Share

Feb 14, 2017

நல்ல தீர்ப்பு


”சக்கரத்தைஎடுப்பதொரு கணம்
தருமம் பாரில் தழைத்தல் மறுகணம் !”
பாரதி ஏங்கினான்.

 நீதி  ஆமை வேகத்தில் நிலை நாட்டப்படும் சோகம்.



சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு மிகப்பெரிய ஆசுவாசத்தை தந்திருக்கிறது! நீதித்துறையின் சுதந்திரத் தன்மை மீது பெரும் நம்பிக்கையும், மரியாதையும் ஏற்பட்டு விட்டது.

ஓபிஎஸ் அணி இதற்கு குதூகலிப்பது என்பது Height of IRONY! ஜெயலலிதா குற்றவாளி என்பதை மடையர்கள் கூட மறக்க முடியுமா!

 அதிமுகவில் மன்னார்குடி குடும்பப் பிடி தளர்ந்து விட்டது(?!) என்றே  நம்பி
('அதிசயம்’ என்பதன் இயல்பே அது ‘ரொம்ப அபூர்வம்)’ சந்தோஷப்படும் மக்களே!
வெட்ட வெட்ட சிந்தும் ரத்தத்தில் இருந்து துளிர்க்கும் ராட்சஸர்கள் மன்னார்குடி கூட்டம்! 

 தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., தே.மு.தி.க கட்சிகளில் குடும்பப்பிடி தளர வாய்ப்பே கிடையாது தெரியுமா?
’குடும்பத்திடம் இருந்து கட்சியை மீட்க வேண்டும்’ – இந்த வார்த்தைகள் அ.தி.மு.க அரசியல் உள் விவகாரம் பற்றி இன்று நொடிக்கு நொடி உரக்க பேசப்படுகிறது. 
ஆனால் இந்த உச்சாடனம்
தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., தே.மு.தி.க ஆகிய கட்சிகளுக்கு சிலாக்கியமானதாக, உவப்பானதாக ரசிக்கும்படியானதாக இல்லாமல் தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்.


இடைத்தேர்தல் தான் முடிவு என்பதை இரண்டு நாட்களுக்கு முன் நான் சொல்லி விட்டேன்.
பெங்களூர் கீழ் கோர்ட் நீதிபதியாயிருந்த மைக்கல் குன்ஹா ஒரு மஹான்!

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,




...........................................

1 comment:

  1. அற்புதமான அலசல்!

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.