளைஞன் அடுக்கப்பட்ட அட்டைப்பெட்டிகள் இடையே நெருக்கடியான இடத்தில் விழுந்து விடுவது போல சிரமப்பட்டு தன்னை திணித்துக்கொண்டு அமர்ந்திருக்கிறான். ஒரு ப்ரேக் போட்டால் கீழே விழுந்து ஆற்காட் ரோட் ட்ராஃபிக்கில் சட்னியாகி விடுவான். இந்த நிலையில் அவன் நல்ல தூக்கம். தலையை ஆட்டி ஆட்டி சொக்கி சொக்கி சட்டென்று விழிக்கிறான். Existential Choice.
அந்த வேன் பின்னால் ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்த நான் நிம்மதியிழந்து விட்ட நிலை...
அவனிடம் சிக்னலில் போக்குவரத்து நிற்க நேர்ந்த போது சற்று சத்தமாக சொன்னேன்.
 “ தூங்காதப்பா”. சட்டென்று கண் விழித்து என்னைப்பார்த்து புன்னகைத்து தலையசைக்கிறான். வேன் ஸ்ரீதேவி குப்பம் சாலையில் மெதுவாக திரும்புகிறது. கவனமாக இரு என்று சைகையில் கையசைக்கிறேன். அவன் மீண்டும் என்னைப்பார்த்து சிரிக்கிறான். ஏழையின் சிரிப்பு.

அடுத்த சிக்னலில் நிற்க நேரும்போது ஒரு ஆட்டோ வலது புற ரோட்டில் இருந்து ஆற்காட் ரோட்டில் திரும்ப வேண்டி நிற்கிறது. அதனுள்ளே ஒரு பள்ளிக்கூட குழந்தை. தன் தாயுடன். இரண்டாம் வகுப்போ மூன்றாவது வகுப்போ? பாரத மாதா மேக் அப். பள்ளியில் ஏதோ விழா போல. அந்த குழந்தையைப் பார்த்து கண்ணை அகட்டி சிரித்து என் மகிழ்ச்சியை காட்டுகிறேன். வெட்கத்துடன் என்னைப் பார்த்து வாய் அகல சிரிக்கிறது. சிக்னல் போட்டவுடன் அதைப்பார்த்து கையை ஆட்டி கட்டை விரலை உயர்த்துகிறேன். கலக்கப்போற! வெட்கத்துடன் சிரித்து தலையை ஆட்டுகிறது. 
Beads of sweat trickled down alongside the cheek–plate of my helmet.

Persona என்ற இங்க்மார் பெர்க்மன் படத்தில் ஒரு வசனம்.“ Life is trickled in everywhere and you are forced to react.”

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.