Share

Apr 1, 2009

கேள்வி பதில்

கவிஞர் காயாதவன்: திருப்பூரில் உங்கள் பிழைப்பு எப்படி இருக்கிறது ?

R P ராஜநாயஹம் : இதற்கு என் பதில் 'சுகுமாரனின் கவிதையாக' கீழே

இங்கே இருக்கிறேன்

" சிறகுகளுடன் முட்டைக்குள்ளிருப்பது

அசௌகரியம்

யத்தனித்தால் பறக்க க்கிடைக்கும் வெளியோ

கொசுவலைக்குள் அடக்கம்

தைத்த அம்புகளைப்

பிடுங்கி விடுகிறேன் அவ்வப்போதே

ஆனாலும்

வலிகள் இதயத்தின் தசைகளைக் கிழிக்கின்றன "

திருப்பூர் அசோக் : திருப்பூருக்கு வாழ வந்துள்ள லக்ஷோப லட்சம் மக்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

R P ராஜநாயஹம் : தேவ தேவன் கவிதை தான் நினைவிற்கு வருகிறது

" குதித்துக் குதித்துக் குதித்தே

நிதம் சாகின்றன

தூரம் வந்து விட்ட தவளைகள் "

பக்ருதின் (கவிஞர் சுந்தர் அர்னவா ):

R P ராஜநாயஹம் யார் ?

R P ராஜநாயஹம் : ஆத்மாநாம் கவிதை கீழே பாருங்கள் !

" நான் ஒரு ஞானியுமில்லை

நான் ஒரு சித்தனும் இல்லை

பித்தம் பிடித்தும் பிடிக்காத மேதை நான்

படித்தும் படிக்காத புலவன் நான்

வைத்தியம் தெரிந்தும் செய்து கொள்ளா

நோயாளி நான் "

சோமன் பூந்துறை எஸ் தங்கவேல் : தவிப்பு ?

R P ராஜநாயஹம் : பிரமிள் கவிதை வரி ஒன்றை நினைவூட்டுகிறது

"தவிப்பு , நம்பிக்கையின் இனிய துகள்களாய்

சிதறி விழுகிறது "

5 comments:

  1. கசப்பு வாழ்வையும்
    கவிதையினூடெ கடத்தல்

    வாசிப்பின் மொகமும்
    மொழியினில் மேதமையும்

    கெட்டவை விலக
    கொண்டாட்டம் பெறுக


    (எப்படி தல! சுமாராவாது இருக்கா!!!!!!!!!!!!!)

    ReplyDelete
  2. புரியவில்லையே!
    தங்கக் கூண்டிற்குள்ளே இருக்கும் கவிதைபாடும் கிளியா?
    காகமா?
    அநாமதேயன்

    ReplyDelete
  3. என் ப்ளாக்ல கொஞ்சம் கிறுக்கி வெச்சியிருக்கேன்.. all are 2 to 4 liner. Wont take much time.


    கேவலமா இருக்குன்னு நீங்க சொன்னாலும் எனக்கு மகிழ்ச்சியெ
    http://ashokpakkangal.blogspot.com/

    ReplyDelete
  4. வணக்கம்.
    உண்மைத் தமிழன் படிக்கச் சொன்னார்.உங்கள் பதிவுகளை முழுதும் படித்தேன்.ஒவ்வொன்றும் படி தேன்.இனியும் படிப்பேன்.

    சேர்ந்தே இருப்பது வறுமையும் புலமையும் என்று சும்மாவா எழுதினார் ஏ.பி.நாகராஜன்?

    இந்தியா வரும்போது கண்டிப்பாகச் சந்திப்பேன்.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.