Share

Feb 17, 2017

பிப்ரவரி 18

1972ல் அக்டோபர் 10ம்தேதி எம்.ஜி.ஆர் வெளியேற்றப்பட்ட போது கருணாநிதியிடம் தான் எம்.எல்.ஏக்கள்.
எட்மண்ட், காளிமுத்து போல இரண்டு மூன்று எம்.எல்.ஏக்கள் எம்.ஜி.ஆரிடம் வந்தார்கள்.
ஐம்பெரும் தலைவர்களில் ஒருவரான சபாநாயகர் ‘மேதை’ மதியழகன் அப்போது எம்.ஜி.ஆர் ஆதரவாளர்! சபாநாயகர்
இப்படி செய்த அதிசயம் அன்று மிக அபூர்வ நிகழ்வு தான்.
டிசம்பர் 2ம் தேதி தமிழக சட்டசபை ஒரு விசித்திர சரித்திர நிகழ்வைப் பார்த்தது.
சபாநாயகர் மதியழகன் சபையை கொண்டு செலுத்த முயன்ற போது உதவி சபாநாயகர் விருதுநகர் பெ.சீனிவாசன் ப்ரமோஷனில் நான் தான் சபா நாயகர் என்று அவரும் சபையை மு.கருணாநிதிக்கு சாதகமாக நடத்த ஆரம்பித்தார். மதியழகன் செய்ததையெல்லாம் சீனிவாசன் நிராகரித்தார். சீனிவாசன் செய்ததையெல்லாம் மதியழகன் புறந்தள்ளினார். குழப்பம் மிகுந்த நிலையில் மதியழகன் சபையை ஒத்தி வைத்து விட்டு சட்டசபையிலிருந்து வெளியேறினார். உடனே முதல்வர் கருணாநிதி ஒரு தீர்மானத்தை நெடுஞ்செழியனை கொண்டு வரச்செய்து சபாநாயகர் பதவியிலிருந்து நீக்கி விட்டார். தற்காலிக சபாநாயகராக சீனிவாசன் ஆக்கப்பட்டார்.
அமளியில் எம்.ஜி.ஆர் மீது செருப்பு வீச்சு.
எம்.ஜி.ஆரின் பிரபலமான வசனம் “ சட்டசபை செத்து விட்டது.”
இந்த விஷயம் செய்தித்தாள்களுக்கு நல்ல தீனி!



எம்.ஜி.ஆர் மறைந்த பின் முதலமைச்சர் ஆக்கப்பட்ட ஜானகியிடம் தான் பெரும்பாலான எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களும்.( 98 ேர? 96 ?) 
1988ஜனவரி 28ம்தேதி சட்டசபையில் பி.ஹெச்.பாண்டியன் அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை வெற்றி பெறச்செய்ய எதிரணி எம்.எல்.ஏக்களை டிஸ்மிஸ் செய்தார். தீர்மானத்தை கவனிக்காமல் சபையை ஒத்தி வைத்தார். Sky is my limit!
அன்று சட்டசபை அதிமுக எம்.எல்.ஏக்கள் அடிதடி. மைக்கை கழட்டி அடித்தவர்கள் உண்டு.
சட்டசபையில் வால்டர் தேவாரம் நுழைந்து, காவல் துறை எம்.எல்.ஏக்கள் மீதே லத்தி சார்ஜ்!
 அன்று ஒரு ஜானகி அணி எம்.எல்.ஏ. சட்டசபையில் பலரை மைக்கால் பதம் பார்த்து விட்டு வேறு யாராவது சிக்குகிறார்களா என்று மைக்கோடு நடக்கிற காட்சி புகைப்படமாக பத்திரிக்கையில் சந்தி சிரித்தது.


காலம் இந்த 2017 பிப்ரவரி 18ந்தேதி சட்டசபையில் எந்த குருஷேத்திரத்தை நிகழ்த்த இருக்கிறதோ?

எம்.எல்.ஏ பென்ஷன் விஷயம் கூட இதில் முக்கிய இடம் பெற்றிருக்கிறது. ஒன்றரை வருடம் முடிவதற்குள் சட்டசபை கலைக்கப்பட்டால் பென்ஷன் கிடைக்காதாமே!

நாகரீகமான சபையை காண வாய்த்தால் சந்தோஷப்படலாம்.

தி.மு.கவும் காங்கிரஸும் எடப்பாடிக்கு எதிராக வாக்கெடுப்பில் நிச்சயம் கலந்து கொள்ள வேண்டும். அப்படி நடக்கும்போது எடப்பாடி அணியில் சிலர் மனம் மாற வாய்ப்பு இருக்கிறது. அது வாக்கெடுப்பில் சிறப்பான விடை கிடைக்க வழி வகுக்கும்.
அதிசயம் நிகழ்த்தும் ரகசிய வாக்கெடுப்பு அவசியம்.
எடப்பாடிக்கு இடர்பாடு அத்தியாவசியம்!

குருஷேத்ர யுத்தம் 18 நாள். ராம ராவண யுத்தம் 18 மாதம்.
சண்டை போடச்சொல்லி பகவானே போதித்த பகவத் கீதையில்
18 கிரந்தங்கள்.

எண் 18க்கான குறியீட்டு சித்திரம் – நிலவில் இருந்து இரத்தம் வடிகிறது. இந்த ரத்தத்தை குடிப்பதற்கு ஒரு நாயும் ஒரு ஓணாயும் போட்டியிட்டு சண்டையிடுகின்றன.

எடப்பாடி பழனிச்சாமி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் தேதி 18.

A horse! A horse! My Kingdom for a Horse!
- Richard the third
Shakespeare
...............................

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.