Share

Feb 23, 2017

இன்றைய அரசியல் - நேற்றைய இலக்கிய அரசியல்


சில நாட்களுக்கு முன் தமிழக காங்கிரஸ் தலைவர் அப்பர்... ச்சே....சுந்தரரா..சம்பந்தரா.. இல்ல..இல்ல... திருநாவுக்கரசர்
ஒரு பெரிய சந்தேகத்திற்கு விடை சொன்னார்.
”டி.டி.வி தினகரனை அதிமுக துனணைப் பொதுச்செயலாளராக்கியதில் சசிகலாவின் குடும்பத்தலையீடு இல்லை”
”நண்டு வளையில நானும் தான் இருக்கேன்”னு என்ன ஒரு சீர்த்தன்மையோடு மூக்கை நுழைத்து சொன்னார்!
திருவிளையாடல் தருமி : ” ”ஐயோ! ஐயோ! ஆயிரம் பொன்னாச்சே! எனக்கு கிடையாது.. எனக்கு கிடையாது...வேற எவனோ...வேற எவனோ அடிச்சிட்டுப் போகப்போறான்...”
வைகோ, திருநாவுக்கரசர் இருவருமே அதிமுக விற்கு செய்யும் சேவை பற்றி நினைக்கும் போது தியாகப்பிரம்மத்தின் பிலஹரி ராக கீர்த்தனை தான் நினைவுக்கு வருகிறது.
“ தொரகுணா இட்டுவண்டி சேவா”
........................................

இலக்கியம் நம்மை எங்கேயும் கொண்டு போய் சேர்க்காது என்பது தனக்கு அப்போது புரிந்ததாக,எப்போதோ ரொம்ப வருடங்களுக்கு முன் ஜெயமோகன் எழுதிய விஷயம் ஒன்று ஞாபகம் வந்தது.
சி.சு செல்லப்பாவை சந்திக்க போனபோது நடந்ததாக.
ஜெயமோகனிடம் கோபத்துடன் செல்லப்பா சொன்னாராம்
“க. நா.சு உடனடியாக கழுவிலே ஏற்றப்பட வேண்டிய தீய சக்தி”
ந.முத்துசாமியிடம் இதை நான் ஒரு உரையாடலின் போது சொன்னேன். செல்லப்பாவின் இயல்பு அவருக்கு நன்கு தெரியுமாதலால் உடனே மிக அழகாக சொன்னார்.
”அவருக்கு தான் கோபமாய் பேசுபவை வெறும் வார்த்தைகளாக இருந்திருக்கிறது.இந்த வார்த்தைகளில் உள்ள ’வயலன்ஸ்’ செல்லப்பாவுக்கு புரியல.”

1 comment:

  1. You're a narcissit. And your language sucks...

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.