Share

Feb 6, 2017

சிறு பத்திரிக்கை சின்னத்தனம்



பெசண்ட் நகர் ஸ்பேஸசில் ஓவியர், சிற்பி சி.தக்ஷிணாமூர்த்திக்கு நினைவு நிகழ்ச்சி. கே.எம்.ஆதிமூலம் ஃபௌண்டேசன் நடத்திய கூட்டம்.
ஓவியர் நடேஷுடன் போயிருந்தேன்.

டீ ப்ரேக்கில் ஒரு சிறு பத்திரிக்கை ஆசிரியர் தன் பத்திரிக்கையை நீட்டினார். பணக்கஷ்டம், சிரமம் பற்றி சற்றும் யோசிக்காமல் ஒரு பத்திரிக்கை பிரதியை உடனே பணம் கொடுத்து வாங்கினேன். என்னுடன் வந்த மு. நடேஷிடம் ஒன்றை நீட்டினார். நான் “ அவருக்கு நான் இந்த பிரதியையே கொடுத்துக்கொள்கிறேன்.” என்று அந்த பத்திரிக்கை ஆசிரியரிடம் சொன்னேன். வியாபாரத்தை கெடுக்கிறானே என்று நினைத்தாரோ என்னவோ? கொஞ்ச நேரத்தில் என்னிடம் வந்து கேட்டார் “ நீங்க சந்தா கட்டிட்டீங்களா?”
நான் பதிலே சொல்லாமல் ’இல்லை’ என்பதாகவும் ’மாட்டேன்’ என்பதாகவும் தலையாட்டி நகர்ந்தேன்.

கூட்டம் முடிந்தவுடன் மீண்டும் வந்து கேட்டார்“ உங்களுக்கு ஒரு பிரதி போதுமா? இன்னொன்று வாங்கிக்கொள்கிறீர்களா?”

…………................................



பல வருடங்களுக்கு முன் ஒரு பத்திரிக்கை ஆரம்பிக்க இருப்பதாக சொல்லி என்னிடம் ஒருவர் தலையை சொறிந்தார். காலாண்டிதழ். உடனே ஒரு நல்ல தொகை கொடுத்தேன். அப்புறம் அந்த இதழ் வெளி வந்த விஷயம் எனக்கு தெரிய வந்தது. எனக்கு பத்திரிக்கை அனுப்பி வைக்கவில்லையே என்பதை அவருக்கு நினைவு படுத்தினேன்.
உடனே அந்த எழுத்தாளர் பதில் : ’ராஜநாயஹம்! நீங்கள் பத்திரிக்கைக்காக கொடுத்தது நன்கொடை! சந்தா அல்ல.’
அரை மனதாக எனக்கு இதழை அனுப்பி வைத்தார். ஏதோ சட்ட விரோதமாக எனக்கு உதவுவது போல. இப்போது அவர் பெரிய பிரமுகர்.
.........................................

http://rprajanayahem.blogspot.in/…/paradise-will-be-kind-of…

 http://rprajanayahem.blogspot.in/2012/08/blog-post.html

http://rprajanayahem.blogspot.in/2016/11/blog-post_30.html

http://rprajanayahem.blogspot.in/…/not-every-friendship-is-…

1 comment:

  1. எங்க போனாலும் புன்னகை மன்னன் (இ.வா) ஆக்கிடறாங்களே! என்ன பண்ணறது, ஜாதகம் அப்படி!

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.