ஆந்திரபிரதேசம் .
அச்சையாபேட் கிராமம்.
தகப்பன் பெயர் சின்னப்பை .வயது 55. நடிகர் என்.டி. ராமராவுடைய தீவிர ரசிகர் .
மகன் பெயர் ராஜுபாபு.வயது 23. நடிகர் சிரஞ்சீவியின் தீவிர ரசிகர் .
அப்பா சின்னப்பை ராமராவ் ரசிகர் ஆதலால் தெலுங்கு தேசம் கட்சியின் தீவிர தொண்டர்.
மகன் ராஜுபாபு சிரஞ்சீவியின் 'பிரஜா ராஜ்யம் கட்சி 'யின் தீவிர வெறியர். .
Like Father,Like Son!
இருவருக்கும் தலைமுறை இடைவெளியால் ராமராவ் -சிரஞ்சீவி தனிமனித வழிபாடு காரணமாக அரசியல் வாக்கு வாதங்கள் .
இப்போது தேர்தல் நேரத்தில் ரொம்ப ,ரொம்ப தீவிர விவாதங்கள் !
ஏப்ரல் பதினாறாம் தேதி வாக்குப்பதிவு நாள் .
அந்த வியாழக்கிழமை ராஜுபாபு தன் தகப்பனாரிடம் சிரஞ்சீவி கட்சிக்கு ஓட்டு போட சொல்லி வற்புறுத்துகிறார் . ஆனால் அப்பா சின்னப்பை ராமாராவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஓட்டு போட்டு விடுகிறார் . இதை கண்டு பிடித்து விட்ட மகன் தன் தகப்பனைஅன்றிரவே கத்தியால் குத்தி கொன்று விடுகிறார் . இயற்கையாய் மரணம் ஏற்பட்டது போல நாடகமாடி வெள்ளிக்கிழமை புதைத்து விடுகிறார் .
சனிக்கிழமை குட்டு வெளிப்படுகிறது . கிராமத்தார் சிலர் சந்தேகத்தின் பேரில் சிரஞ்சீவி ரசிகன் ராஜூ பாபுவை விசாரித்து விட்டு போலீசுக்கு தகவல் கொடுக்கிறார்கள் . போலீஸ் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது .
தகப்பனை கொன்ற மகன் .
What is objectionable,what is dangerous about fanatics and extremists is not that they are extreme, but that they are intolerant.
- Robert Kennedy


Welcome back sir