Share

Sep 20, 2017

Poetry and Polytricks


மொழிபெயர்ப்பின் மொழிபெயர்ப்பு தானே
முற்றான கவிதை 
- தேவ தேவன்
நீர் நிலைகளைகளத்தேடி ஆயிரக்கணக்கான மைல்கல் நாடு விட்டு நாடு பயணிக்கும். வேடந்தாங்கல் வரும் பறவைகள்.
அற்ற குளத்துப்பறவை
நீர் நிலை வற்றி வறண்டு விட்டால் பறவைகள் வராது நீங்கி விடும்.
மாலதி மைத்ரி கவிதையொன்றில் ஒரு கொக்கு வந்திருக்கிறது.
“ தன் நினைவில் மீன்கள் நீந்த
நீரற்ற நதிக்கரையில்
காத்திருக்கிறது கொக்கு”

ஏன் நீரற்ற நதிக்கரையில் கொக்கு காத்திருக்க வேண்டுமோ?
மாடப்புறா கூடு கட்டாது.கூடு கட்டும் நிலைக்கு தள்ளப்பட்ட நிர்ப்பந்தம் மாடப்புறாவுக்கு என்பதாக கண்ணதாசன் எழுதிய பாடல்’கோட்டையிலே ஒரு ஆலமரம், அதில் கூடு கட்டும் ஒரு மாடப்புறா”

………………..



’யானைக்கு ஒரு தோட்டா நெத்தியிலே’
18 எம்.எல்.ஏக்களை நீக்கிய சபாநாயகர். சசிகலா கும்பல் அம்பேல்?
பன்னீருக்கு துணை முதல்வர் பதவி
’வெள்ளரிப்பழத்துக்கு பூண் ?’
எடப்பாடி – பன்னீர்
எடப்பாடி புளியங்காய்
பன்னீர் எலுமிச்சை
’அதுக்கு இது நீளந்தான். புளிப்புல அவுங்க அப்பன் தான்.’
ரெண்டு பேருக்கும் பெரிசா பேச்சு வார்த்தயெல்லாம் இல்லையாமே.
’கடுவாப்புலிக்கு காளைக்கோட்டான் எதிரி.’


ஒரு எம்.ஜி.ஆர், ஒரு ஜெயலலிதா என்று இருந்த காலம் போய், எடப்பாடி, பன்னீர், ’ஜெயக்குமார திண்டுக்கல் சீனிவாச ஓ.எஸ். மணியம்’, சசிகலா, தினகரன், திவாகரன்,
தீபா, ( தீபா கட்சியும் புருஷன் மாதவன் கட்சியும் இணைந்து விட்டதாமே.) என்று பல பாத்திகள் இன்று.
பல பேர் அதிமுகவிற்கு மானசீக பொறுப்பு வகிக்கிற சூழல். அல்லது பல அண்ணாதிமுக.
’அரண்மனைக்கு ஆயிரம் பாத்தின்னா தோட்டக்காரன் பொறுப்பாவானா?’
தோட்டக்காரன் என்று யாரை சொல்ல முடியும் இங்கு?
…………………………………

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.